states

தீக்கதிர் விரைவு செய்திகள்

கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக திட்டம் :  சிசோடியா குற்றச்சாட்டு

புதுதில்லி, நவ. 25- “தில்லி மாநகராட்சித் தேர்தலில் பணம் கொடுப்பவர்களுக்கு ஆம் ஆத்மி சீட் கொடுப்பதாக வெளியான குற்றச்சாட்டால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள் கூட தாக்கப்படுகின்றனர். இதுபோல அர்விந்த்  கெஜ்ரிவாலுக்கும் நடக்கக் கூடாது. அவரது பாதுகாப்பு ஏற்பாடுகள் கவலை  அளிக்கிறது”  என பாஜக எம்.பி. மனோஜ் திவாரி கூறியிருந்தார். இந்நிலையில், குஜராத் சட்டமன்றத் தேர்தல் மற்றும் தில்லி மாநகராட்சித் தேர்தல் ஆகியவற்றில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் சூழல் நிலவுவதால், பாஜக கடும் விரக்தியில் உள்ளது. இந்த  தோல்வி பயத்தின் காரணமாக கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக பயங்கர சதித்திட்டம் தீட்டியுள்ளது” என்று தில்லி துணைமுதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம்  சாட்டியுள்ளார்.

‘அமேசான் வழியாக ஒன்றிய அரசு அனுப்பிய பார்சல்தான் ஆளுநர்’

மும்பை, நவ. 25- “அமேசான் வழியாக மகாராஷ்டிராவுக்கு ஒன்றிய அரசு அனுப்பிய பார்சல்தான் இந்த ஆளுநர் (பகத்சிங் கோஷ்யாரி). இரண்டு முதல் ஐந்து நாட்களுக்குள் அவரை  திரும்ப அழைத்து செல்லாவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டம் அல்லது பந்த் நடத்தப்படும். நீங்கள் அனுப்பிய ‘சேம்பிளை’ எடுத்து செல்லுமாறு ஒன்றிய அரசிடம் கேட்டுக் கொள்கிறோம். தேவைப்பட்டால் அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்கலாம். மாநிலத்தில் அவர் எங்களுக்கு தேவையில்லை. இப்படி (அவர்) நாக்கு தவறுவது ஒவ்வொரு முறையும் நடக்காது. மகாராஷ்டிரா அமைதியாக உட்காராது” என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார்.

பணக்காரர்களுக்கு வரிச்சலுகை : ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு

டோக்கியோ, நவ.25- 10 கோடி யென்னுக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதற்கு ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜப்பானில் பெரும் பணக்காரர்களுக்கு வரிச்சலுகைகள் தருவதும், அதை ஈடுகட்ட சாதாரண மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றுவதும் வழக்கமான ஒன்றாகும். அண்மையில் 10 கோடி யென்னுக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு வரி விகிதத்தைக் குறைக்க ஜப்பான் அரசு முடிவு செய்தது. இதிலிருந்து ஏற்படும் இழப்பையும் சாதாரண மக்கள் மேல்தான் அரசு சுமத்தும் என்பதால் இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஜப்பான் நாடாளுமன்ற மேலவையின் நிதி விவகாரக்குழுவின் கூட்டத்தில் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் கோய்கே அகிரா இந்தப் பிரச்சனையை எழுப்பினார். இந்த விவாதத்தில் பதில் அளித்த நிதியமைச்சர் சுசுகி ஷன்சி. அதிக வருமானம் ஈட்டுபவர்களை விட குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள்தான் அதிகமாக வரி செலுத்துகிறார்கள் என்பதை ஒப்புக் கொண்டார். அக்டோபர் மாதத்தில் அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரமே இதைத்தான் காட்டுகிறது என்று உறுப்பினர்களும் சுட்டிக்காட்டினர். இது குறித்து மேலும் பேசிய ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அகிரா, “தனது திட்டங்களையும், கொள்கைகளையும் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். 10 கோடி யென் போன்ற வரம்பெல்லாம் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட எந்த நாடுகளிலும் இல்லை. சொல்லப்போனால், வருமானம் அதிகரிக்க, அதிகரிக்க கூடுதல் வரிகள் அந்த நாடுகளில் விதிக்கப்படுகின்றன. அதை அரசு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்” என்று குறிப்பிட்டார்.

பட்டதாரி ஆசிரியர்களின் கலந்தாய்வு ஒத்திவைப்பு

சென்னை,நவ.25- பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படு வதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறையில் முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரி யர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு  நவம்பர் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில்  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில் 28 ஆம் தேதி நடை பெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு மட்டும் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக் கப்படுவதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அறிவித்துள்ளார். இக்கலந்தாய்வு டிசம்பர் 9 ஆம் தேதி அன்று நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு திட்டமிட்டபடி நவம்பர் 29 ஆம் தேதி நடைபெறும் என்றும் பள்ளிக்  கல்வித்துறை ஆணையர் அறிவித்துள் ளார்.

மாதர் சங்கத் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு

சென்னை, நவ. 25 - கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் போக்சோ சட்டப் பிரிவை சேர்க்க  கோரி போராட்டம் நடத்திய அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள் ளது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி  ஸ்ரீமதி மரண வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும், போக்சோ பிரிவை சேர்க்க வேண்டும், குடும்பத் திற்கு நிவாரணம் தர வேண்டும், குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி வியாழனன்று (நவ.24)  சென்னை டிஜிபி அலுவலகம் அருகே மாதர்  சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். காவல்துறை அனுமதி மறுத்து, கடும்  அடக்குமுறைகளை ஏவிய நிலையில்,  அவற்றையெல்லாம் மீறி  இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத் தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், போராட்டத்திற்கு தலைமை தாங்கிய சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர்  உ.வாசுகி, கே.பாலபாரதி உள்ளிட்ட 257 பேர் மீது மெரினா காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவு  143, 145, 290, மாநகர காவல் சட்டம் பிரிவு 4  ஆகியவற்றின் கீழ் வழக்கு பதியப்பட்டுள் ளது.

உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்ற பரிந்துரை

சென்னை,நவ.25- சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி வி.எம்.வேலுமணியை இடமாற்றம் செய்யுமாறு குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு (கொலீஜியம்) பரிந்துரை செய்துள்ளது. உச்ச நீதிமன்ற கொலீஜியம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் கூடியது. அப்போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு  தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் டி.ராஜாவை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.எம்.வேலுமணியை கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கும் இட மாற்றம் செய்ய குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது. மேலும், ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பணிபுரிந்து வரும் நீதிபதி பட்டு தேவானந்த் மற்றும் தெலுங்கானா உயர்  நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் நீதிபதி  டி.நாகார்ஜூன் ஆகியோரை சென்னை  உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய வும் உச்ச நீதிமன்ற பரிந்துரைத்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் டி.ராஜா அடுத்த ஆண்டு ஓய்வு பெற உள்ள நிலையில், அவரது ஒப்புதல் இல்லாமல் ராஜஸ்தானுக்கு அவரை இடமாற்றம் செய்யக் கூடாது என  சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

குற்றாலம் அருவியில் திடீரென விழுந்த உடும்பு

தென்காசி,நவ.25- குற்றாலத்தில் பெய்து வரும் மழை காரணமாக, அருவிகளில் தண்ணீர் ஆர்ப் பரித்து கொட்டுகிறது. இந்நிலையில், வெள்ளியன்று (நவ.25) மெயின் அருவியில் இருந்து சுமார் 5 அடி  நீள முள்ள உடும்பு விழுந்தது. தண்ணீருடன் அடித்து வரப்பட்ட உடும்பு, குளிக்கும்  பகுதியில் பாதுகாப்பு வளைவு மீது விழுந்தது. இதனால் மக்கள் அலறியடித்து வெளியேறினர். பாதுகாப்புக்கு நின்ற காவலர்கள் தீயணைப்பு, வனத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் போராடி பிடித்து காட்டுப் பகுதிக்குள் கொண்டு விட்டனர்.

சமூக நீதிக் கண்காணிப்புக் குழு விரைவில் 6 பல்கலை.களில் ஆய்வு

சென்னை,நவ.25- தமிழக அரசின் சமூக நீதிக் கண்காணிப்புக் குழு 6 பல்கலைக் கழகங்களில் விரைவில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. சமூக நீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாக செயல்படு கிறதா என்பதை கண்காணிப்ப தற்காக ‘சமூக நீதிக் கண்காணிப்பு  குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டா லின் உத்தரவிட்டார். இந்நிலை யில், சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் 5-வது கூட்டம் கடந்த 21  ஆம் தேதி குழுவின் தலைவர்  முனைவர்.சுப.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னையில் உள்ள  தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட,  பல்கலைக்கழகம் உள்ளிட்ட 6  பல்கலைக்கழகங்களை குழு ஆய்வு செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒருங்கிணைப்பு மாநாடு சென்னையில் நடத்த டியூஜே முடிவு

சென்னை, நவ. 25 சென்னை மாவட்ட  டி.யூ.ஜே ஆலோசனை கூட்டம், மாவட்டத் தலைவர் எம்.ஜி.ரவிச்சந்திரஹாசன் தலைமையில்  பெரியமேட்டில் உள்ள மாநில தலைமை அலுவல கத்தில்  நடைபெற்றது.  சமீபத்தில் மறைந்த பத்திரிகை யாளர்களுக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தி.மு.க.  அளித்த தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்ற வலியுறுத்தி, டி.யூ.ஜே. ஒருங்கிணைப்பில் அனைத்து சங்கங்களை அழைத்து ஒருங்கிணைப்பு மாநாட்டை  சென்னையில், நடத்துவது என்று  இந்தகூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது. பத்திரிகையாளர் நலவாரி யத்தில் உள்ள குறைபாடுகளை  களைந்து ஊரக பத்திரிகையா ளர்களை நலவாரியத்தில் சேர விதிகளை திருத்தம் செய்ய வலி யுறுத்தி  செய்தித்துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதன் மற்றும் செய்தித்துறை உயர் அதிகாரிகளை விரைவில் சந்தித்துப்பேசுவது என்றும் முடிவு செய்யப்பட்டதாக சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் மாநில துணைத்தலைவர்பி.சண்முக வேல், பொதுச் செயலாளர் கே.முத்து, தலைமை நிலைய செயலாளர் பி.ஆர்.வேளங்கன்,  மாவட்டச் செயலாளர் ஜாபர் உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

காசி தமிழ் சங்கமத்தை எதிர்த்து போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்பு

காசி தமிழ் சங்கமத்தை எதிர்த்து போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்பு சென்னை,நவ.25- காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில் இந்துத்துவா கருத்துக்களை மாணவர்களிடம் புகுத்துவதற்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் போராட்டத்தை அறிவித்திருக்கிறது இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ. அரவிந்தசாமி, மாநிலச் செயலாளர்  க. நிருபன் சக்கரவர்த்தி ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கையில், சென்னை ஐஐடி மற்றும் இந்து பனாரஸ் பல்கலைக் கழகம் ஒன்றிணைந்து மதவாத கருத்தியலை பரப்பும் வகையில் காசி தமிழ் சங்கமத்தை நடத்துகின்றன.    நவம்பர் 27ஆம் தேதி கோவையிலிருந்தும், 29 நவம்பர் சென்னையி லிருந்தும், 30 நவம்பர் ராமேஸ்வரத்திலிருந்தும் டிசம்பர் 6 சென்னையி லிருந்தும், டிசம்பர் 7 ராமேஸ்வரத்திலிருந்தும், டிசம்பர் 11 கோவையி லிருந்தும், டிசம்பர் 13 சென்னையிலிருந்தும் தொடர்ந்து பல பயண குழுக்கள் பயணப்பட இருக்கின்றன. மக்களின் வரிப்பணத்தில் ஆர்எஸ்எஸ்-சின் மதவாத, இந்துத்துவ கருத்துக்களை பரப்புகின்ற இந்த மோசடி அரசின் சதி திட்டத்தை முறிய டிக்க வேண்டும். மதவாதத்திற்கு எதிராக மாணவர்கள் அணிதிரள வேண்டும். எனவே, இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நவம்பர் 27 அன்று கோவையிலும், 29ஆம் தேதி சென்னையிலும், 30 ஆம் தேதி ராமேஸ்வரத்திலும் காசி தமிழ்ச்சங்கமம் என்ற பெயரில் மதவாத அரசியலை பரப்பும் முயற்சியை கண்டித்து  தமிழகம் தழுவிய போராட்டம்  நடத்தப்படும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

‘தனிக் கொடி, தனி அரசியலமைப்பு என்பதில் இந்திய அரசுடன் சமரசம் கிடையாது’ நாகா அமைப்பு அறிவிப்பு

புதுதில்லி, நவ. 25 - “நாகலாந்திற்கு என தனி தேசியக் கொடி, தனி அரசியலமைப்பு விவ காரத்தில் இந்திய அரசுடன் சமரசம் செய்து கொள்ள முடியாது” என நாகலாந்து தேசிய கவுன்சில் - ஐஸ்சக் முய்வா (NSCN--IM) பிரிவு தெரிவித்துள்ளது. 1980-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நாக லாந்து தேசிய சோசியலிஸ்ட் கவுன்சில் அமைப்பு, ‘நாகலிம்’ என்ற தனி நாடு, நாகர்  இன மக்களுக்கு என ‘தனி தேசியக் கொடி’, ‘அரசியலமைப்பு’, ‘தனி பாஸ்போர்ட்’ என  வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. தனி  அரசியலமைப்பு விவகாரத்தில் ஒன்றிய அரசு, நாகலாந்து தேசிய சோசியலிஸ்ட் - ஐசக் முய்வா பிரிவுடன் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஒன்றிய அரசு இதுவரை நடத்திய 80 கட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவில், தனி தேசியக் கொடி, தனி அரசியலமைப்பு உள்ளிட்ட விவகாரத்தில் நாகர் அமைப்பினர் உறுதியாக இருக்கின்றனர் என கூறப்படுகிறது. “நாகா தேசியக் கொடி மக்களுடன் இணைக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான அம்சம்” என்றும், “கடவுள் கொடுத்த வரலாறு” என்றும் நாகலாந்து தேசிய கவுன்சில்  அமைப்பு பேச்சுவார்த்தையில் தெரிவித்த தாகவும் கூறப்படுகிறது. இதற்குமுன் நாகலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, நாகலாந்து தேசிய கவுன்சிலின் தனி தேசியக் கொடி,  தனி அரசியலமைப்பு கோரிக்கைகளை நிராகரித்தார். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தனிக் கொடி, தனி அரசிய லமைப்பு பிரச்சனை தொடர்ந்து வரு கிறது. இந்நிலையிலேயே, “நாக லாந்திற்கு என தனி தேசியக் கொடி, தனி  அரசியலமைப்பு விவகாரத்தில் இந்திய அரசுடன் சமரசம் செய்து கொள்ள முடி யாது” என நாகலாந்து அமைப்பு கூறி யுள்ளது.