சென்னை,ஏப். 15 சென்னையில் சிறுநீரகம் செயலிழந்த 32 வயது ஆணுக்கு மிகவும் சவாலான பெருந்தமனி சார்ந்த அறுவை சிகிச்சை அண்மையில் வெற்றிகரமாக செய்துமுடிக்கப்பட்டுள்ளது.சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் உள்ள மெட்வே ஹார்ட் இன்ஸ்டிட்டியூட்டின் மருத்துவர் குழு இதனை வெற்றிகரமாக செய்தது.திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜ்குமாருக்கு சிறுநீரகச் செயலிழப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளின் காரணமாக நெஞ்சு, முதுகில் கடுமையான வலி ஏற்பட்டது. உள்ளூர் மருத்துவர்கள் மேற்கொண்ட எக்கோ, ஸ்கேன் பரிசோதனைகளில், அவருக்குப் பெருந்தமனி சார்ந்த பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டது. இது தீவிர நோயுற்ற தன்மை, இறப்புடன் தொடர்புடைய உயிருக்கு ஆபத்தான மருத்துவ நிலை ஆகும். இப்படிப்பட்ட மோசமான நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிக்கலான அவசர அறுவை சிகிச்சை வெற்றி பெற்றுள்ளதாக தலைமை மருத்துவர் டாக்டர் அன்பரசு மோகன்ராஜ் கூறினார். அந்த நோயாளிக்கு “சிறுநீரக செயலிழப்பு காரணமாக டயாலிசிஸ் செய்யும் நிலையில் இருந்ததுடன், இரண்டு இதய வால்வுகளில் கசிவு இருந்தது, ராஜ்குமாரின் பெருந்தமனி சார்ந்த அறுவை சிகிச்சையில் உள்ள சிக்கலை தீவிரப்படுத்தியது. இது அறுவை சிகிச்சையை பெரிய சவாலாக மாற்றியது என்றும் இதனால். சிக்கலான அறுவை சிகிச்சை ஆறு மணி நேரம் நீடித்தது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.