states

சிபிஐ ரெய்டு சுவாரஸ்யமானது...

சென்னை, மே17- சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய சென்னை, மும்பை, தில்லி என 7 நகரங்களில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாயன்று சோதனை நடத்தினர். 2010 முதல் 2014 வரையிலான 260 சீன நாட்டவர்களுக்கு சட்டவிரோதமாக விசா பெற்றுத்தருவதற்காக கார்த்தி சிதம்பரம் ரூ. 50 லட்சம் பெற்றார் என்று புதிய வழக்கு ஒன்றையும் அவர்கள் பதிவு செய்தனர். இந்நிலையில், “இந்த தேடுதல் நடத்தப்படும் நேரம் சுவாரஸ்யமானது என்பதை சுட்டிக்காட்டுகிறேன்” என்று கார்த்தி சிதம்பரத்தின் தந்தையும், முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் காலியாகும் மாநிலங்களவை இடத்திற்கு ப. சிதம்பரம் நிறுத்தப்படலாம் என்று ஊட கங்களில் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இதனையே ‘சுவாரஸ்யமான நேரம்’ என்று ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.