சென்னை, ஏப்.2- ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாண வர்களுக்கு நேரடி வகுப்புகள் கடந்த ஆண்டு செப்டம்பர் தொடங்கி நடைபெற்று வரு கின்றன. 12 ஆம் மாணவ ர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் மாதத்தில் தொடங்குவது வழக்கம். அதனைத் தொடர்ந்து 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வும் பிற வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும். நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி நேரடி வகுப்புகள் தாமத மாக தொடங்கியதால், பொதுத் தேர்வுகள் மற்றும் இறுதித் தேர்வு கள் மே மாதம் இறுதிவரை நடை பெறுகிறது. அதன்படி, 12 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே மாதம் 5 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதேபோல், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9 ஆம் தேதி துவங்கி 31 ஆம் தேதி வரையும், 10 ஆம் வகுப்புக்கு மே மாதம் 6 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. இதுதவிர 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வு நடத்த வேண்டும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாண வர்களுக்கு மே 13 ஆம் தேதி கடைசி வேலைநாளாக அறிவிக் கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான (2022-23) அனைத்து வகுப்புகளும் ஜூன் மாதம் 13 ஆம் தேதி தொடங்கும் என்று கல்வித்துறை அறிவித் துள்ளது. 11 ஆம் வகுப்பு மாணவர்க ளுக்கு மட்டும் 24 ஆம் தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு பள்ளி கோடை விடுமுறை காலம் வெகு வாக குறைந்துள்ளது.