ராகுலின் குடியுரிமையை பறிக்க வேண்டுமாம்: சுப்பிரமணியசாமி வன்மம்
“பிரிட்டிஷ் குடியுரிமையை பெற்று மிகப்பெரிய அரசியல் சாசன குற்றத்தைச் ராகுல் காந்தி செய்துள்ளார். இதனால் அவர் நாடாளுமன்றத்தில் நாடகம் ஆடுவது என்பது வேடிக்கையானது. அவருக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் மோடி அரசு ஏன் இன்னும் ராகுலின் குடியுரிமையை பறிக்கவில்லை?’’ என பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியசாமி கேள்வி எழுப்பியுள்ளார். ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடியுரிமை யைப் பெற்றுள்ளதாக 2015 முதலே சுப்பிரமணியசாமி குற்றம்சாட்டி வருகிறார்” என்பது குறிப்பிடத்தக்கது.
கெயில் பங்குதாரர்களுக்கு ரூ. 2 ஆயிரத்து 630 கோடி ஈவுத்தொகை
இந்தியாவின் மிகப்பெரிய எரிவாயு நிறுவனமான கெயில், தனது பங்குதாரர்களுக்கு ரூ. 2 ஆயிரத்து 630 கோடியை ஈவுத் தொகையாக வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. பங்கு தாரர்களுக்கு மார்ச் 31-உடன் முடிவடையும் 2022-23-ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால ஈவுத்தொகையாக 40 சதவிகிதம் (பங்கு ஒன்றுக்கு ரூ. 4) வழங்க இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அந்த வகையில், மொத்த ஈவுத்தொகையாக ரூ. 2 ஆயிரத்து 630 கோடி வழங்கப்படும். இதனால், கெயில் நிறுவனத்தில் 51.52 சதவிகித பங்குகளை வைத்துள்ள இந்திய அரசுக்கு மட்டும் ஈவுத்தொகையாக ரூ. ஆயிரத்து 355 கோடி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் மட்டும் சுங்கச்சாவடி கட்டணமாக ரூ. 2,695 கோடி வசூல்
கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டில் ரூ. 2 ஆயிரத்து 695 கோடி சுங்கச்சாவடி கட்ட ணம் வசூலாகி உள்ளதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். கடந்த நிதியாண்டில் நாட்டில் மொத்தமுள்ள சுங்கச்சாவடிகள் மூலம் ரூ. 34 ஆயிரத்து 742 கோடியே 56 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. இதில், அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் ரூ. 4 ஆயிரத்து 183 கோடியும், குஜராத்தில் ரூ. 3 ஆயிரத்து 642 கோடியும், தமிழ்நாட்டில் ரூ. 2 ஆயிரத்து 695 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடி களில் 4 ஆயிரத்து 934 பேர் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர் என்றும் கட்காரி குறிப்பிட்டுள்ளார்.
6-7 நாடுகளில் இந்திய குடிமக்களை அவமதித்தவர் மோடி
“மோடி அவர்கள் 6-7 நாடுகளுக்குச் சென்று அந்நிய மண்ணில் நின்றுகொண்டு, ‘இந்தியாவில் பிறக்க என்ன பாவம் செய்தோம் என்று இந்திய மக்கள் சொல்கிறார்கள்’ என்று கூறினார். பிரதமர் மோடிதான் இந்திய குடிமக்களை அவமதித்தார். மோடி சீனா சென்றார், அமெரிக்கா சென்றார், தென் கொரியா சென்றார். அங்கெல்லாம் இந்திய குடிமக்களை அவமதித்தார் என்பதை ஜே.பி. நட்டா தெரிந்து கொள்ள வேண்டும். இவற்றுக்காக முதலில் மோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியுள்ளார்.
குறைதீர் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்
இராமநாதபுரம், மார்ச் 17- இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட் டம் வெள்ளிக்கிழமை அறி விக்கப்பட்டு துவங்கியது. இந்த கூட்டம் உட்பட மூன்று குறைதீர் கூட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வரவில்லை. இதுதொடர்பாக தமிழ் நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் வி.மயில்வாகனன் செய்தி யாளர்களிடம் கூறுகையில், இராமநாதபுரம் மாவட்டத் தில் போதுமான மழை இல் லாததால் அனைத்து விவ சாயிகளும் பாதிக்கப்பட் டுள்ளனர். விவசாய இடு பொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் ஏக்க ருக்கு ரூ. 30 ஆயிரம் நிவார ணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மார்ச் 2 அன்று முற்றுகைப் போராட் டம் உள்ளிட்டு மாவட்ட முழு வதும் போராட்டங்கள் நடத்தி வலியுறுத்தினோம். தமிழ் நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் ஏக்கருக்கு நிவா ரணம் ரூ. 30 ஆயிரத்தை குறைக்காமல் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் .மேலும் விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் கொடுக்கப் படும் மனுக்கள் மீது தொட ர்ச்சியாக சம்பந்தப்பட்ட அதி காரிகள் விசாரித்து நடவடிக்கை எடுப்பதில்லை. மிகுந்த சுணக்கம் காட்டி நிலுவை யில் வைத்துள்ளனர். இந்த போக்கை தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் வன்மை யாக கண்டிக்கிறது என்று தெரிவித்தார்.
உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாக ஒரு பெண் கூட இல்லை
நாட்டில் உள்ள எந்த உயர்நீதிமன்றங்களிலும் பெண் தலைமை நீதிபதிகளே இல்லை என்ற அதிர்ச்சி தக வலை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் தற்போதுள்ள 775 நீதிபதிகள் பணிபுரிகின்றனர், அவர்களில் 106 பேர் பெண்கள். எனினும் ஒருவர் கூட தலைமை நீதிபதி அந்தஸ் தில் இல்லை. 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிக எண்ணிக்கையில் 13 பெண் நீதிபதி கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மும்பை உயர்நீதி மன்றத்தில் 8 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூர், மேகாலயா, பாட்னா, திரிபுரா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநில உயர்நீதிமன்றங்களில் பெண் நீதிகள் இல்லை.
பிரதமர் மோடியுடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின்போது, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமரிடம் ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் தொடரும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் மாதர் சங்கம் கண்டனம்
புதுதில்லி, மார்ச் 17- வெளிப்படையான நோக்கத்துடன் சிறுபான்மை சமூகத்தை அச்சுறுத் தும் மற்றும் தீங்கு விளைவிக்கும் சங்பரிவார் அமைப்புகளின் முயற்சிக ளை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA) வன்மையாக கண்டிக்கிறது. சங்கத்தின் அகில இந்திய தலைவர் பி.கே.ஸ்ரீமதி, பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவில் 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக புண்படுத்தும், ஆத்திரமூட்டும் பேச்சுகள் மூலம் வெறுப்பைப் பரப்புவதற்கு முயற்சித்து வருகின்றனர். இந்த பேச்சுக்கள் சிறுபான்மை சமூகங்களை இழிவுபடுத்துவதுடன், அவர்களை மூர்க்கத்தனமாக சித்தரிக்கும் நோக்கில் “லவ் ஜிகாத்” மற்றும் “பசுக்கொலை யாளர்கள்” என்று ஆத்திரமூட்டும் கருத்துக்களுடன் சிறுபான்மையினரை தொடர்புபடுத்தி வன்முறையை தூண்டி விடுகின்றனர். இந்த பேச்சுக்கள் சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாட்டையும், வன்முறையையும் தூண்டுகிறது. ஆனால் மாநில அரசு உணர்வுப்பூர்வமாக இத்தகைய வெறுப்பு பேச்சுக்களையும், அதனால் ஏற்படும் வெறுப்புணர்வை யும் கண்டுகொள்ளாமல் உள்ளது. அரசாங்கத்தின் மௌனம் வன் முறையை மேலும் ஊக்குவிப்பதாக உள்ளது. கடந்த சில வருடங்களாக சிறுபான்மை சமூகத்தின் மீது இடையறாது தொடர் கொடூரமான தாக்குதல்கள் நிகழ்ந்து வருகின்றன. வெறுக்கத்தக்க பேச்சுகளுடன், கொலை மிரட்டல்கள், உடல் ரீதியான தாக்குதல் சம்பவங் கள், சில நேரங்களில் படுகொலைகள், பாலியல் பலாத்காரம் போன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. நாடு தழுவிய எதிர்ப்புகளுக்குப் பிறகும் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் தொடர்ந்து தப்பித்து வருகின்றனர். நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாக்கப் போராடும் அனைத்து தரப்பு மக்களும் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை எதிர்க்க வேண்டும். மேலும் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் மற்றும் குற்றங்களை அரங்கேற்றும் நபர்கள் மீது உடனடி நட வடிக்கை எடுக்கவும், பயங்கரவாதச் செயல்கள், அச்சுறுத்தல்களைத் தடுக்க சட்ட அமலாக்க முகமை மூலம் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண் டும் எனவும் அனைத்திந்திய மாதர் சங்கம் கோரிக்கை விடுக்கிறது.
ஓபிஎஸ்-முதல்வர் சந்திப்பு: தாயார் மறைவுக்கு ஆறுதல்
சென்னை, மார்ச் 17- முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது தாயாரின் மறைவுக்கு ஆறுதல் கூறினார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் கடந்த பிப்ரவரி 24 அன்று காலமானார். அன்றைய தினமே முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். இந்நிலையில், வெள்ளியன்று (மார்ச் 17) சென்னை கிரீன்வேஸ் சாலை யிலுள்ள இல்லத்தில், ஓ.பன்னீர்செல் வத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, அவரது தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறினார்.
பால் விநியோகம் பாதிக்கப்படவில்லை: அமைச்சர் நாசர்
சென்னை, மார்ச் 17- தமிழ்நாட்டில் ஆவின் பால் விநியோ கம் தடையின்றி சீராக நடக்கிறது என்று அமைச்சர் நாசர் கூறினார். தமிழ்நாட்டில், ஆவின் நிறுவனத் துக்கு 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தினமும் சுமார் 28 லட்சம் லிட்டர் பால் வழங்குகிறார் கள். கொள்முதல் விலையை அதிகரிக் காவிட்டால் பால் வழங்கமாட்டோம் என்று பால் உற்பத்தியாளர்கள் அறி வித்தனர். மேலும், பால் வழங்குவதை நிறுத்தும் போராட்டத்தை வெள்ளி யன்று (மார்ச் 17) தொடங்கினர். இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்படலாம் என்று அச்சுறுத்தல் எழுந்தது. ஆனால், ஆவின் பால் விநி யோகம் வழக்கம்போல் நடந்தது. எந்த இடத்திலும் தட்டுப்பாடு ஏற்பட வில்லை. இதுதொடர்பாக பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கூறுகையில், “தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தில் சிலர் பால் உற்பத்தி யாளர்களை போராட்டத்துக்கு தூண்டிவிட்டுள்ளனர். அவர்களை நம்பி சில பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் எந்த ஒரு இடத்தி லும் பால் விநியோகம் பாதிப்பில்லா மல் வழக்கம்போல் நடைபெற்றது. சனிக்கிழமையும், அதைத்தொடர்ந்தும் பால் விநியோகம் தங்கு தடையின்றி விநியோகிக்கப்படும்”என்றார்.
ராணுவ வீரர் மறைவுக்கு முதல்வர் இரங்கல்
சென்னை, மார்ச் 17- தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் ஜெயந்த் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அருணாச்சலப் பிரதேசம், மாண்டல பகுதியில் வியாழனன்று (மார்ச் 16) நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மேஜர் ஜெயந்த் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தேனி மாவட்டம், ஜெயமங்கலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் ஜெயந்த் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சி யும் வேதனையும் அடைந்தேன். அவருக்கு எனது வீர வணக்கத்தை செலுத்துகிறேன். அவரது பிரிவால் வாடும் சக ராணுவ வீரர்கள், குடும்பத்தி னர், நண்பர்கள் மற்றும் நாட்டு மக்க ளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடி, மின்னலுடன் மழை பெய்யும்
சென்னை, மார்ச் 17- தமிழ்நாடு மற்றும் புதுவையில் வருகிற 20 தேதி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்ட லத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, வெள்ளியன்று (மார்ச் 17) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இது மார்ச் 20 ஆம் தேதி வரைக்கும் தொடரும். இவ்வாறு தெரிவித்துள்ளது.
குறித்த நேரத்தில் தேர்தல் மதுரோ அறிவிப்பு
காரகஸ், மார்ச் 17- வெனிசுலாவில் குறித்த நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்றும், அவற்றை முன்கூட்டியே நடத்துவதற்கான தேவை இல்லை என்றும் அந்நாட்டின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார். வெனிசுலாவில் உள்ள இடதுசாரி ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்க ஆதரவுடன் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அது வெற்றி பெறாததால் சதித்திட்டங்களில் ஈடுபட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் அரசுடன் உடன்பாட்டை எட்டின. நாடாளுமன்ற நடவடிக்கைகளில் அக்கட்சிகள் பங்கேற்கத் தொடங்கிவிட்டன. இதனால், ஜனாதிபதித் தேர்தல் முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று கோரத் தொடங்கியுள்ளார்கள். பிரஸ்ஸல்ஸ் மற்றும் வாஷிங்டனில் நடந்த சில கூட்டங்களில் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டன. சில எதிர்க்கட்சிகளும் இதை முன்வைக்கின்றன. அரசியல் சட்டப்படி, அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2024 ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டும். குறித்த நேரத்தில் தேர்தல்கள் நடக்கும் என்று வெனிசுலாவின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ உறுதியளித்திருக்கிறார். இது பற்றிக் கருத்துக் கூறிய அவர், “ஏகாதிபத்தியம், வலதுசாரிகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் என்ன சொல்கின்றன என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. வெனிசுலாவில் ஜனநாயக நடைமுறை நியாயமாக அமலாக்கப்படும் “ என்றார். அடுத்த ஆண்டில் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, ஜனவரி 10, 2025 ஆம் தேதியன்று வெனிசுலாவின் புதிய ஜனாதிபதி பொறுப்பேற்றுக் கொள்வார்.
மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 5 நாட்கள் காவல்
கலால் கொள்கை வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ-யால் கடந்த பிப். 26 ஆம் தேதி கைது செய்து செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். மணீஷ் சிசோடியாவின் அமலாக்கத்துறை விசாரணை காவல் வெள்ளியன்று நிறைவடைந்த நிலையில், மேலும் 5 நாள்கள் (மார்ச் 22 வரை) காவலை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.