states

img

மண்-வாழ்வியல் சார்ந்த கல்வியே தேவை!

சென்னை,ஏப். 11- கல்விமுறை பாடத்திட்டம் என்பது  அந்த பகுதி மக்களின் மண் சார்ந்த தாக இருக்க வேண்டும். அவர்களின் பண்பாடு சார்ந்ததாக இருக்க வேண்டும். அவர்களின் வாழ்வியல் சார்ந்ததாக இருக்க வேண்டும் இது தான் கல்வி முறை என்றும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி குழுத் தலைவர்  நாகை மாலி தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்களன்று (ஏப்.11) உயர்க் கல்வி மற்றும் பள்ளிக் கல்விதுறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடை பெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் நாகை வி.பி.மாலி பேசியது வருமாறு: 2021-22 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற் கென்று தனியாக கல்விக் கொள்கை உருவாக்குவோம் அதற்கான உயர்நிலைக்குழு அமைக்கப்படும் என  உறுதியளித்தீர்கள். அது தற்போது செயல்வடிவம் பெற்றிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாராட்டுகிறோம்.

இந்தியாவிலேயே கலைஞர் தான்  முதன்முதலில் 1969 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராஜமன்னார் தலைமையில் ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய்ந்து  அறிக்கையளிக்க ஒரு குழு அமைத்தார். அக்காலகட்டத்தில் தான்  கலைஞர் எழுப்பிய “மாநிலத்தில் சுயாட்சி, ஒன்றியத்தில் கூட்டாட்சி” என்ற முழக்கம் இந்திய நாடு முழுவதும் எதிரொலித்தது. அதே வழியில் நின்று இந்தியாவில் முதன்முதலாக நமது தமிழக முதலமைச்சர், தமிழ கத்திற்கென்று தனியாக ஒரு கல்வி  வடிவமைப்புக்குழுவை உருவாக்கி யிருக்கிறார் என்பதை இந்த அவையின்  கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

பிற்போக்கு கருத்தியல் திணிப்பு

புதிய தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஒட்டுமொத்த கல்வித் துறையையும் ஒன்றிய அரசின் தன் வசமாக்கும் முயற்சியை மேற்கொண் டுள்ளது. ஒரு காலத்தில் மாநிலங்க ளின் பட்டியலில் இருந்த கல்வி ஒத்திசைவு பட்டியலுக்கு மாற்றப்பட்டு  தொடக்க கல்வி முதல் உயர் கல்வி வரை ஒன்றிய அரசு தன்வசம் எடுத்துக் கொண்டிருக்கிறது. இது  கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது  மட்டுமல்ல. கல்வியில் பிற்போக்குத் தனமான கருத்தியலை திணிப்பதற் காக மேற்கொள்ளப்படும் முயற்சியா கும். உலகத்தில் ஒரு நாட்டிற்கு என்று  ஒரே கல்விக் கொள்கை எந்த நாட்டிலும் இல்லை. வளர்ந்த நாடுகள்  என்று சொல்லப்படுகிற அமெரிக்கா வில் கூட இல்லை. கல்விக் கொள்கை அப்படி இருக்கவும் முடியாது. கல்வி என்பது - பாடத்திட்டம் என்பது அந்த பகுதி மக்களின் மண் சார்ந்ததாக இருக்க வேண்டும். அவர்களின் பண்பாடு  சார்ந்ததாக இருக்க வேண்டும். அவர்க ளின் வாழ்வியல் சார்ந்ததாக இருக்க வேண்டும். இதுதான் கல்வி முறை.

முதல்வரின் போர் முழக்கம்

கலைஞர் வழியில் நின்று மாநில உரிமைகளுக்கான குரலை நமது முதலமைச்சர் தில்லி நோக்கி வலுவாக எழுப்பி வருகிறார். சமீபத்தில் கேரள  மாநிலம் கண்ணூர் நகரில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டையொட்டி நடை பெற்ற “மாநில உரிமைகள் பாதுகாப்பு”  கருத்தரங்கை கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனோடு நமது முதலமைச்சர் கலந்து கொண்டு ஒரே மேடையில் உரையாற்றினார்.  அந்த கருத்தரங்கில் நமது முதலமைச்சர் தமிழில் பேசினார், ஆங்கிலத்தில் பேசினார், மலையா ளத்திலும் பேசினார். நமது முதலமைச்சரின் உரையை அரங்கில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான எங்கள் கட்சி ஊழியர்கள் கேட்டு நீண்ட கரவொலி எழுப்பி வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். நமது முதலமைச்சரின் பேச்சு மாநில உரிமையை பறிக்கும் ஒற்றைவாத அரசியலுக்கு எதிரான போர்முழக்கம் என நாங்கள் பார்க்கிறோம். தமிழகத்திற்கு என தனிக் கல்விக்  கொள்கையை உருவாக்க தாங்கள்  அமைத்திருக்கும் கல்விக் கொள்கை  வடிவமைப்புக்குழுவில் கல்வித்துறை யில் ஆழ்ந்த அனுபவசெறிவு மிக்க வர்களையும், துறை சார்ந்த வல்லுநர்க ளையும் மக்கள் கல்வி, அறிவியல் மற்றும் அறிவொளி இயக்கங்களில் பணியாற்றிய ஆளுமைகளையும் நீங்கள் இனம் கண்டு நியமித் திருப்பது கல்வித்துறையை ஜனநாய கப்படுத்தும். தமிழகத்தின் மதச்சார் பற்ற பாரம்பரியத்தின் வழிநின்று அறி வியல் பூர்வமான கல்விக் கொள் கையை உருவாக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எங்களுக்கு உண்டு. பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சியினர் ஆகியோரிடம் கருத்துக்களை கேட்டு, இந்த குழு தேவையான பரிந்துரைகளை அளிக்க  வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.