சென்னை, மே 27 - ஜூலை 1 ஆம் தேதி முதல் பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு படிப்புகளில் சேர மாணவர்கள் விண் ணப்பிக்கலாம் என்றும், பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அரசு பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது:- பாலிடெக்னிக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப் பங்கள் இணையவழியில் 1.7.2022 முதல் பெறப்படுகிறது. இது முதலாம் ஆண்டு சேரக்கூடிய மாணவர்களுக்கு, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்த பின்னர் இது தொடங்கும். அதேபோல், 11 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் பாலி டெக்னிக்கில் இரண்டாம் ஆண்டு சேர்வதற்கான மாணவர் சேர்க்கை தொடர்பான அட்டவணையும் வெளி யிட்டது. பாலிக்டெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கொஞ்சம் குறைந்து தான் இருந்தது. இதை அதிகரிக்கும் நோக்கத்தில் தான் இந்த ஆண்டு 10 புதிய பாடத்திட்டங்கள் 13 பாலிடெக் னிக் கல்லூரிகளில் அறிமுகப்படுத்தி யிருக்கிறோம். அந்த 10 புதிய பாடத் திட்டங்களும் குறிப்பாக வேலை வாய்ப்பை அதிகரிக்கிற வகையில், மாணவர்கள் விரும்பும் வகையில் அமையவிருக்கின்றன. நீட் தேர்வு முடிவுக்குப் பின்னர் பொறி யியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளி யிடப்படும். பொறியியல் படிப்புகளுக்கு நேரடியாக விண்ணப் பிப்பது மாணவர்களுக்கு கடினம். எனவே ஆன்லைனில் அனைவ ரும் விண்ணப்பிக்க அனைத்து அரசுப்பள்ளிகளிலும் அதற்கான வசதிகளை செய்துதர பள்ளிக்கல்வித் துறை அமைச்சரிடம் தெரிவித்து, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது. அதுதவிர 100 இடங்களில் இருந்து விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே முறை கேடுகள் நடக்காத வகையில், மாண வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிப் பதற்கான பணிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.