மதுரை, ஏப்.3- இராமேஸ்வரத்தில் இருந்து இராமேஸ்வரம், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்றனர். அனைத்துப் படகுகளும் துறைமுகத்திற்குத் திரும்பிய நிலையில், 12 மீனவர்கள் சென்ற திரும்பவில்லை. அவர்கள் வடகிழக்கு பகுதியில் சர்வ தேசக் கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி சென்று மீன்பிடித்த தாகக் கூறி, இலங்கை கடற்படை கைது செய்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை, மைலடி மீன்பிடி துறைமுகத் திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்கள் இலங்கை கடலோரக் காவல்படை வடக்கு பிராந்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்படு வர் எனத் தெரியவந்துள்ளது. மார்ச் 23 அன்று 16 மீனவர்கள், மார்ச் 29 அன்று 4 மீனவர்கள் உட்பட இரண்டு வாரங்களில் தற்போது மூன்றாவது முறை யாக இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இராமேஸ்வரத்தில் உள்ள மீனவர் சங்கங்கள் இலங்கைக் கடற்படையின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்ததோடு, கைது செய்யப்பட்ட அனைத்து இந்திய மீனவர்களையும், படகு களையும் உடனடியாக விடு விக்க நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தியுள்ளன. இதற்கிடையில் இராமநாத புரம் மக்களவை உறுப்பினர் கே. நவாஸ் கனி இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளார்.