states

img

சிறு தொழில் துறை உற்பத்தி நிறுத்தம்

மின்சார பயன்பாட்டுக் கட்டண  உயர்வு, தாங்க முடியாத அளவுக்கு 430 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ள மின்சார நிலைக் கட்டண உயர்வு, பீக் ஹவர்  எனப்படும் உச்ச நேர மின் பயன்  பாட்டுக் கூடுதல் கட்டணம் நிர்ண யிப்பு, சூரியஒளி மின்சார பயன்  பாட்டுக்கு கட்டணம் விதிப்பு, ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தும் அறிவிப்பு ஆகிய வற்றை ரத்து செய்து 3 பி பட்டிய லில் இருந்து 3ஏ1 பட்டியலுக்கு  மாற்றி மின் கட்டணத்தைக் குறைக் கவும் வலியுறுத்தி தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பின்னலாடை, விசைத்  தறி, ஜவுளி சார்ந்த டையிங், காம்  பேக்டிங் உள்ளிட்ட உபதொழில் கள், இன்ஜினியரிங், பவுண்டரி, பிரிண்டிங், காலண்டர், கிரில், ஸ்டீல் பேப்ரிகேசன், அரிசி மற்றும் எண்ணெய் உற்பத்தி மில்கள் உள்  பட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு  மாவட்டங்களில் சிறு, குறு, நடுத்த ரத் தொழில் துறை சேர்ந்த 200க்கும்  மேற்பட்ட அமைப்புகள் இணைந் துள்ளன.

முதல்வரின் கவனத்தை ஈர்க்க

முதல் கட்டமாக கடந்த செப்.7ஆம் தேதி பல்லடம் அருகே  காரணம்பேட்டையில் உண்ணா விரதப் போராட்டம் நடத்தினர். இதையடுத்து கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முதல்வ ருக்கு தபால் அனுப்பும் இயக் கத்தை நடத்தினர். இதன் தொட ர்ச்சியாக முதல்வரின் கவனத்தை ஈர்ப்பதற்காக செப்.25 திங்களன்று தமிழ்நாடு முழுவதும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களில் ஒரு நாள் அடையாள உற்பத்தி நிறுத்தம் மேற்கொள்வது என்று அறிவித்த னர். அதன்படி திங்களன்று தமிழ கம் முழுவதும் அனைத்து கேந்தி ரமான சிறு, குறு, நடுத்தரத் தொழில் மையங்களிலும் ஆலைகள் கத வடைப்பு செய்யப்பட்டு, உற்பத்தி  நிறுத்தப்பட்டது. கோவை, திருப்  பூர், ஈரோடு, சேலம், ராணிப் பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மதுரை, விருதுநகர், சிவ காசி, திருவாரூர் என 20க்கும் மேற்  பட்ட மாவட்டங்களில் மிகப்பெரும்  பான்மையான ஆலைகள் இயங்க வில்லை. இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுரையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற்றது. பல ஆயிரம் கோடி ரூபாய்  மதிப்பிலான உற்பத்தி நடவடிக்கை  இந்த ஒரு நாளில் முடங்கியது. இந்த அடையாள உற்பத்தி நிறுத்தம் குறித்து, தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பைச் சேர்ந்தோர் கூறுகையில், மின் கட் டண உயர்வால் கடந்த ஓராண்டு காலமாக மிகப்பெரும் பாதிப்பைச்  சந்தித்து வருகிறோம். எனவே தமி ழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு  செல்லவும், எங்கள் வாழ்வாதா ரத்தைப் பாதுகாக்கவும் அடை யாளப்பூர்வமாக ஒரு நாள் உற்  பத்தி நிறுத்தத்தை மேற்கொண் டோம். இதில் பல்வேறு தொழில் பிரிவுகளைச் சேர்ந்தோர் அவர் களாக முன்வந்து உற்பத்தியை நிறுத்திப் பங்கேற்றனர். கோரிக் கையை நிறைவேற்றும் வரை அனைத்து சிறு, குறு, நடுத்தரத் தொழில் அமைப்புகளும் ஒற்று மையுடன் தொடர்ந்து செயல்படு வோம். இது அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல, சிறு, குறு, நடுத்  தரத் தொழில்களைக் காப்பாற்று வதற்கான போராட்டம் என்று கூறி னர்.