states

தீக்கதிர் விரைவு செய்திகள்

சேகர் பாபு அல்ல; அவர் இந்துக்களுக்கு சினேக் பாபு!

பாஜக மூத்த தலைவரான எச். ராஜா, அவரது சொந்த ஊரான காரைக்குடியில் செய்தியாளர் களுக்குப் பேட்டி அளித்துள்ளார். அப்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்துக்களுக்கு ‘சினேக் பாபு’-வாக இருக்கிறார் என்று ஆவேசப்பட்டுள்ளார். மாரிதாஸ், கிஷோர் கே சாமி, கல்யாணராமன் வரிசையில் கார்த்தி கோபிநாத் மீதான கைது நடவடிக்கை அமைந்துள்ளதாகவும், அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் எச். ராஜா கூறியுள்ளார். மேலும்,  “இந்துக்களுக்கு எதிராக செயல்படும் அமைச்சர் சேகர்பாபுவை பதவியில் இருந்து நீக்க வேண்டும். இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதே திராவிட மாடல்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கார்த்திக் கோபிநாத்திற்கு சுப்பிரமணியசாமி வக்காலத்து!

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலை புனரமைக்கப் போவதாக கூறி, 34 லட்சம் ரூபாயை வசூலித்து மோசடி செய்த குற்றச்சாட்டில், பாஜக ஆதரவாள ரும் யூடியூபருமான கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கார்த்திக் கோபிநாத்திற்காக தானே நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடத் தயார் என்று பாஜக தலைவர் சுப்பிர மணியசாமி அறிவித்துள்ளார். “கார்த்திக் கோபிநாத்திற்கு ஏற்கெனவே வழக்கறிஞர் இருந்தால்- அவர் இந்த கேஸை எடுத்து நடத்துங்கள் என என்னிடம் கூறினால் எடுத்து நடத்துவேன். ஏற்கெ னவே தமிழக பாஜக அந்த பொறுப்பை எடுத்துக் கொண்டதால், தற்போது நான் எதையும் செய்ய முடியாது. பாதிக்கப்பட்ட நபரான கார்த்திக்தான் யார் வாதாட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்” என்றும் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.

எஸ்ஸெல் குழும முதலாளியை எம்.பி. ஆக்கும் பாஜக!

நாட்டின் பெருமுதலாளிகளில் ஒருவரும், எஸ்ஸெல் (Essel) குழுமத் தலைவருமான, டாக்டர் சுபாஷ் சந்திரா, பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார். அவர், பாஜக சார்பில்  ராஜஸ்தானில் இருந்து போட்டியிட, செவ்வாய்க்கிழமை (மே 31) தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். ஏற்கெனவே ராஜஸ்தானில் கன்ஷியாம் திவாரி என்பவரும் பாஜக சார்பில் மாநிலங்க ளவைக்கு போட்டியிடுகிறார். 

முக்தர் அப்பாஸ் நக்வியை நட்டாற்றில் விட்ட பாஜக!

பதினைந்து மாநிலங்களில் 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 10-ஆம்  தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் செவ்வாய்க்கிழமை யுடன் நிறைவடைந்த நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியலை திங்களன்று பாஜக வெளியிட்டது. இதில், பாஜக மூத்த தலைவர்கள் பலரின் பெயர் இடம்பெறவில்லை. குறிப்பாக, ஒன்றிய சிறுபான்மை யினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, முன்னாள் ஒன்றிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மூத்தத் தலைவர்கள் ஓ.பி. மாத்தூர், வினய் சகஸ்ரபுத்தே, துஷ்யந்த் கவுதம் ஆகி யோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. பாஜக-வின் மாநிலங்களவை தலைமை கொறடாவாக உள்ள சிவ பிரதாப் சுக்லாவுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது அவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

திருக்கடையூரில் சதாபிஷேகம் நடத்திய இளையராஜா!

இசைஞானி இளையராஜா 80-ஆவது வயதில் அடியெடுத்து வைப்பதைத் தொடர்ந்து, மயிலாடு துறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், திருக்கடையூரிலுள்ள ஸ்ரீஅபிராமி சமேத ஸ்ரீஅமிர்த கடேஸ்வரர் கோயிலில், சதாபிஷேக விழாவை நடத்தினார். 84 கலசங்கள் வைக்கப்பட்டு ஆயுஷ் ஹோமம், நவகிரக ஹோமம் மற்றும் மிருத்யுஞ்சய ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதில்,  மகன் கார்த்திக்ராஜா, மகள் பவதாரணி மற்றும் சகோதரர் கங்கை அமரன், அவரது மகன் நடிகர்  பிரேம்ஜி உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தில்லி அமைச்சரை ஜூன் 9 வரை விசாரிக்க அனுமதி!

கொல்கத்தாவை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் ‘ஹவாலா’ பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தில்லியின் சுகாதாரத்துறை அமைச்சர்  சத்யேந்திர ஜெயினை, அமலாக்கத்துறை அதிகாரிகள் திங்களன்று கைது செய்தனர். இந்நிலை யில், செவ்வாயன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, சத்யேந்திர ஜெயினை தங்களின் காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி கோரினர். அதனை ஏற்றுக்கொண்ட தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் சத்யேந்திர ஜெயினை ஜூன் 9 வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.