states

எரிபொருள் தட்டுப்பாடு நீடிக்கும் இலங்கை பிரதமர் ரணில் பேச்சு

கொழும்பு, ஜூன் 7- இலங்கையில் அடுத்து வரும் மூன்று வாரங்களில் எரிபொருளுக்கு கடும்  தட்டுப்பாடு ஏற்படும். எனவே எரிபொருளை யும் எரிவாயுவையும் முடிந்தவரை கவன மாகப் பயன்படுத்த வேண்டும். அத்தியா வசியமற்ற பயணங்களை மக்கள் முடிந்த வரை தவிர்க்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கேட்டுக்கொண்டுள்ளார். கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கை தனது அத்தியா வசிய மற்றும் எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிக நிதியுதவி தேவை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நாடாளு மன்றத்தில் உரையாற்றும் போது கூறினார். எரிபொருள் விநியோகத்தைச் பொறுத்த மட்டில் அடுத்த மூன்று வாரங்கள் கடுமை யாக இருக்கும். தட்டுப்பாடு நீடிக்கும்.  இலங்கை அரசுக்கு அடுத்த ஆறு மாதங் களில் எரிபொருள் இறக்குமதிக்காக மட்டும்  3,300 மில்லியன் டாலர்கள் தேவை எனக் கூறியுள்ளார். மேலும் இலங்கை மிக மோசமான நிதி நெருக்கடியைச் சந்தித்த போது தமது நாட்டிற்கு உதவிகள், கடன்கள்  வழங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளதாகக் கூறியுள்ளார்.