states

img

உத்தரபிரதேசத்தில் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவர்

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவின் கந்தௌலி  காவல் நிலையப் பகுதிக்குட் பட்ட பகுதியான மாலுபூர். இந்த பகுதி யில் உள்ள பயிற்சி  பள்ளி ஒன்றில் ஆசிரி யர் வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது மாணவர் ஒருவர், சக மாணவி யிடம் பேசியுள்ளார்.  இதனைக் கண்ட ஆசிரியர் வகுப்பு  நேரத்தில் பேசுவதை தவிர்க்க வேண்டும்  என கண்டித்துள்ளார். உடனே மாணவர் தன் சகோதரரிடம் கூற, அவரது சகோதரர்  ஆசிரியரை போனில் மிரட்டியதாகக் கூறப்  படுகிறது. இந்த சம்பவம் நடந்து முடிந்து  6 மாதம் ஆகியிருந்த நிலையில், அக்டோ பர் 5 அன்று பயிற்சி மையத்துக்குச் சென்று  ஆசிரியரை அதே மாணவர் வெளியே அழைத்துள்ளார். ஆசிரியர் வெளியே  வந்ததும் மாணவர் துப்பாக்கியால் சுட் டுள்ளார். காலில் பலத்த காயமடைந்துள்ள  ஆசிரியர் சிகிச்சைக்காக மருத்துமனை யில் சேர்க்கப்பட்டு உள்ளார். ‘மீண்டும் வருவேன்’ மாணவர் ஆசிரியரை துப்பாக்கியால் சுடும் சம்பவத்தை மற்றொரு மாணவர் வீடியோ எடுத்துள்ளார். ஆசிரி யரை சுட்ட பின் மாணவர், “6 மாதங்க ளுக்குப் பிறகு மீண்டும் வருவேன். நான்  40 தோட்டாக்களை உன் உடலில் பாய்ச்ச  வேண்டும். இன்னும் 39 தோட்டாக்கள் மீதம் இருக்கிறது” என சினிமா பாணியில் வசனம் பேசி சமூக வலைத்தளத்தில் பதி விட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த  மாணவர்களைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.