states

பேராசிரியரை கைது செய்யக் கோரி போராடும் மாணவர் சங்கத்தினரிடம் அத்துமீறுவதை கைவிடுக!

காவல்துறைக்கு எஸ்எப்ஐ வலியுறுத்தல்

சென்னை, மே 2-  நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலி யல் தொல்லை கொடுத்த பேராசிரி யரை கைது செய்யக்கோரி போரா டும் மாணவர் சங்க தலைவர்களிடம் காவல்துறையினர் அத்துமீறுவதை கைவிட வேண்டும் என்று இந்திய  மாணவர் சங்கம் வலியுறுத்தியுள் ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.அரவிந்தசாமி, மாநி லச் செயலாளர் க.நிருபன் சக்கர வர்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், ஆண்டலூர் கேட் பகுதியில் உள்ள திருவள்ளுவர் அரசு கலைக்  கல்லூரியில் இயற்பியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வரும்  சுந்தரமூர்த்தி கல்லூரி மாணவி களுக்கு பாலியல் ரீதியான தொந்த ரவு கொடுப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்திய மாணவர்  சங்கத்தின் சார்பில் அக்கல்லூரி மாணவிகள் ஏப்ரல் 10ஆம் தேதி இயற் பியல் துறை தலைவரிடம் புகார் அளித்தனர்.  

துறை தலைவர் உரிய நடவ டிக்கை எடுக்காததால் ஏப்ரல் 25 அன்று கல்லூரி முதல்வரிடம் புகார்  அளித்து முறையிட்ட பிறகு ஏப்ரல்  26 அன்று பாதிக்கப்பட்ட மாணவி களை அழைத்து விசாரித்தனர். இதற்  கிடையே இந்நிகழ்வு பற்றி காவல்  துறையினருக்கு மாணவர் சங்கத்  தின் சார்பில் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அவர்களும் இவ்விசா ரணையில் பங்கெடுத்தனர். கல்லூரி முதல்வர் அறையில் சுமார் 3 மணி  நேரம் விசாரித்தனர். விசாரணையில்  பாதிக்கப்பட்ட மாணவிகள் உள்ளிட்டு நடந்தவற்றை கூறியிருந்தனர். அதேபோல கல்லூரியில் செயல்  பட்டு வரும் உள்ளிட புகார் குழு  (ICC) மற்றும் பெண்கள் பாதுகாப்புக் குழு (Women cell) அதிகாரிகள் மாணவிகளிடம் விசாரணை மேற் கொண்டனர். மாணவர் சங்க தலை யீட்டினால் மேற்கொண்டு மண்டல இணை இயக்குநர்  ஆர்ஜேடி (RJD)  கல்லூரிக்கு வந்து மாணவிகளிடம் நேரில் விசாரணை நடத்தியிருந்த னர்.

இதனைத்தொடர்ந்தே காவல் துறையினர் போக்சோ வழக்கு பதிந்து கைது நடவடிக்கையில் இறங்கினர். ஆனால் சம்மந்தப்பட்ட பாலியல் குற்றவாளி என கருதப்  படும் பேராசிரியர் சுந்தரமூர்த்தி தலை மறைவாகி உள்ளார். மேலும் காவல் துறை கைது செய்யாமல் காலம் தாழ்த்துவதை பயன்படுத்திக் கொண்டு பாதிக்கப்பட்ட மாணவி களை மிரட்டுவது உள்ளிட்ட நடவ டிக்கையில் ஈடுபடுவதாக மாண வர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். எனவே மே 2 அன்று, குற்றவாளி  என கருதப்படும் பேராசிரியரை கைது செய்ய வேண்டும் என்று வலி யுறுத்தி கல்லூரியில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது இந்திய மாணவர் சங்கத்தின்  மாவட்ட தலைவரும் கல்லூரியின்  மாணவருமான மு.தங்கராஜை காவல் துறை குண்டுக்கட்டாக கைது செய்து வாகனத்தில் ஏற்றி தாக்கியுள்ளனர். இதில் போக்குவரத்து காவல்  உதவி ஆய்வாளர் ஒருவரும், இரண் டாம் நிலை காவலர் ஒருவரும் இத்த கைய செயலில் ஈடுபட்டுள்ளனர்.  இதற்கிடையே மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) செந்தில் குமார் மாணவர் சங்க தலை வர்களை தொடர்பு கொண்டு உடனடி யாக சம்பந்தப்பட்ட பேராசிரியரை கைது செய்வதாகவும், மாவட்ட  தலைவர் தங்கராஜை தாக்கிய காவ லர்களை அழைத்து கண்டிப்பதாக வும் தெரிவித்துள்ளார்.  எனவே, நாமக்கல் மாவட்ட காவல்துறை உடனடியாக குற்றமி ழைத்த பேராசிரியர் சுந்தரமூர்த்தி யை கைது செய்து சிறையில் அடைக்க  வேண்டும். போராடும் மாணவர்களி டம் அத்துமீறி நடந்து கொள்வதை கைவிட வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநி லக்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.