states

வாழ்வாதார உரிமைகளை மீட்டெடுக்க போராட்ட இயக்கங்கள்

சேலம், டிச.18- பழைய ஓய்வூதியம், அகவிலைப்படி, வரையறுக்கப்பட்ட ஊதி யம், சரண்டர் போன்ற வாழ்வாதார உரிமைகளை மீட்டெடுக்க தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் போராட்ட இயக்கங்களை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவப் பேரவை சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இப்பேரவையின் முடிவில் நிறைவேற்றப்பட்ட போராட்ட அறைகூவல் வருமாறு:

மாநிலம் தழுவிய அனைத்து அலுவலகங்கள் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறை வேற்றிட தமிழக அரசை வலியுறுத்தி 27.12.2022 அன்று தமி ழகம் முழுவதும் அனைத்து அலுவலகங்கள் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்திடுவது. 

உறுப்பினர் சேர்க்கை இயக்கம்

கோரிக்கைகளை ஊழியர்கள் மத்தியில் கொண்டு சென்றி டவும், உறுப்பினர் சந்திப்பு இயக்கத்தை எழுச்சியோடு துவக்கி டவும் அனைத்து வட்ட, மாவட்ட மையங்களில் வட்ட, மாவட்ட, மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் வகையில் 09.01.2023 முதல் 27.01.2023 வரை ஊழியர் சந்திப்பு மற்றும் உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை எழுச்சிகரமாக நடத்திடுவது. 

மாவட்ட அளவிலான கோரிக்கைப் பேரணி

வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசை  வலியுறுத்தி 10.02.2023 அன்று மாவட்ட அளவிலான பல்லாயி ரக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றிடும் வகையிலான கோரிக்கைப்பேரணியை நடத்திடுவது.

ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்

வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசை  வலியுறுத்தி, பறிக்கப்பட்ட உரிமைகளை மீளப்பெற்றிட 28.3. 2023 அன்று லட்சக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்கும் வகை யில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தை நடத்திடுவது.

கோட்டை முற்றுகை

அரசு நிறைவேற்றிடத் தவறும் பட்சத்தில் தமிழக அரசிடம் நியா யம் கேட்டு வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது கோட்டையை முற்றுகையிடுவது என இப்பேரவையில் தீர்மானிக்கப்பட்டது.