அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறைகூவல்
புதுதில்லி, ஜூன் 11- மோடி அரசாங்கம், 2022-23ஆம் ஆண்டிற்கான வேளாண் விளை பொருட்களுக்கு மிகவும் அற்ப அளவி லேயே ஆதார விலை உயர்வினை அறி வித்திருப்பதற்கு அகில இந்திய விவ சாய சங்கம் கடும் கண்டனம் தெரிவித் துள்ளது. இதற்கு எதிராக நாடு தழுவிய அளவில் கண்டன முழக்கங்களை எழுப் பிட அறைகூவல் விடுத்திருக்கிறது. மோடி அரசாங்கம், அரிசி, சோளம், உளுத்தம்பருப்பு, கடலை முதலான வற்றிற்கு வெறும் 7 விழுக்காடும், கம்புக்கு வெறும் 8 விழுக்காடும் மட்டுமே குறைந்தபட்ச ஆதார விலையில் உயர் வினை அறிவித்திருக்கிறது. பெரும் பாலான பயிர்களுக்கு, இந்த உயர்வு என்பது பொருளாதாரத்தில் இப்போது ஏற்பட்டுள்ள பொதுப் பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் உயர்வே கிடையாது.
எரிபொருள், இடுபொருள் கடும் விலை உயர்வு
இப்பயிர்கள் அனைத்திற்குமான எரி பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதாலும், மற்றும் பல இடுபொருட்களின் விலைகளும் உயர்ந்திருப்பதாலும், பெருமளவில் இவற்றுக்குத் தட்டுப்பாடுகள் ஏற்பட்டி ருப்பதாலும் இவற்றைப் பயிரிடுவதற் கான விவசாயிகளின் உற்பத்திச் செலவு கள் கடுமையாக உயர்ந்திருக்கின்ற நிலையில்தான் இந்த அற்ப உயர்வும் செய்யப்பட்டிருக்கிறது என்பதைக் குறித்துக்கொள்ள வேண்டியது முக்கி யமாகும். சென்ற பருவத்தின்போதுகூட, செயற்கை உரங்கள் பற்றாக்குறை கார ணமாக கள்ளச் சந்தையில் அதீத விலைக்கு விற்கப்பட்டன. அமெரிக்கா வும், ஐரோப்பிய ஒன்றியமும் பெலா ரஸ் மற்றும் ரஷ்யாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகள் விதித்திருப்ப தால் இப்போது நிலைமை மேலும் மோச மாகி இருக்கிறது.
அதிக விலையில் இறக்குமதி இந்திய விவசாயிகளுக்கு குறைந்த விலை
உணவுப் பொருள்களின் விலை கள் உலக அளவில் உயர்ந்திருக்கக் கூடிய சமயத்தில்தான் ஒன்றிய அர சாங்கம் இப்படி அற்ப உயர்வை அளித்தி ருக்கிறது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், சமையல் எண்ணெய்கள் மற்றும் பருப்பு வகை களில் பெரும்பாலானவற்றை இந்தியா இறக்குமதி செய்துகொண்டிருக்கக் கூடிய நிலையில், அதற்கு அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில், அவற்றையே நம் நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய விவசாயி களுக்குக் கொடுக்கக்கூடிய விலை மிக வும் குறைவாக இருக்கும் என்பதாகும். இந்திய விவசாயிகளுக்கு அவர்கள் உற் பத்தி செய்யும் வேளாண் பொருட் களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய நிலை யில் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்தால்தான் இப்பொருட் களை அவர்கள் அதிக அளவில் உற் பத்தி செய்வார்கள், இவற்றை இறக்கு மதி செய்வது என்பதும் குறையும். ஆனால் இதனைச் செய்ய ஒன்றிய அரசாங்கம் முன்வராமல், இந்திய விவ சாயிகளுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
மோடி அரசின் மோசடி
மேலும் ஒன்றிய அரசாங்கம் உற் பத்திச் செலவினத்தைப்போல் ஒன்றரை மடங்கு விலை நிர்ணயம் செய்து குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்தி ருப்பதாகத் தவறான தகவலையும் அறி வித்திருக்கிறது. குறைந்தபட்ச ஆதார விலையை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையம் பரிந்து ரைத்ததுபோல் (சி 2 + 50) செய்ய அது மறுக்கிறது. இவ்வாறு மோசடியாக ஒன்றிய அரசு செயல்பட்டிருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் விவசாயி கள் உற்பத்தி செய்த வேளாண் பொருட் களை அரசே கொள்முதல் செய்வது என்பது இல்லை. எனவே இப்போது ஒன்றிய அரசு அறிவித்துள்ள அற்ப உயர்வையும்கூட நாட்டில் மிகச் சிறிய பகுதியிலேயே விவசாயிகள் பெறக் கூடிய வாய்ப்பு உண்டு. மோடி அரசாங்கத்தின் இத்தகு மோச டித்தனமான அற்ப உயர்வைக் கண் டித்து, விவசாயிகள் நாடு தழுவிய அள வில் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று அகில இந்திய விவ சாயிகள் சங்கம் அறைகூவல் விடுத்துள் ளது. (ந.நி.)