உலகக்கோப்பை இறுதிப்போட்டி யை பாஜக நிகழ்வு போல் மாற்ற முயற்சிக்கின்றனர் என சிவ சேனா கட்சியின் (யுடிபி) எம்பி சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “நரேந்திர மோடி பந்துவீசி, அமித் ஷா பேட்டிங் செய்வதைப் போல உலகக் கோப்பை இறுதிப் போட்டியை ஒரு காவிக் கட்சியின் நிகழ்வு போன்ற போலித் தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர் பாஜகவினர். கிரிக்கெட் விளையாட்டில் அரசியலைக் கொண்டு வரவேண்டிய அவசியமில்லை. ஆனால் அகமதாபாத்தில் நடைபெறும் போட்டி யில் அரசியல் கலக்கப்படுகிறது. பிரத மர் மோடி கலந்துகொண்டதால்தான் இந் தியா உலகக்கோப்பையை வென்றது என பாஜகவினர் கூறுவதற்கும் வாய்ப்புள் ளது. ஆட்டம் முடிந்த பின்பு அப்படிக் கூறி னாலும் எனக்கு ஆச்சரியமில்லை. இந்த நாட்டில் எது வேண்டுமானாலும் நடக்க லாம்” என்று தெரிவித்துள்ளார்.