states

மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எஸ்.எம்.எஸ் வந்தால் எச்சரிக்கை தேவை

சென்னை, ஜூலை 2- வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப் படும் எனக் கூறி தொடர்புகொண்டு பேசுபவர்கள் மற்றும் குறுஞ்செய்தி அனுப்புபவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. சமீப காலமாக சைபர் கிரைம் குற்ற வாளிகள் பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் நோக்கத்தில் புது  யுக்தியைக் கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது பொது மக்களின் செல்போன் எண்ணுக்குத் தங்கள் வீட்டின் மின் இணைப்பு  இன்று இரவோடு இரவாக துண்டிக்கப் படும் என்றும்; மேலும், சென்ற மாத  பில் கட்டணம் அப்டேட் செய்யப்பட வில்லை எனவும்; உடனே மின்வாரிய அலுவலரைத் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளுங்கள் என்று ஒரு மொபைல் எண்ணையும் சேர்த்து குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் புது யுக்தி இதனை நம்பி தொடர்பு கொள்ளும் பொதுமக்களிடம், வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று, அவர்களது அக்கவுன்ட்டில் இருந்து பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இதன் காரணமாக பொதுமக்கள் மின் இணைப்புத் துண்டிக்கப்படும் என்று வரும் போலியான அழைப்பு களையும், குறுஞ்செய்திகளையும் நம்பி ஏமாற வேண்டாம் எனவும், அந்த  செல்போன் எண்களைத் தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும் சென்னை காவல் துறை எச்சரித்துள்ளது. மின்வாரியத்தில் இருந்து இது போன்ற குறுஞ்செய்திகளோ, செல்போன் அழைப்புகளோ வராது என்பதால் அனைவரும் கவனமுடன் இருக்குமாறும் பொதுமக்களைச் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.  இதேபோல, அரசு அலுவலர்களின் புகைப்படங்களை வாட்ஸ்அப்பில் டி.பி-யாக வைத்து தெரியாத எண்க ளில் இருந்து வரும் தகவல்களை  நம்ப வேண்டாம் என அவர்  அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள்  யாரும் தங்களுக்குத் தெரியாத நபர்களிடமிருந்து வரும் குறுஞ் செய்திகளைப் புறக்கணிக்குமாறும்  அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

;