states

இன்று அதிமுக பொதுக்குழு நடக்குமா?

சென்னை,ஜூலை 10-  உயர்நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை பொறுத்தே அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுமா அல்லது நடை பெறாது என்பது தெரியும். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தங்களது ஆதரவாளர் களுடன் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டனர். அதிமுக பொதுக்குழுக் கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்ட பத்தில் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் தீர்மானங்கள் முழுவதுமாக நிறை வேற்றப்படவில்லை. இதனால் ஜூலை 11 அன்று மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம்  நடைபெறும் என்று அக்கூட்டத்தில் அறி விக்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனு மீது ஜூலை  11ஆம் தேதி காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோருடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோ சனையில் ஈடுபட்டார்.   இதேபோன்று செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, காமராஜ் உள்ளிட்டோருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி னார்.  பொதுக்குழு நடத்த அனுமதி யளிக்கப்படுமானால் அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக இடைக்கால பொதுச்செய லாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந் தெடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.