states

ஏவுகணைக்கான எரிபொருள் ‘பூஸ்டர்’ பரிசோதனை வெற்றி

சந்திப்பூர், ஏப்.9-  ஏவுகணைகளுக்கான திட எரிபொருள் ‘பூஸ்டர்’ பரிசோதனை வெற்றிபெற்ற தாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறு வனம் (டி.ஆர்.டி.ஓ) தெரி வித்துள்ளது. ஏவுகணைகளில் பயன்  படுத்தக்கூடிய திட எரி பொருள் குழாயுடன் கூடிய ராம்ஜெட் ‘பூஸ்டரை’ ஐதரா பாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டு நிறுவனம்  உருவாக்கி யுள்ளது. ஐதராபாத் இமா ரத் ஆராய்ச்சி மையம், புனே யில் உள்ள அதிசக்தி பொருட் கள் ஆய்வகம் ஆகிய டி.ஆர். டி.ஓ. ஆய்வகங்கள் இணைந்து இந்த பூஸ்டரை உருவாக்கியிருக்கின்றன. ஏவுகணைகளை சூப்பர் சானிக் வேகத்தில் செலுத்தி, வான்வழி ஆபத்துகளை இடைமறித்து தகர்க்க இந்த உந்து அமைப்பு முறை உதவும் என்று கூறப்படுகி றது. இந்த பூஸ்டரின் பரி சோதனை, ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கி ணைந்த சோதனை தளத்தில் நடைபெற்றது. இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது.இந்த சோதனை வெற்றி தொடர் பாக டி.ஆர்.டி.ஓ. குழு வினருக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் பாராட்டுக்களை தெரி வித்துள்ளார்.