செங்கல்பட்டு,ஏப்.24- மே 17 அன்று சென்னையிலுள்ள ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் அலுவ லகத்தை முற்றுகையிடுவது என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் முடிவு செய்துள்ளது. இச் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் செங்கல்பட்டில் ஞாயிறன்று(ஏப்.24) நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
அலைக்கழிக்கும் கொடுமை!
கொரோனா ஊரடங்கு காலத்துக்கு முன்னதாக நாமக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், மதுரை, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வாரம் ஒரு முறை திங்கள் கிழமை மனுநீதி நாள் அல்லது வேறு ஏதா வது ஒரு நாளில் அடையாள சான்று, ரயில் பயணம், பேருந்து உதவியாளர் பயண சலுகை சான்றுகள் வழங்கப்பட்டு வந்துன. கொரோனா பெருந்தொற்றை காரணம் காட்டி இந்த நடைமுறை இரண்டு ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டன. தற்போது சகஜ நிலை திரும்பிய பின்ன ரும் இந்த பெரும்பாலான மாவட்ட ங்களில் கூட மீண்டும் துவங்கவில்லை. அடையாள சான்று வாங்ககூட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மருத்துவமனை, மீண்டும் மாற்றுத்தி றனாளி அலுவலகம் என மாற்றுத்தி றனாளிகள் தேவையற்ற அலைக்க ழிப்புக்கு உள்ளாக்கும் கொடுமை மாநிலம் முழுவதும் பெரும்பாலான மாவ ட்டங்களில் நிகழ்வுகளாக உள்ளன.
எனவே, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள்கிழமை மனுநீதி நாள் அல்லது வாரத்தில் குறிப் பிட்ட ஒரு நாளை அறிவித்து மருத்து வர்கள், மாற்றுத்திறனாளி அதிகாரி களை வரவைத்து, அடையாள சான்று, ரயில் பயண சலுகை, பேருந்து உதவி யாளர் பயண சலுகை சான்றுகள் வழங்கு வதை உத்தரவாதப்படுத்த வேண்டும். அடையாள சான்று வழங்கும் அனைத்து இடங்களிலும், அனைத்து விதமான உதவித்தொகைகள் பதிவது, தேவைப்படு வோருக்கு உதவி உபகர ணங்கள் வழங்குவது உள்ளிட்டட அனைத்து நலத்திட்டங்களும் ஒற்றை சாளர முறையில் வழங்க உத்தரவாதப்ப டுத்த வேண்டும். இதன் மூலம் தேவை யற்ற அலைக்கழிப்புகளை தடுக்க உரிய உத்தரவுகளை தமிழக முதலமைச்சர் பிறப்பிக்க வேண்டும்.
சமீபகாலமாக 100 நாள் வேலை பணிகளுக்கு வரும்போதும், திரும்பி செல்லும்போதும் தொழிலாளர்களை புகைப்படம் எடுக்கும் நடைமுறையை ஊரகவளர்ச்சித்துறை கொண்டு வந்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு விதிகள் இருந்தும், மற்றவர்க ளோடு வரவேண்டும் என்றும், மற்ற வர்கள் 8 மணிநேர வேலை முடித்து திரும்பி செல்லும்போதுதான் செல்ல வேண்டும். அப்போதுதான் புகைப்படம் எடுப்போம் என மாநிலம் முழுவ தும் ஊராட்சிகளில் மாற்றுத்திற னாளிகளை சட்ட விரோதமாக கட்டடா யப்படுத்துவதும், வீட்டு வரி, குடிநீர் வரி கட்டியிருக்க வேண்டும் என துன்பு றுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. மேலும், பெரும்பாலான ஊராட்சி களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தாங்கள் சொன்னால்தான், விரும்பினால்தான் வேலை தருவோம் என தலையீடு செய்வ தும், இதற்கு அதிகாரிகளும் சட்டவிரோ தமாக உடந்தையாக இருப்பதும் தொடர்கின்றன. பல மாவட்டங்களில் இதற்காகப் போராட்டங்கள் நடந்தும், பிரச்சனைகள் தீரவில்லை. எனவே, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள மாநில ஊரக வளர்ச்சி ஆணையர் அலுவலகத்தை மே-17 செவ்வாய் கிழமை100நாள் வேலை செய்யும் மாற்றுத்திறனாளிகளை திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்துவது.
வாக்குறுதியை நிறைவேற்றுக!
தெலங்கானா, ஆந்திரா, புதுச்சேரி போன்று மாற்றுத்திறனாளி களுக்கான உதவித்தொகை குறைந்தபட்சம் ரூ.3000, முதுகுதண்டுவடம் உள்ளிட்ட கடும் பாதிப்புக்குள்ளானோருக்கு ரூ.5000ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி மார்ச்-22 அன்று கோட்டை யில் குடியேறும் போராட்டம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக ளுக்கான சங்கம் நடத்தியது. அப்போது முதலமைச்சர் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் வாக்குறுதிகளின்படி உதவித் தொகையை உயர்த்த வேண்டும் என்றும் மாநிலக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளது.