states

பெரியார் பல்கலை. துணைவேந்தர்- பதிவாளருக்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கடிதம்

சென்னை,ஜூன் 2- மாணவர்கள் உரிமையை பறிக்கும்; மக்களாட்சி மாண்புகளுக்கு எதிரான பெரியார் பல்கலைக்கழகச் சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி பல்கலைக்கழகத் துணை வேந்தர் மற்றும் பதிவாளருக்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலா ளர் பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு அனுப்பியுள்ள கடிதம் வருமாறு: துணை வேந்தரின் ஆணை நாள் 25.5.2022யை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக் கழக பதிவாளர் பல்கலைக் கழகத்தின் அனைத்துத் துறைகளுக்கும், கல்லூரி களுக்கும் 27.5.2022 அன்று ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்த சுற்றறிக்கை மக்களாட்சி மாண்புகளுக்கு முற்றிலும் எதிரானது.  மாணவர்கள் அரசியல் பேசினால் கல்லூரி வளாகம் பாதுகாப்பாக இருக்காது என்ற கருத்தாக்கம் மிகவும் தவறானது. கருத்துச் சுதந்திரத்தை  ஒவ்வொருவருக்கும் உத்தரவாதப்படுத்துவதை  இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை உறுதிப்படுத்துகிறது.  கருத்தை வெளிப்படுத்தும் உரிமையை மக்களுக்கு  அடிப்படை உரிமையாக இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. பொதுவாகவே கல்வியியல் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின்  வெளியிடும் முடிவுகள் “செயல்முறைகள்” (Pro ceedings) என்றே பெயரிடப்படுவது மரபு. அவ்வாறு இருக்க, “துணை வேந்தர் ஆணை “ என்ற பதிவாளர் சுற்றறிக்கையின் பார்வைக் கடிதத்தின் தலைப்பே சட்டத்தின் ஆட்சி என்ற மாண்பிற்கு உகந்தது அல்ல.

இன்று கல்வி வளாகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் நடக்கும் பல விரும்பத்தகாத சம்பவங்கள் அரசியல் விவாதம் நடத்தப்படுவதனால் அல்ல.  மாறாக முறைப்படி மாணவர் பேரவைத் தேர்தல் நடத்தாமல், மாணவர்கள் ஜன நாயக பயிற்சி எடுக்கும் வாய்ப்புகளை கல்லூரி, பல்கலைக் கழகங்கள் மறுத்து வருவதால் உருவாகியுள்ள அரசியலற்ற போக்கே அதற்கு காரணம்.  ஜன நாயக நெறிமுறைகளின் படி முறையான மாணவர் பேரவைத் தேர்தலை அனைத்து கல்வி வளாகங்களிலும் நடத்திட வேண்டும்.   பெரியார் பல்கலைக்கழகம்  மக்களாட்சி மாண்புகளுக்கு எதிரான தனது உத்தரவுகளை திரும்பப் பெற வில்லை என்றால் 1950களில் நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அறைகூவல் விடுத்த வாறு கல்வியியல் சுதந்திரத்தை காத்திடவும், இந்திய அரசமைப்புச் சட்டம் முன் வைக்கும் ஜனநாயக மாண்புகளை காத்திடவும் மாணவர்களும், ஆசிரியர்க ளும் ஜனநாயக வெளியை மறுக்கும், ஜனநாயக குரல் வளையை நசுக்கும் பல் கலைக் கழக உத்தரவுகளை எதிர்த்து வலுவான போராட்டத்தை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.