அணிவகுப்பில் சிறப்பு படைப் பிரிவினருக்கு கேடயங்கள்
சென்னை,பிப்.11- குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்ட படைப்பிரிவினர்களில் சிறப்பாக செயல்பட்டராணுவப்படைப் பிரிவு, மத்திய ரிசர்வ் காவல் படைப் பிரிவு, தமிழ்நாடு பேரிடர் நிவாரணப் படைப்பிரிவு, தேசிய மாணவர் படைப் பிரிவு, சிற்பி பெண்கள் படைப் பிரிவு ஆகிய படைப்பிரிவிற்கும், குடியரசு தின விழா அணிவகுப்பினை சிறப் பாக ஒருங்கிணைப்பு செய்த இந்திய விமானப்படை குரூப் கேப்டன்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சனிக்கிழமையன்று (பிப்.11) தலைமைச் செயலகத்தில், பொதுத்துறை சார்பில் கேடயங்கள் வழங்கி சிறப்பித்தார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பிப். 19 முதல் கமல்ஹாசன் பிரச்சாரம்
சென்னை,பிப்.11- ஈரோடு-கிழக்கு தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோ வனை ஆதரித்து வரும் 19ஆம் தேதி கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள் கிறார். ஈரோடு கிழக்கு பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவி கேஎஸ் இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவித்திருக்கி றது. இந்த நிலையி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து வரும் 19ஆம் தேதி கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து 3 நாட்கள் இளங்கோவனுக்காக அவர் பிரசாரம் மேற்கொள்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஈரோடு-கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணியின், காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து வரும் 19 ஆம் தேதி ஈரோட்டில் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.40 லட்சம் மோசடி செய்த வடமாநில இளைஞர் சிக்கினார்
தருமபுரி,பிப்.11- தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள ஈச்சம்பள்ளம் பகுதி யைச் சேர்ந்தவர் விஜயகுமார் (29). இவரிடம் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த குணால் தாஸ் ரூ.5 லட்சம் கொடுத்தால் இளைஞர்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப் படும் என்று கூறியுள்ளார். விஜய குமார் உள்ளிட்ட 8 பேர் குணால் தாசிடம் தலா ரூ. 5 லட்சம் வீதம் ரூ.40 லட்சத்தை வங்கி பண பரிவர்த் தனை மூலம் கொடுத்துள்ளனர். இதையடுத்து விஜயகுமார், ஆரோக்கியசாமி, விஷ்ணுசந்து ஆகிய 3 பேரை துபாய்க்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு சென்ற அவர்க ளுக்கு நியூசிலாந்து செல்வதற்கான விசாவை கொடுத்துள்ளார். அந்த விசா போலியானது என்பது தெரிய வந்தது. இதனால் 3 பேரும் தரும புரிக்கு திரும்பி விட்டனர். இது குறித்து தருமபுரி குற்றப் பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தனர். இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதையடுத்து அவரைப் பிடிக்க தருமபுரி நகர காவல் நிலைய ஆய்வாளர் நவாஸ் தலை மையில் தனிப்படை உத்தரபிரதேச மாநிலத்திற்கு சென்றனர். அங்கு குணால் தாஸ் தனிப்படையிடம் சிக்கி னார். அவரை கைது செய்த காவலர்கள் ரயில் மூலம் தருமபுரிக்கு அழைத்து வருகின்றனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: எடப்பாடியை விசாரிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு
சென்னை,பிப்.11- பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்க ளுடன் அரசாணை வெளியிட்ட விவ காரத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விசா ரணை நடத்தக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த பாலச் சந்தர் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தாகவும், பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சகோதரர் அளித்த புகாரில் 9 பேர் மீது மட்டுமே குற்றம்சாட்டப்பட்டதாகவும், முழுமையாக விசாரிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவில் பாதிக்கப்பட்ட சில பெண்கள் மற்றும் புகார் அளித்த சகோதரரின் பெயர்களை வெளியிட்டதால், மற்ற பெண்கள் புகார் அளிக்க முடியாமல் இன்னலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளானதாக குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்ட அப்போதைய காவல் கண்காணிப்பா ளர் பாண்டியராஜனை பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும், அரசாணை யில் பெயர்களை இடம்பெறச் செய்தது குறித்து அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிட மும், அப்போதைய தலைமை செய லாளரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி தமிழக முதல்வரின் முகவர் துறையிடம் மனு அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். அந்த புகார் மனு ஜூலை 22ஆம் தேதி டிஜிபி மற்றும் கோவை எஸ்.பி.க்கு பரிந்துரைக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் திங்களன்று (பிப். 13) விசாரணைக்கு வரவுள்ளது.
உலகச் செய்திகள்
ஜனவரி மாதத்தில் மட்டும் புதிதாக 1 லட்சத்து 50 ஆயிரம் வேலைகள் கனடாவில் உருவாக்கப்பட்டுள்ளன. கனடாவில் வேலையின்மை விகிதம் 5 விழுக்காடாக இருக்கிறது. அந்நாட்டின் வரலாற்றில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்த 4.9 விழுக் காடு என்பதே மிகக்குறைவான வேலையின்மை விகிதமாகும். தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட வேலைகளால் 25 முதல் 54 வயது வரையிலானவர்கள் பலனடைவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளில் ஏற்பட்ட நில நடுக்கங்களால் பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆயி ரத்தைத் தொடுகிறது. இந்நிலையில் சிரியாவில் நிவாரணப் பணி களை மேற்கொண்டு வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பு, சுமார் 53 லட்சம் பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளி யேறி இடம் பெயர்ந்துள்ளார்கள் என்றும், அவர்களுக்கு இருப்பி டத்தை உத்தரவாதப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
கட்சியின் அடிமட்டத்தில் கோட்பாடு மற்றும் அமைப்பு சார்ந்த அம்சங்களை பலப்படுத்தும் பணியை மேற்கொள்ள நேபாள கம்யூனிஸ்ட்(ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சி முடிவெடுத் திருக்கிறது. பிப்ரவரி 13 ஆம் தேதியன்று தொடங்கும் இந்த பிரச்சார நடவடிக்கை இரண்டு மாத காலத்திற்கு நடைபெறும் என்று அக்கட்சியின் செயற்குழு அறிவித்துள்ளது. இந்த இரண்டு மாத காலத்திற்குப் பிறகு, கட்சி புதிய பாதையில் நடைபோடும் என்று கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பிரதீப் கியாவாலி தெரி வித்துள்ளார்.