தமிழக மீனவர்களை தாக்கி விரட்டிய இலங்கை கடற்படையினர்
இராமேஸ்வரம்,நவ.24- இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் இருந்து புதன்கிழமை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு களில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவு கச்சத்தீவு மற்றும் நெடுந்தீ வுக்கு இடையே மீன்பிடித்துக்கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். மேலும் கைது செய்து விடுவார்கள் என்று இராமேஸ்வரம் மீனவர்கள் அச்சத் துடன் குறைந்தளவே மீன்களை பிடித்துகொண்டு வியாழக் கிழமை கரை திரும்பினர். மேலும் ஒவ்வொரு படகுக்கும் ரூ.30 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிரு ந்த பாரம்பரிய இடத்தில் மீன்பிடிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
240 நாள் நிதி சேகரிப்பில் எழுந்த அம்பேத்கர் சிலை 24 மணி நேரத்தில் தரைமட்டம்
லக்னோ, நவ.24- இஸ்லாமியர்களை குறி வைத்த உ.பி பாஜக அரசின் புல்டோசர் அரசி யல் அம்பேத்கர் சிலை மீதும் தன் கைவரிசையை காட்டத் துவங்கியுள்ளது. உத்தரப்பிரதேசம், பரேலி மாவட்டம், சிராலி நகரத்திற்கு அரு கில் உள்ள சகூகாராவில் நவம்பர் 6 இல் திறக்கப்பட்ட அம்பேத்கர் சிலை 24 மணி நேரத்தில் காவல் துறையால் தரைமட்டம் ஆக்கப்பட்டது. 8 மாதங்களில் இருந்து 12 மாதம் வரை மக்களிடம் நன்கொடை பெற்று நிறுவப்பட்ட சிலை அது. “அனுமதியின்றி” நிறுவப்பட்ட சிலையை “குறைந்த பட்ச பலப் பிர யோகம்” செய்து “மரியாதையாக” அகற்றி உள்ளதாக காவல் துறை யும், மாவட்ட நிர்வாகமும் கூறுகின்றன. ஆனால் அங்கே குடியிருக்கும் மக்கள் கூறுவது என்ன? அருகில் உள்ள ஐந்தாறு காவல் நிலையங்களில் இருந்து காவலர் படை குவிக்கப்பட்டது; சிலர் வீடு களின் கூரைகளில் ஏறி கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்; மற்ற வர்கள் வீடுகளுக்குள் புகுந்து கொடூ ரமாக தாக்கினர்; அவ்வாறு தாக்கும் போது சாதிய ரீதியான இழிவான வசவுகளை செய்தனர் என்பதே! தலித் அடையாளத்தை பாது காக்கும் முனைப்போடு வட இந்தி யாவின் பல இடங்களில் அம்பேத்கர் சிலை நிறுவப்படுகிறது; இத்தகைய சிலைகளை உடைப்பதன் மூலம் “உயர்” சாதியினர் தங்களின் மேலாதிக்கத்தை நிறுவுகிறார்கள் என்கிறார்கள் அப்பகுதியில் உள்ள சமூக செயற்பாட்டாளர்கள். உ.பி மாநிலத்தில் கடந்த ஓராண் டில் 6 அம்பேத்கர் சிலைகள் சிதைக் கப்பட்டுள்ளன. இது போன்ற உடைப்புகள் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களிலும் நடந் தேறி வருகின்றன. மேற்கு உ.பி.யில் என்ன நடக்கி றது என்று பீம் சேனா வழக்கறிஞர் விகாஸ் பாபு கூறுவது இது: “சிலையை சிதைப்பவர்கள் சிலர் விரலை உடைக்கிறார்கள். வேறு வகையிலும் உடைக்கி றார்கள். சிலர் சிலை அமைந்துள்ள பூங்காவை அலங்கோலம் செய்கி றார்கள். தலித் சமூகங்கள் பல அம்பேத்கர் சிலையை நிறுவும் முனைப்பை வெளிப்படுத்த வெளிப் படுத்த இத்தகைய தாக்குதல்களும் அரங்கேறுகின்றன.”
அரசு கேபிள் டிவியில் உலக கோப்பை கால்பந்து போட்டி
சென்னை,நவ.24- தமிழ்நாட்டில் பெருகிவரும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்காக, உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தா ரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப் படும் ஸ்போர்ட்ஸ் 18 என்ற தனியார் தொலைக்காட்சி சேனலை அரசு கேபிள் டிவியில் இலவசமாக பார்க்கலாம் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
ரூ.1000 உரிமைத் தொகை: அமைச்சர் ஆலோசனை
சென்னை,நவ.24- குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக பொருளாதார நிபுணர்களு டன் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தினார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “முதல்வரின் புரட்சிகரமான உரிமைத் தொகை திட்டத்தின் செயல்முறைகள் உள்ளிட்ட பல தலைப்புகளில் நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றது. போலிச் செய்திகளை வைத்து திட்டமிட்டு அவதூறு பரப்பும் சக்திகள் நம்மை என்றைக் கும் சமூகநீதி இலக்கிலிருந்து திசை திருப்ப முடியாது”என்று கூறியுள்ளார்.
14.6 லட்சம் குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை
சென்னை,நவ.24- தமிழகத்தில் 14.6 லட்சம் குடும்பங்க ளுக்கு வங்கிக் கணக்கு இல்லை என்று கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்திலுள்ள ரேசன் கடை களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெறு வது தொடர்பாக அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்களுக்கான பயிற்சி முகாமை கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்மு கசுந்தரம் சென்னையில் வியாழனன்று (நவ.24) தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாக மங்க ளம், மருதம், அர்த்தணாரீஸ்வரர் போன்ற பெயர்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள பிரபலமான பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவை அனைத்துக்கும் ஒரே மாதிரியான பெயரிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தரமான பொருள்கள் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்”என்றார். தமிழகத்தில் செயல்படும் நியாய விலைக் கடைகளில் 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியமான பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 14 லட்சத்து 60 ஆயிரம் குடும்ப அட்டைதாரர் களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்படாமல் உள்ளது. வங்கிக் கணக்கு தொடங்கப்படாத குடும்ப அட்டைதாரர்களை அந்தந்த பகுதிகளில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் புதிய வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம்
சென்னை,நவ.24- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ரூபி மனோ கரனை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உத்தரவிட்டுள்ளது. சென்னையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கடந்த வாரம் அக்கட்சியைச் சேர்ந்த இரு குழுவினர் இடையே மோதல் நடை பெற்றது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கே.ஆர். ராமசாமி தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கைக்குழு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.
குஜராத்தில் போட்டியிடும் 7 ‘பில்லியனர்’ வேட்பாளர்களில் 5 பேர் பாஜக-வினர்!
அகமதாபாத், நவ. 24 - குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 100 கோடிக்கும் அதிகமான சொத்துமதிப்பு கொண்ட ‘பில்லியனர்’ வேட்பாளர்கள் 7 பேரில் 5 பேர் பாஜக-வினராக இருப்பது தெரியவந்துள்ளது. இந்தப் பட்டியலில், காந்திநகரின் மான்சா வில் போட்டியிடும் ஜெயந்தி படேல் (64) ரூ. 661 கோடியே 28 லட்சம் மதிப்பிலான அசையா மற்றும் அசையும் சொத்துகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். படிதார் வகுப்பை சேர்ந்த பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதலாளியான ஜெயந்தி, தனக்கு ரூ. 147 கோடிக்கு அசையும் சொத்துகள், ரூ. 514 கோடிக்கு அசையாச் சொத்துக்கள் மற்றும் ரூ. 233 கோடிக்கு கடன்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். பதான் மாவட்டம் சித்பூரில் போட்டி யிடும் பாஜக வேட்பாளர் பல்வந்த்சிங் ராஜ்புத் (61), தனது சொத்து மதிப்பு ரூ. 367 கோடியே 89 லட்சம் என்று தெரிவித்துள் ளார். கோகுல் குழும முதலாளியான இவர், ரூ. 266 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்கள், ரூ. 101 கோடிக்கு அசையா சொத்துக்கள் இருப்பதாக கூறியுள்ளார். ராஜ்கோட் மாவட்டம் ராஜ்கோட் தெற்குத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ரமேஷ் திலாலா (57) பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர். எனினும், லீவா படேல் பிரிவின் சக்திவாய்ந்த ஸ்ரீகோடல்தாம் அறக்கட்டளையின் அறங் காவலராக உள்ளார். இவர் தனது மனைவி யின் சொத்துக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் கணக்கின் கீழ் ரூ. 16 கோடியே 35 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள், ரூ. 156.42 கோடி மதிப்பி லான அசையாச் சொத்துக்கள் என மொத்தம் ரூ. 172 கோடியை சொத்து மதிப்பில் காட்டியுள்ளார். இதேபோல, துவாரகா தொகுதி பாஜக வேட்பாளர் பபுபா மானெக் தனக்கிருக்கும் அசையா மற்றும் அசையும் சொத்துக்கள் ரூ.115 கோடி என்றும், ஜூனாகத்தில் உள்ள மானவதார் தொகுதி பாஜக வேட்பாளர் ஜவஹர் சாவ்தா (58), ரூ. 25 கோடியே 49 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துகள் மற்றும் ரூ. 104 கோடியே 66 லட்சம் மதிப்பு ள்ள அசையா சொத்துகள் என மொத்தம் ரூ. 130 கோடிக்கும் கணக்குகாட்டியுள்ளனர்.