சென்னை,ஏப்.25- பல்கலைக்கழகத் துணை வேந்தர் களை மாநில அரசே நியமிக்கும் வகை யில் கொண்டு வரப்பட்ட சட்டமுன் வடிவை ஆதரித்து பேசிய சட்டமன்ற கட்சித் தலைவர்கள்,“ஒன்றிய அரசிடம் இழந்து வரும் நமது உரிமைகளை மீட்டெடுக்கும் முதல்வரின் நடவடிக்கை வரவேற்க தக்கது என்றும் இந்த சட்டத்திருத்தம் மாநில உரிமை களை பாதுகாக்கும் என்றும் தெரி வித்தனர். தமிழ்நாடு பல்கலைக் கழங்கள் மேலும் திருத்துவதற்கு தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மசோதாக்க ளுக்கும் முழுமையாக ஆதரவு தெரி வித்து உரையாற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் நாகை மாலி,“ துணை வேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரம், மக்களாட்சியின் முதல்வ ருக்கு வழங்கும் வகை வகை செய்யும் மசோதாவை வரவேற்றார். தொடர்ந்து பேசிய தலைவர்கள், “அரசு அறிவித்திருக்கும் 13 பல்கலைக் கழகம் மட்டுமின்றி எம்ஜிஆர் மருத்து வப் பல்கலைக் கழகம், கால்நடை, விவசாயம் உள்ளிட்ட அனைத்து பல்கலைக் கழக துணை வேந்தர் நியம னங்களையும் மாநில அரசின் அதிகாரத் திற்கு கொண்டு வரவேண்டும் என்றும் கடந்த நான்கு ஆண்டுகளில் நியமிக்கப் பட்டிருக்கும் வலதுசாரி சிந்தனை யாளர்களை அடையாளம் கண்டு அவர் களை நீக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
காலனி ஆதிக்கம்
காலனி ஆதிக்க காலத்தின் நடை முறைகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனையளக்கிறது. வெள்ளையர்கள் ஆட்சியின்போது ஊட்டியில் ஆளுநருக்கு ஒரு தங்கும்விடுதி கொடுத்துள்ளனர். அதை இப்போதும் தொடர்ந்து பின்பற்றி வருவது சரியில்லை. ஊட்டி மற்றும் கிண்டியில் ஆளுநருக்கு கொடுத்திருக்கும் விடுதிகளை திரும்பப்பெற்றுக்கொண்டு அமைச்சர்க ளுக்கு ஒதுக்கப்பட்டி ருக்கும் பகுதியில் இடம் கொடுக்க வேண்டும் என்றனர். அரசியல் அமைப்பு சாசனத்திற்கும் மாண்புகளுக்கும் எதிராக மாநில அரசு, முதலமைச்சர், துறையின் அமைச் சரையும் துளிக்கூட மதிக்கா மல் தனியாக செயல்படும் ஆளுநரின் நடவடிக்கைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நமது கல்வி மரபின் மீது ஒன்றிய பாஜக அரசு தொடுத்துக்கொண்டிருக்கும் தாக்குதல்களை முறியடிக்க ஆளுநரை மாநில அரசே நியமிக்க அதிகாரத்தையும் கொண்டு வரவேண்டும்.
மாநில உரிமை மீது போர் தொடுப்பு
சட்டமன்ற கட்சித் தலைவர்களின் விவாதங்களுக்கு பிறகு பேசிய உயர்க்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி,“ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசால் நியமிக்கும் ஒரு பிரதிநிதி. எனவே, துணைவேந்தர்களை நியமிக்கும் முழு அதிகாரமும் மக்க ளால் தேர்வு செய்யப்பட்ட முதல்வருக்கு தான் வழங்கப்படும். தற்போது 13 பல்கலைக் கழகங்களுக்கு மட்டுமே சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இந்த நடைமுறை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக் கழங்களிலும் பின்பற்ற விரிவுப்படுத்தப்படும்” என்றார். தமிழ்நாட்டில் மாநில சுயாட்சிக்கும், புதிய கல்வி கொள்கைக்கு எதிராகவும் அதிமுக, பாஜக கட்சிகள் செயல்பட்டு வருகிறது என்றும் குற்றம் சாட்டினார். ஒன்றிய அமைச்சர் அனுப்பியுள்ள கடிதம் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் பொன்முடி,“மாநில உரிமைகளில் தலையிடமாட்டோம் என்று கூறிவிட்டு, ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை எப்படியும் நடை முறைப்படுத்த வேண்டும் என்பதில் பாஜக அரசு உறுதியாக செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.