states

சென்னையில் 3 மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள்

சென்னை, செப்.15- நிபா வைரஸ் பாதிப்பு தமிழ் நாட்டில் பரவாமல் தடுப்பதற் கான நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ள நிலையில்,  முன் எச்சரிக்கையாக அரசு  மருத்துவமனைகளில் அதற்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவை, தேனி, கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி மருத்துவ மனை உள்ளிட்ட பல இடங்க ளில் தனி அறைகள் அமைக்கப் பட்டு தனித்தனியே சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள தாகவும், ஒருவேளை நிபா வைரஸ் பாதிப்புடன் எவரேனும் அனுமதிக்கப்பட்டால் அவரிடம் இருந்து பிறருக்கு பரவாமல் தடுப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து மருத்துவ கல்வி ஆராய்ச்சி இயக்க அதிகாரிகள் கூறியதாவது:- தற்போது நிபா வைரஸ் தொற்று கேரளாவில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதன் தாக்கம் எதுவும் இல்லை. இதுவரை இந்த அறிகுறிகளுடன் எவரும் மருத்துவமனைகளில் அனு மதிக்கப்படவில்லை. இருந்த போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.அதற்கென சிறப்பு  அறைகள் அனைத்து வசதிகளு டன் அமைக்கப்பட்டு உள்ளன.  மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடை கள், கவசங்களும் இருப்பில் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.