சென்னை, மே 25 - சென்னையில் உள்ள பல்நோக்கு அரசு மருத்து வமனை வளாகத்தில் அமைய உள்ள கருணாநிதி சிலை சென்னை வந்தது. இந்த சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங் கய்ய நாயுடு வரும் 28 ஆம் தேதி திறந்து வைக்கிறார். தமிழக சட்டப்பேரவை யில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “திருவாரூரில் முத்துவேலர் - அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாக கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி, அரசு விழாவாக இனி கொண்டா டப் படும். ஜூன் 3 அன்று சென்னை ஓமந்தூரார் அரசி னர் தோட்ட வளாகத்தில் கம்பீரக் கலைஞரின் கலை மிகு சிலை நிறுவப்படும்” என்றார். இந்நிலையில், ஓமந்தூ ரார் அரசினர் தோட்ட வளா கத்திலுள்ள பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளா கத்தில் சிலை அமைக்க பொதுப் பணித்துறை நட வடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி ரூ.1.56 கோடியில் சிலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடை பெற்று வந்தது.
இந்த சிலை முழுவதும் வெண் கலத்திலானது. சுமார் 2 டன் எடை கொண்டது. 16 அடி உயரம் கொண்ட இந்த சிலையை நிறுவ 12 அடி உயர பீடம் அமைக் கப்பட்டுள்ளது. இந்த நிலை யில் சிலை வடிவமைக்கும் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் தோட்ட வளா கத்தில் கருணாநிதியின் சிலை நிறுவப்பட்டது. கருணாநிதி சிலை திறப்பு விழா வருகிற 28 ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நடை பெறுகிறது. அதனைத் தொடர்ந்து சிலை திறப்புக்கான நிகழ்ச்சி அன்று மாலை 5.45 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. கருணாநிதி சிலையை குடி யரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். அமைச்சர் துரைமுருகன் வரவேற்கி றார். இதற்கான ஏற்பாடுகள் தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டு வருகிறது.