states

img

தேர்தல் நிதிப் பத்திர விவரங்களை சமர்ப்பித்திடுங்கள்!

புதுதில்லி, நவ. 14 - உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட நன்கொடை குறித்த விவரங்களை நவம்பர் 15-க்குள் சமர்ப்பிக்க அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. ஒரு நபர் அல்லது நிறுவனம் அரசியல் கட்சிகளுக்குப் பணமாக நன்கொடை அளிப்பதற்குப் பதிலாக, தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளிக்கும் திட்டத்தை 2016 மற்றும் 2017 நிதிச் சட்டம் மூலம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (RPA) 1951, நிறுவனங்கள் சட்டம் 2013,  வருமான வரிச் சட்டம் 1961 மற்றும் வெளிநாட்டு பங்களிப்புகள் ஒழுங்கு முறைச் சட்டம் (FCRA) 2010 ஆகிய நான்கு சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வந்ததன் மூலம் ஒன்றிய பாஜக அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படு வதற்கு முன், அரசியல் கட்சிகள் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்கும் அனை த்து நன்கொடைகள் குறித்த தகவல்க ளையும் வெளிப்படையாக பகிர வேண்டும் என்ற நிலை இருந்தது.

மேலும், எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனமும், தங்களின் மொத்த லாபத்தில் 7.5 சதவிகிதம் அல்லது வருவா யில் 10 சதவிகிதத்திற்கு அதிகமாக நன் கொடை அளிக்கவும் அனுமதிக்கப்பட வில்லை. இவற்றை புதிய சட்டத்திருத்தங்கள் மூலம் மோடி அரசு மாற்றியது. அரசியல்  கட்சிகளுக்கு நிதியளிக்க விரும்பும்  இந்திய குடிமக்கள் மற்றும் நிறு வனங்கள், ரூ. 1,000 முதல் ரூ. 1 கோடி  வரையிலான தேர்தல் நிதிப் பத்தி ரங்களை, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா-வின் (SBI) குறிப்பிட்ட கிளைகளில் இருந்து, தேர்தல் பத்திரங்களாக வாங்கி நன்கொடை அளிக்கலாம். மேலும், இந்தப் பத்திரங்களைத் தனி யாகவோ, பல பேர் கொண்ட குழுவாக வோ சேர்ந்து வாங்கிக்கொள்ளலாம். பின்னர், அவற்றை தாங்கள் விரும்பும் கட்சிகளிடம் தனிநபர்களும், நிறுவனங் களும் சமர்ப்பிக்கலாம். அந்தப் பத்திரங் களை அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் வழங்கி, அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் பணமாக மாற்றிக் கொள்ளலாம்.

இவ்வாறு தேர்தல் பத்திரங்கள் மூலம், தமக்கு நன்கொடை வழங்கியவர்களின் விவரங்களை, எவரி டமும் அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.  மோடி அரசின் இந்த தேர்தல் பத்திர ஏற்பாட்டிற்கு, கடும் எதிர்ப்பு எழுந்தது. தேர்தல் பத்திரங்கள் திட்டம் மூலம் நிதியுதவி அளிப்பவர்கள் யார் என்பது தெரியாததால், அது ஊழலை ஊக்குவிப்பதாகக் கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புக்கள் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தன. இந்த மனுக்கள், கடந்த நவம்பர் 2  அன்று உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த செப்டம்பர் 30 வரை தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை அடங்கிய விவரத்தை, மூடி முத்திரை யிடப்பட்ட உரையில், உச்ச நீதிமன்றத்தி டம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் சுற்ற றிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளது.  அதில், “உச்சநீதிமன்ற உத்தர வைத் தொடர்ந்து, தேர்தல் நிதிப் பத்தி ரங்கள் திட்டம் தொடங்கப்பட்டது முதல்  கடந்த செப்டம்பர் 30, 2023 வரை, அந்த  பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை விவரங்களை நவம்பர் 15- (இன்றைக்குள்) மூடி முத்திரையிடப்பட்ட உரையில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு பத்திரத்தையும் வழங்கிய நன்கொடையாளர்கள் யார், ஒவ்வொரு பத்திரத்தின் விலை மதிப்பு என்ன ஆகிய முழுத் தகவல்கள் அந்த விவரத்தில் இடம் பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.