சென்னை, பிப்.22- ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதி ராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கு அனுமதியளிக்கக்கூடாது என்று வலியுறுத்தினர்.
நீதிமன்றத் தீர்ப்பு
அனுமதியளித்த நீதிமன்ற உத்தரவை காவல்துறையினர் அமல்படுத்தவில்லை எனக் கூறி ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதி மன்ற தனி நீதிபதி, சுற்றுச்சுவருடன் கூடிய விளையாட்டு மைதானங்களில் அணிவகுப்பு பேரணியை நடத்த உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, ஆர்எஸ்எஸ் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது. மேலும், ஆர்எஸ்எஸ் அமைப்பு திறந்தவெளியில் பேரணி நடத்த காவல்துறை யினர் அனுமதி அளிக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஒழுக்கத்தை கடைப்பிடித்து அமைதியான முறையில், மற்றவர்களுக்கு எந்தவொரு ஊறும் விளை விக்காதவாறு பேரணியை நடத்த வேண்டும். இதற்கு தேவையான பாதுகாப்பை தமிழ் நாட்டில் அரசு வழங்க வேண்டும் என்று உத்தர விட்டிருந்தது.
சிபிஎம் கோரிக்கை
இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதி ராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு நட வடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.
கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: ஆர்எஸ்எஸ் பேரணிக்கு உயர்நீதிமன்றம் விதித்திருந்த கட்டுப்பாடுகளை நீக்கிய இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வின் உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியது. தற்போது தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருப்பது வரவேற்புக்குரியதாகும். மக்களிடையே வெறுப்பினை பரப்பி, மோதலை உருவாக்கும் சக்திகளை ஜன நாயக இயக்கங்களைப் போல கருத முடி யாது. வெறுப்பு அரசியலையே தனது திட்ட மாக வைத்துள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கடந்த கால, தற்போதைய செயல்பாடுகளை கணக்கில் கொண்டுதான் அவர்களின் பேர ணிக்கு அனுமதி கூடாது என்கிறோம். இவ்விசயத்தில், குறிப்பாக சட்டம் - ஒழுங்கு சார்ந்த விசயங்களை உயர்நீதி மன்றம் கவனத்தில் எடுக்க தவறிவிட்டது. எனவே, உச்சநீதிமன்றத்தில் தமிழ் நாடு அர சாங்கம் மேல்முறையீடு செய்திருப்பது சரி யானது. பாராட்டுக்குரியது.