திருச்சிராப்பள்ளி, ஆக.2 - வெறுப்பு அரசியலை வேரறுக்க, அமைதி வழியில் அன்பைப் போதிக்க அனைவரும் முன்வர வேண்டுமென சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில சிறப்புக் கருத்தரங்கு வேண்டு கோள் விடுத்துள்ளது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வின் மாநில சிறப்புக் கருத்தரங்கம் திருச்சி லால் குடியில் புதன்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கிற்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு திருச்சி புறநகர் மாவட்டத் தலை வர் எம்.கே.தங்கராஜ் தலைமை வகித்தார். தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம், கிறிஸ்தவ நல்லிணக்க இயக்க தலைவர் எக்ஸ்.இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ, சிறுபான்மை மக்கள் நலக்குழு பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், லால்குடி அருட்தந்தை ஆர்.பீட்டர் ஆரோக்கியதாஸ், மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல்சமது எம்எல்ஏ, மக்கள் நலக்குழு மாநில துணைச் செயலாளர் வி.கல்யாணசுந்தரம், தமுமுக வடக்கு மாவட்டத் தலைவர் எம்.ஏ.ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
இந்தக் கருத்தரங்கில், தேசமெங்கும் அன் றாடம் சிறுபான்மை முஸ்லீம், கிறிஸ்தவர்கள், ஆதிவாசி மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பெண்கள், சிறுமிகள் தாக்கப்படுவதும், படு கொலை செய்யப்படுவதும், பாலியல் வன்பு ணர்வு செய்யப்படுவதையும் நடைமுறையாக்கி இருக்கிற இந்துத்துவா வெறுப்பு அரசியலை முறியடிப்போம். மக்கள் மத்தியில் அன்பை, மனிதநேயத்தை, ஒற்றுமையை வலியுறுத்தும் நல்லிணக்கத்தை பாதுகாக்க உறுதி ஏற்க முன்வருமாறு அனை த்து பகுதி மக்களையும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு அறைகூவி அழைக்கிறது. இந்திய ஒன்றியத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அரசியல் கட்சியே, மக்கள் மத்தி யில் ஒற்றுமையை குலைத்து, வெறுப்பை விதை த்து கலவரங்கள், படுகொலைகள், சொத்துகள் அழிக்கப்படுவதை எல்லாம் தடுப்பதற்கு பதி லாக வேடிக்கை பார்க்கிற நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம். இந்திய அரசாங்கத்தின் சுயேச்சை அதிகாரம் படைத்த அனைத்து அமைப்புகளும் ஆளும் கட்சியின் கை அசை வுக்கு ஏற்ப இயங்கி தன்னுடைய செயல்பாட்டை கேள்விக் குறியாக்கியுள்ளன. எப்போதாவது சில விஷயங்கள் தலையீடு செய்யும் போது நீதிமன்றத்தையும், நீதிபதிகளை யும் கேவலப்படுத்துகிற, அவமானப்படுத்துகிற, எச்சரிக்கிற காரியங்களை இந்துத்துவா சக்தி கள் செய்யத் துணிந்து வருகின்றன.
பதற்றத்தோடு வாழும் சூழ்நிலை
இந்திய சமூகமே ஒரு கலவர பூமியில் வாழ்வ தைப் போன்ற ஒரு சூழ்நிலை உருவாக்கப் பட்டுள்ளது. குறிப்பாக சிறுபான்மை மக்கள், தாழ்த்தப்பட்ட- பிற்படுத்தப்பட்ட, ஆதிவாசி மக்கள் இரண்டாம் தர பிரஜைகளாக அச்சத் தோடு, பதற்றத்தோடு வாழ்கிற சூழ்நிலை உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மணிப்பூரில் கலவரம் துவங்கிய மூன்று மாதங்களாக இந்த கலவரத்தை முன்வைத்து பேசியவர்கள் எல்லாம் தேச விரோதிகளை போல, அப்படி ஒன்றும் பெரிதாக நடந்து விடவில்லை என ஆளும் கட்சியினரால், ஒன்றிய ஆட்சியாளர்களால் பேசு பொருளாக்கப் பட்டனர். சில தேவாலயங்களை இடிக்கப்பட்டன என்று மட்டுமே சிறுபான்மையினருக்கு எதிரான பிரச்சாரமாக அது முன்னெடுக்கப்பட்டது. சத்தீஸ்கரில் ஒரே நேரத்தில் பல தேவால யங்கள் தாக்கப்பட்டன. அரியானாவில் மாடு வாங்கி வந்தார்கள் எனச் சொல்லி காரிலேயே முஸ்லிம் இளைஞர்கள் தீ வைத்து எரிக்கப் பட்டனர், உத்தரப் பிரதேசத்தில் சிறுபான்மை முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். தேசத்தில் வகுப்புவாத வன்முறை தலைவிரித்தாடுகிறது. முதல் நாள் மும்பை செல்கிற ரயிலின் பல்வேறு பெட்டிகளில் பயணித்த மூன்று இஸ்லாமியர்களை குறிவைத்து, ரயில்வே காவல்துறையைச் சார்ந்த போலீஸ் பணி நேரத்தில் படுகொலை செய்கிறார். மறுநாள் அரியானாவில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி பெற்ற குருகிராம் மாவட்டத்தில் இஸ்லாமிய இளைஞர்களை எரித்துக் கொலை செய்த பசு பாதுகாப்பு குண்டர்களின் படை தலைவன் தலைமையில் ஊர்வலம் சென்று முஸ்லீம் மக்கள் குடியிருப்புகள், வழிபாட்டுத் தலங்கள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. வழி பாட்டுத்தலத்தில் இளம் வயது இமாம் தீ வைத்து கொளுத்தப்படுகிறார். ஒரு அன்றாட நிகழ்வாக முதல் நாள் நடப்பதை விட மறுநாள் மிகப் பயங்கரமாக தாக்குதல் தொடுக்கிற காரியத்தை ஒன்றிய பாஜக அரசாங்கமும், பாஜகவும், ஆர் எஸ் எஸ்-ஆல் வழிநடப்படுகிற பல்வேறு அமைப்புகளும் கலவரங்களை செய்து வருகின்றன.
இந்த கொலைபாதகச் செயல்கள் மூலம் இந்திய மக்கள் மத்தியில் வெறுப்பு அரசியலை வெறியேற்றி வருகின்றனர். இந்திய சமூகம் என்றென்றும் அன்பால் நிரம்பிய சமூகம். இந்த சமூகத்து மக்கள் மத்தியில் அன்பை விதைக்கிற அரசியலமைப்புச் சட்டம் இருக்கிறபோது இந்துத்துவாவின் பிளவுவாத சட்டத்தை நடை முறைப்படுத்த ஒன்றிய ஆட்சியாளர்கள் முயற்சி த்து வருவது தவறானது, கொடுமையானது, கைவிடப்பட வேண்டியது என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வலியுறுத்தி தெரிவித்துக் கொள்கிறது. பல்வேறு இன, மொழி, ஜாதி, மத வேறு பாடுகளை கொண்ட மக்கள் “வேற்றுமையில் ஒற்றுமையாய்” வாழ்ந்து வரும் நமது தேசத் தில் இந்துத்துவா விஷக் கிருமிகளிடமிருந்து அனைத்து பகுதி மக்களையும் பாதுகாக்க வேண் டியது நமது அனைவரின் கடமையாகும். இந்தி யாவில் வெறுப்பு அரசியலை வேரறுக்க வேண்டி யதும் அன்பை விதைக்க வேண்டியதும் நம் முன்னால் உள்ள பிரதான கடமையாகும்.
தினந்தோறும் தாக்குதல்
தினந்தோறும் நடைபெறுகிற முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை போல, ஒவ்வொரு நாளும் இரண்டுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ போத கர்கள், தேவாலயங்கள் தாக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன. ஆண்டொன்றுக்கு 600க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள், நிறுவனங் கள், பிரமுகர்கள் தாக்கப்படுவது கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாக நடைமுறை ஆக்கப் பட்டுள்ளது. ஒரு பக்கம் முஸ்லிம்களை பெரும்பான்மை இந்துக்களுக்கு எதிராக நிறுத்துவது போலவே, சமீப ஆண்டுகளாக கிறிஸ்தவர்களை அவர்க ளின் வழிபாட்டு முறையை எதிர் நிலையிலே நிறுத்தி அரசியல் செய்ய இந்துத்துவா சக்திகள் துடிக்கின்றன. இந்தியாவில் சிறுபான்மை மக்களும், சிறுபான்மை வழிபாட்டுத் தலங்க ளும் தாக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நாம் அனைவரும் இந்தியர்கள் என உரக்கச் சொல்வோம். இந்த தேசத்தின் விடு தலையின் போது கட்டிக்காக்கப்பட்ட மக்கள் ஒற்றுமையை, மத நல்லிணக்கத்தை, மனித நேயத்தை முன்னெடுக்க நாம் அனைவரும் உறுதி ஏற்போம். வெறுப்பு அரசியலை வேரறுக்க, அமைதி வழியில் அன்பை போதிக்க அனைவரும் முன் வர வேண்டும் என கேட்டுக் கொள்வதோடு, தமிழ்நாட்டில் இக் கடமையை நிறைவேற்ற அனைத்து பகுதி மக்களும் இணைந்து குரல் கொடுக்க அணிதிரள வேண்டும் என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு அறைகூவி அழைக்கிறது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
கருத்தரங்கில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் டி.வின்சென்ட், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் டி.ரஜினி காந்த், லால்குடி நகர்மன்ற உறுப்பினர் வி. சாரதா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் எம்.பாலு உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட துணைச் செயலாளர் வி.அலெக்ஸ் வரவேற்றார். முடிவில் புறநகர் மாவட்ட பொருளாளர் ஓ.அப்துல்ரஹ்மான் நன்றி கூறினார்.