states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. கேரள மாநிலம் வயநாடு  வனவிலங்கு சரணாலய த்திற்குட்பட்ட சீரல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாத கால மாக இயல்புநிலையை கடுமையாக பாதித்து மக்களிடையே பீதியை கிளப்பி வந்த புலியை வனத்துறை யினர் கூண்டு மூலம் பிடித்தனர். பிடிக்கப்ட்ட புலி 13 மாடுகளை புலி கொன்றது.
  2. டுவிட்டர் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள அந்நிறுவன தலைமை நிர்வாக செயல் அதிகாரி பராக் அகர்வாலுக்கு  ரூ.346 கோடி இழப்பீடு தர உள்ளதாக டெஸ்லா நிறுவன தலைவரும், டுவிட்டர் நிறு வனத்தை விலைக்கு வாங்கியவருமான எலான் மஸ்க் தகவல் வெளியிட்டுள்ளார்.
  3. வேலூர் விமான நிலையம் பயன்பாட்டுக்கு 10.7  ஏக்கர் நிலம் தேவைப் படுகிறது.  நிலத்தை கை யகப்படுத்தி விமான  நிலைய ஆணையத்தி டம், தமிழ்நாடு அரசு  ஒப்படைக்க கேட்டுக் கொள்கிறேன் என ஆய்வுக்கு பின்பு ஒன்றிய இணையமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ளார்.
  4. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப் படும் நெல்லின் ஈரப்பத அளவை 17%ல் இருந்து 22% ஆக உயர்த்த ஒன்றிய அரசிடம் தமிழ் நாடு அரசு கோரிக்கை விடுத்த நிலையில், 19%  ஆக உயர்த்தி ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.
  5. பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் முக்கிய குற்ற வாளியாக கைது செய்யப் பட்டுள்ள தீபக் டினுவின் காவலை மேலும் 3  நாட்கள் நீட்டித்து தில்லி  நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
  6. திருச்சி மாவட்டம் முசிறி யில் முன்னாள் முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி யின் நெருங்கிய நண்பர் இளங்கோவனுக்கு சொந்தமான கல்லூரி வளாகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மீண்டும் சோதனை நடத்தினர்.  இதே  கல்வி  நிறுவனத்தில் கடந்த ஆண்டும் லஞ்சஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.
  7. மாடு கடத்தல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனு ப்ரதா மோண்டலின் பாது காவலர் சேகல் உசேனின் அமலாக்கத்துறை காவலை மேலும் 8 நாட் களுக்கு நீட்டித்து தில்லி  நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
  8. அக்டோபர் 31-ஆம் தேதி கோவையில் பாஜக பந்த் நடத்தினால் காவல் துறை கடும் நட வடிக்கை எடுக்கலாம் என  காவல்துறைக்கு அறி வுறுத்திய சென்னை உயர் நீதிமன்ற  நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
  9. புதிய வடிவத்திலான பண நோட்டுகளை வெளியிட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியா முடிவெடுத்திருக்கிறது. 100, 200, 500 மற்றும் 1,000 மதிப்பிலான தனது நாட்டு நாணயமான நைராவில் அச்சடிக்கப் போகிறார்கள். டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் புதிய நோட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 80 விழுக்காடு நைரா வங்கிகளின் கைகளில் இல்லை என்ற நிலையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. 
  10. சர்வதேச விவகாரங்களில் நடுநிலை வகிப்போம் என்று ஸ்விட்சர்லாந்து அறிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தில் ஐரோப்பிய யூனியன் எடுத்த நிலைபாட்டை அப்படியே பின்பற்றியதால் கடும் நெருக்கடியை ஸ்விட்சர்லாந்து சந்தித்து வருகிறது. தடைகளை ஆதரித்ததால் ஸ்விட்சர்லாந்தை நட்பு பாராட்டாத நாடு என்ற பட்டியலில் ரஷ்யா வைத்து விட்டது. இந்நிலையில்தான் ஸ்விஸ் கூட்டமைப்பு கவுன்சில் நடுநிலை வகிப்பது என்ற முடிவை அறிவித்திருக்கிறது.
  11. இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தலைமையிலான வலதுசாரி அரசுக்கு செனட்டில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான திட்டத்தை பிரதமர் மெலோனி முன்வைத்தார். அவரது அரசுக்கு ஆதரவாக 115 வாக்குகளும், எதிராக 79 வாக்குகளும் பதிவாகின. எரிபொருள் விலை மற்றும் மந்தநிலையை நோக்கிச் செல்லும் பொருளாதாரம் ஆகியவையே தனது அரசின் இலக்குகள் என்று தனது திட்டம் பற்றிப் பேசுகையில் மெலோனி குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அவரது திட்டம் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதாக இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.