தனியார் நிறுவனம் இயக்க உள்ள ரயிலை இந்திய ரயில்வேயே இயக்க கோரியும் தனியார் ரயில் இயக்கத்தைக் கண்டித்தும் வரும் 13ஆம் தேதி அனைத்து ரயில்வே ஊழியர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டனம் தெரிவிப்பார்கள். தனியார் ரயில் துவக்கப்படும் 14ஆம் தேதி தெற்கு ரயில்வே முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்கள் முன்பும் டிஆர்இயு, சிஐடியு இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளன. தனியார் மயத்திற்கு எதிரான இந்த போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று சிஐடியு கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னை, ஜூன் 10- முதல் தனியார் ரயில் இயக்கத்தை கண்டித்து வரும் 14ஆம் தேதி தெற்குரயில்வே அனைத்து ரயில் நிலையங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சிஐடியு அறிவித்துள்ளது. இதுகுறித்து சிஐடியு மாநில பொதுச்செய லாளர் ஜி.சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய ரயில்வே துறையின் முதல் தனியார் ரயில் தமிழகத்திலிருந்து துவக்கப்படுகிறது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை சிஐடியு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த ரயில் பிரதமர் மோடி அறிவித்த பாரத் கவுரவ் ரயில் (பிஜிடி) திட்டத் தின் அடிப்படையில் முதன் முறையாக அந்த தனியார் நிறுவனத்துடன் தென்னக ரயில்வேயின் ஆப்பரேட்டிங் துறை நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தையின் அடிப்ப டையில் இதர மண்டல ரயில்வேக்களுடன் பேசி ரயில்வே வாரிய அனுமதியுடன் இந்த பாரத் கவுரவ் ட்ரெயின் கோவை வடக்கு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சாய்நகர் சீரடியை சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஏற்கனவே, ஒன்றிய அரசு கொரோனா முதல் அலை முழு பொதுமுடக்க காலத்தில் 151 பயணிகள் ரயில்களை 12 தொகுப்பு களாக பிரித்து முழுக்க முழுக்க தனியார் இயக்க டெண்டர் வெளியிட்டது. ஆனால், தனியார் கார்ப்பரேட் துறையினர் யாரும் ரயிலை இயக்க விண்ணப்பம் சமர்ப்பிக்க வில்லை. ஐ.ஆர்.சி.டி.சி மற்றும் மெகா எலக்ட்ரானிக்ஸ் மட்டுமே விண்ணப்பித்தனர். வரவேற்பில்லாமல் தோல்வியில் முடிந்த காரணத்தினால் தற்போது எப்படியும் தனியாரிடம் தருவது என்ற அடிப்படையில் பாரத் கவுரவ் டிரெயின் என அறிவித்து இந்தியா முழுவதும் தனியார் இயக்கு வதற்கு அனுமதி அளித்துள்ளனர். கோவையை சேர்ந்த லாட்டரி அதிபர் சான்டியாகோ மார்ட்டின் நிறுவனம்தான் எம் அண்டு சி பிராப்பர்ட்டி டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிட்டெட். இவர்கள் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகளும், வருமான வரி ரெய்டு களும், சிக்கிம் அரசை ஏமாற்றியது, கைது நடவடிக்கை, ரியல் எஸ்டேட் நில அபகரிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரை ரியல் எஸ்டேட் வியாபாரம் நடத்தியவர்களுக்கு இப்போது ரயில் இயக்க உரிமம் அளிக்கப்பட்டுள்ளது. இதே தடத்தில் இதே நேரத்தில் ரயில்வே துறையே இந்த ரயிலை இயக்க இயலும். ஏனெனில் அதை இயக்கும் கார்டுகள், லோகோ பைலட்டுகள், தண்டவாளம் பராமரிப்பு செய்பவர்கள், ரயில் நிலைய பராமரிப்பு, உயர் மின்சாரம் ஓஎச்இ பராமரிப்பு என அனைத்தும் ரயில்வே ஊழியர்கள் தான் செய்கின்றனர். ரேக்குகளை சப்ளை செய்வதும் ரயில்வேதான். எதற்காக இந்த தனியார் ரயில் இயக்கம்? அனைத்தும் செய்யக்கூடிய ரயில்வே நிர்வாகமே இந்த ரயிலை இயக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். தனியாருக்கு வழங்கப் பட்டிருக்கும் இந்த உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என ஒன்றிய அரசை சிஐடியு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.