states

பொய் வழக்கில் சிறையில் அடைத்த மாணவர் சங்க திருச்சி நிர்வாகிகளை விடுதலை செய்திடுக!

மாணவர் சங்க மாநிலக்குழு வலியுறுத்தல்

சென்னை, ஏப்.27- பொய் வழக்கில் சிறையில் அடைக்கப் பட்டுள்ள இந்திய மாணவர்  சங்க திருச்சி மாவட்ட நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று மாணவர் சங்கத்தின் மாநி லக்குழு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலை வர் கோ.அரவிந்தசாமி, மாநிலச் செயலாளர்  க.நிருபன் சக்கரவர்த்தி ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: இந்திய மாணவர் சங்கத்தின் திருச்சி மாந கர் மாவட்டத்தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள்  மீது பொய் வழக்கு போட்டு  சிறையில் அடைத்  திருப்பதை இந்திய மாணவர் சங்க தமிழ்நாடு  மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத்  தலைவர்  சூரியா, மாவட்ட செயற்குழு உறுப் பினர் பிரதாப், முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர்  கோபால் ஆகியோர் திங்கள் கிழமை(24.04.2023) இரவு சூரியாவின் சொந்த ஊரான சிறுகனூரில் நடைபெற்ற  ஊர் திருவிழாவிற்கு சென்றுள்ளனர். அங்கு  சென்ற போது விசாரணை என்ற பெயரில்  அழைத்து காவல் துறையினர் தரக்குறை வாக பேசி தாக்கியுள்ளனர். தான் இந்திய  மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர்  என்று கூறியபோது ‘’அதுவே தடைசெய்யப்  பட்ட இயக்கம்’’ என்று கூறி திருச்சி மாவட்ட  சிறுகனூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச்  சென்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்

அநீதியான முறையில் சம்பந்தமில்லாத ஏதோ பிரச்சனைகளை கூறி திடீரென தாக்கி யது மட்டுமல்லாமல் வழக்கு பதிந்திருப்பதை கண்டித்து சிறுகனூர் காவல் நிலையம் முன்  போராட்டம் நடத்த இந்திய மாணவர்  சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்டக்குழு வினர் ஏப்ரல் 25 அன்று சென்றனர். நியா யம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாண வர்களை எந்தவொரு முன்னறிவிப்புமின்றி திடீரென காவல் துறை கைது செய்துள்ளது.  மேலும் இந்த  காவல் துறையின் குற்றத்தை  மறைக்க சூரியா, பிரதாப், கோபால் ஆகி யோர் மீது பல்வேறு பிரிவுகளில் பொய் வழக்கு பதிந்து லால்குடி கிளை சிறையில் அடைத்தனர். சம்பந்தப்பட்ட மாணவர் சங்க தலை வர்கள் மீது யாரும் புகார் கொடுக்கவில்லை, யாரையும் தாக்கவில்லை, ஊர் மக்களை மிரட்டி புகார் கொடுக்க சொன்ன காவல்  துறை, கடைசியாக வேறு வழியின்றி காவ லர் ஒருவரிடம் பொய் புகார் வாங்கி வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது. இது தமிழக காவல்துறையின் மிகவும் தரம்தாழ்ந்த செயலாகும்.  மாணவர்கள் நலனுக்காக போராடும் மாணவர் சங்கத்தின் தலைவர் என்று கூறிய பிறகும் தடைசெய்யப்பட்ட அமைப்பு என காவல்துறையினர் சொல்வதற்கு யார் தைரி யம் கொடுத்தது. மக்களுக்காக போராடும் நபர்களை குற்றவாளிகளை போல நடத்து வது தமிழக காவல்துறைக்கு இயல்பாகி விட்டது. இதனை இந்திய மாணவர் சங்கத் தின் தமிழ்நாடு மாநிலகுழு வன்மையாகக் கண்டிக்கிறது. அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட சிறு கனூர் காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை உடனே விடு தலை செய்ய வேண்டும்.  உரிய நியாயம்  வழங்காவிட்டால் தொடர் போராட்டங்களை முன்னெப்போம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.