சென்னை, ஜன. 13 - சிறு-குறு நடுத்தர தொழில்களை பாதுகாக்க கோவையில் மாநில மாநாடு நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. கட்சியின் மாநிலக்குழு கூட்டம் ஜனவரி 11 அன்று சென்னையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் இதுதொடர் பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: ஒன்றிய அரசின் நவீன தாராளமய கொள்கைகளால் தமிழ்நாட்டிலும் தொழில் நெருக்கடி தீவிரமாகியுள்ளது. சிறு-குறு நடுத்தர தொழில்கள் ஜி.எஸ்.டி. வரி உயர்வு, மூலப் பொருட்களின் விலையேற்றம், நூல்விலை உயர்வு, கடன் சுமை மற்றும் கடன் பெறுவதில் சிக்கல்கள், மின் கட்டண உயர்வு என பல தாக்குதல்களை எதிர்கொள்கின்றன. இதனால் கணிசமான நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இது தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை பாதிப்பதுடன் வேலை யின்மையையும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் மேற்கு மாவட்டங் களான கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள தொழில் நெருக்கடி தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை பாதித் துள்ளது. ஏற்றுமதி வளர்ச்சி குறைந்து போனதால் நாட்டின் பொருளாதாரத் திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், ஒன்றிய அரசு இந்த தொழில்களை பாது காப்பதற்கு நடவடிக்கை ஏதும் எடுக்கா மல் நிலைமையை மோசமாக்கிடும் கொள்கைகளையே தொடர்ந்து பின்பற்றி வருகிறது. மாநில அரசு அறிவித்த மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு மேலும் நிலைமையை மோசமாக்கி யுள்ளது. இந்நிலையில் சிறு-குறு நடுத்தர தொழில்களை பாதுகாக்க தமிழ்நாடு மக்கள் ஒன்றுபட்ட குரலை எழுப்பிட வேண்டும். தொழில் பாதுகாப்பு, சிறு-குறு நடுத்தர தொழில்களை நம்பி யுள்ள உழைக்கும் மக்களின் வாழ்வா தார பாதுகாப்பை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொழில் பாதுகாப்பு மாநில சிறப்பு மாநாடு கோயம்புத்தூரில் பிப்ரவரி மாத இறுதியில் நடைபெறுகிறது. இதில் மாநிலம் முழுவதிலுமிருந்தும், சிறு- குறு நடுத்தர தொழில் முனை வோரும், உழைக்கும் மக்களும் பல்லா யிரக்கணக்கில் பங்கேற்கிறார்கள்.