உலகின் சிறந்த சென் சார்களை கொண்ட அதி நவீன ‘வகிர்’ நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற் படையில் இணைக்கப் பட்டது.
உள் மதிப்பீடுகளில் ‘மோசமாகச் செயல்பட்ட தாகக் கூறி’ 452 புதிய ஊழியர்களை பணிநீக்கம் செய்ததை விப்ரோ நிறு வனம் உறுதிசெய்தது.
கூகுள் நிறுவனத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட 12,000 ஊழியர்களில் சிலர் உயர் செயல்திறன் மிக்கவர்கள், முக்கிய நிர்வாகப் பதவிகளில் இருந்தவர்கள். ஆண்டு க்கு 5 லட்சம் டாலர் முதல் 1 மில்லியன் டாலர் வரை ஊதியம் பெறுபவர்கள். சிறந்த ஊழியர்களை நீக்கி குறைந்த செயல் திறன் கொண்ட அதிக ஊழியர்களை வேலை க்கு அமர்த்த வேண்டும் என மேலாளர்களிடம் கூகுள் நிறுவனம் கூறிய தாக தி இன்ஃபர்மேஷன் நிறுவனம் தகவல் வெளி யிட்டுள்ளது.
2012-ஆம் ஆண்டு திரு வண்ணாமலையில் கிரி வலப் பாதையில் சமூக ஆர்வலர் ராஜ்மோகன் சந்திரா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் கவுன் சிலர் வெங்கடேசன், மீனாட்சி, முருகன் உள்ளி ட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பிளஸ் 2 படிக்கும் மாணவி யை காதலித்து, திரு மணம் செய்துகொள்வ தாக ஏமாற்றி கொலை மிரட்டல் விடுத்ததாக திருச்சி பாஜக இளை ஞரணி நிர்வாகி போக் சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 2022-ஆம் ஆண்டு மட்டும் 647 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், 44 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக வும் தகவல் வெளியாகி யுள்ளது.
2023-24 வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பாக பொது மக்கள் கருத்து தெரி விக்க தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். விவசாயிகளின் வருமா னம் உயர்வதற்கான திட்டங்கள் இடம்பெறும் எனக் கூறியுள்ளார்.
உலகச் செய்திகள்
உள்ளாட்சி அமைப்புகளுக்கு மார்ச் 9 ஆம் தேதியன்று தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு இலங்கையில் வெளியிடப் பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இலங்கையின் தேர்தல் ஆணையம் வெளியிட்டதன் மூலம், உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படும் என்ற ஊகங் களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பின் மூலமாக 340 கவுன்சில்களுக்கு தேர்தல் நடக்கவிருக்கிறது.
பிஜியில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் அரசு ‘ஒரு சீனா’ என்ற கொள்கையில் உறுதியாக இருப்பதாக அறிவித்திருக்கிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டுப் பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான சிடிவேனி ரபுகா, ‘‘ஒரு சீனா என்ற கொள்கை நாங்கள் ஆட்சியில் இருந்தபோதுதான் உரு வாக்கப்பட்டது. அந்த நிலைப்பாடு தற்போதும் தொடரும்’’ என்று குறிப்பிட்டார். 1992 ஆம் ஆண்டு முதல் 1999 வரை சிடிவேனி ரபுகா பிரதமராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். திடீரென்று துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தின் அருகில் சீன புத்தாண்டுக் கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. அந்தக் கொண்டாட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இந்தப் பகுதியில் 61 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். பெரும்பாலும் ஆசிய-ஆப்பிரிக்க மக்களே இந்தப் பகுதியில் உள்ளனர்.