சென்னை,நவ.23- தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த விதிகளின் படி, தமிழ்நாடு மாநில பாதுகாப்பு ஆணையம் அமைக்கப் பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 2017 ஆம் ஆண்டு எதிர்க் கட்சித் தலைவராக இருக்கும் போது, மாநில பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும் என்று தலைமைச் செய லாளருக்கு கோரிக்கை விடுத் திருந்தார். இந்நிலையில், கூடுதல் தலைமை செயலாளர்(உள்துறை ) பனீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்: தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த விதிகளின் படி, தமிழ்நாடு மாநில பாதுகாப்பு ஆணையம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த குழு ஆண்டுக்கு ஒரு முறை கூட வேண்டும் என்று தெரி விக்கப் பட்டுள்ளது. இந்த குழுவின் கீழ் நிபுணர் குழுவும் அமைக்கப்பட வுள்ளது. பணியமைப்பு வாரியம் மாநில அளவிலான பணியமைப்பு குழுவில் நிர்வாகம், சட்டம் ஒழுங்கு மற்றும் உளவுத்துறை ஆகிய 3 பிரிவுகளின் கூடுதல் டிஜிபிக்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மண்டல அளவிலான குழுவிற்கு ஐஜி தலைவராக செயல்படுவார். மேலும், ஆயதப் படை மற்றும் சிறப்பு காவல் பிரிவுகளுக்கு என்று தனியாக பணிய மைப்புக் குழுக்கள் அமைக்கப்பட் டுள்ளன. சரகம் வாரியாகவும், மாவட்டம் வாரியாகவும் குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. சென்னை பெருநகர் காவல் துறையில் பெருநகர் குழு, மண்டல அளவிலான குழுக்கள், மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு நிலை யில் உள்ள காவல் துறையினரின் பதவி உயர்வு மற்றும் பணி இட மாற்றம் தொடர்பாக இந்த குழு முடிவுகளை எடுக்கும். சிபிசிஐடியில் புகார் பிரிவு தமிழ்நாடு காவல் துறையின் கீழ் சிபிசிஐடியில் புகார் பிரிவு அமைக்கப் படும் என்று இந்த விதிகளில் கூறப் பட்டுள்ளது. இதில் ஓய்வு பெற்ற பணி யாளர்களை பணியமர்த்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.