தொலைக்காட்சி விவாதம்: பாஜகவினருக்கு கட்டுப்பாடு!
நுபுர் சர்மா, நவீன் ஜிண்டாலின் அவதூறு பேச்சு சர்வதேச அளவில் இந்தியாவுக்கு நெருக்கடி யை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக தலைவர்கள் பங்கேற்க அக்கட்சி கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. “பாஜக ஊடகப் பிரிவால் அங்கீகரிக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர்கள், தலைவர்கள் மட்டுமே தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கலாம். எந்தவொரு மதத்தின் தலைவர் குறித்தும் அவதூறாக பேசக்கூடாது” என்று அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக ஆட்சியிலேயே திராவிட மாடலை காட்டிவிட்டோம்!
“அதிமுக ஆட்சிக் காலத்திலேயே ‘திராவிட மாடல்’ என்று கூறும் அனைத்தையும் செய்து விட்டோம். வருகிற 2024-ஆம் ஆண்டு எம்.பி. தேர்தலில் அதிமுக எத்தனை இடத்தில் வெற்றி பெறப் போகிறது என்பதை பாருங்கள். நிச்சயமாக அதிக அளவில் வெற்றி பெறுவோம்” என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான வி.கே. சசிகலா கூறியுள்ளார். “சிதம்பரம் நடராசர் கோவிலை தீட்சிதர்கள் நடத்த வேண்டுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள் ளது. ஆகையால் சிதம்பரம் நடராசர் கோவில் தொடர்பாக அரசு தலையிடுவது நல்லதல்ல” என்றும் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.
மதவெறிக் கருத்து: உ.பி. பாஜக பிரமுகர் கைது!
இஸ்லாமிய மார்க்கத்தில் இறைத்தூதராக போற்றப்படும் முகம்மது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு கண்ட னங்கள் எழுந்த நிலையில், அவர் பாஜகவிலிருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஜூன் 22 ஆம் தேதிக்குள் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மும்பை காவல்துறை அவருக்கு சம்ம னும் அனுப்பியுள்ளது. இதனிடையே, உ.பி. மாநில பாஜக இளைஞரணியின் மாவட்ட முன்னாள் செயலாளர் ஹர்ஷித் ஸ்ரீவத்சவா டுவிட்டரில் மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டதாக எழுந்த புகாரில், கான்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீவத்சவாவை கைது செய்துள்ளனர்.
வேலையின்மையை மறைக்கவே மதவெறி தூண்டப்படுகிறது!
“அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்காத நிலை உள்ளது. அதனால் இளைஞர்கள் அரசுக்கு எதிராக போராடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மதப் பிரச்ச னைகளை பாஜக எழுப்புகிறது” என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா விமர்சித் துள்ளார். “நாட்டில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியால், வளர்ச்சியில் நாடு 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது. நாடு அதல பாதாளத்தில் விழுந்துள்ளது. மோடி பிர தமரான பிறகு கடந்த 8 ஆண்டுகளில் நமது நாட்டை சேர்ந்த 8 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாடுகளில் குடியறேி இருக்கிறார்கள்” என்றும் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை அமைப்பு உங்களோடு, கடவுள் எங்களோடு!
தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை, பணமோசடி குற்றச்சாட்டில் கைது செய்துள்ள ஒன்றிய அமலாக்கத்துறை, சத்யேந்திர ஜெயின் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியதாகவும், அங்கு மொத்தம் ரூ. 2.85 கோடி மதிப்புள்ள கணக்கில் வராத பணம் மற்றும் 133 தங்க நாணயங்கள் கைப்பப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இதை யொட்டி, மோடி அரசை தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். “பொய் மேல் பொய், பொய் மேல் பொய். அனைத்து விசாரணை அமைப்புகளின் அதிகாரமும் உங்களிடம் உள்ளது. ஆனால் கடவுள் எங்களோடு இருக்கிறார்” என்று டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.
பாஜகவால் இந்தியாவிற்கு தலைகுனிவு: ராகுல் விமர்சனம்
பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவின் கருத்துக்கு விளக்கம் கேட்டு, கத்தார், அபுதாபி, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பியுள்ளன. ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தோனேசியா, குவைத், துருக்கி, ஓமன், ஜோர்டன், லிபியா உள்ளிட்ட 14 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனைக்கு குறிப்பிட்டு டுவிட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “உள்நாட்டில் பிளவுபட்ட இந்தியா, வெளியிலும் பலவீனமாகிறது. பாஜக-வின் வெட்கக்கேடான மதவெறி நம்மைத் தனிமைப்படுத்தியது மட்டுமல்லாமல், உலக அளவில் இந்தியாவை தலைகுனிய வைத்துவிட்டது” என விமர்சித்துள்ளார்.
லிம்கா சாதனைக்கு முயற்சிக்கிறதா அமலாக்கத்துறை?
ஒன்றிய அரசுக்கு எதிராக யார் பேசினாலும் ரெய்டு (அமலாக்கத்துறை சோதனை) நடத்தப்படு கிறது என தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே குற்றம் சாட்டியுள்ளார். “எதுவும் செய்யாத எங்களது 2 தலைவர்களும் (நவாப் மாலிக் மற்றும் அனில் தேஷ்முக்) சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். தேஷ்முக் குடும்பத்தின் மீது 109 முறை ரெய்டு செய்யப்பட்டது லிம்கா சாதனை புத்தக்கத்தில்தான் இடம் பிடிக்க வேண்டும். ஆனால், இன்றோ, நாளையோ அவர்களுக்கு (நவாப் மாலிக், அனில் தேஷ்முக்) நீதிமன்றம் நற்சான்றிதழ் கொடுக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு முஸ்லிம்களின் குரல் மோடிக்கு கேட்காதோ?
“சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்நாட்டில் முஸ்லிம் மக்கள் கோரினர். அப்போதெல்லாம் செவி கொடுக்காத ஒன்றிய அரசு உலக நாடு கள் கண்டனம் தெரிவித்த பின்னரே இருவரையும் கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. உள்நாட்டு முஸ்லிம்களின் குரல் பிரதமர் மோடிக்கு கேட்காது போலிருக்கிறது. நீக்கப்பட்ட இருவரையும் 6 மாதங்களில் மீண்டும் கட்சியில் சேர்க்காமல் இருந்தால் சரி!” என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஒவைசி குறிப்பிட்டுள்ளார். மேலும், நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் மீது அரசாங்கமே பொறுப்புடன் வழக்குப்பதிவு செய்து கைது செய்திருக்க வேண்டாமா? அப்போதுதானே நீதிநிலைநாட்டப்படும்? என்றும் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
செவிலியர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை
சென்னை,ஜூன் 8- மருத்துவ தேர்வு வாரிய தேர்வு மூலமாக பணியில் சேர்ந்த செவிலி யர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி சென்னை ஓமந்தூரார் பல் நோக்கு மருத்துவமனை நுழைவு பாதையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு மறியலிலும் ஈடுபட்டனர். இதை யடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட செவிலி யர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த நிலை யில், மறியல் போராட்டத்தில் ஈடு பட்டு கைதான செவிலியர்கள் விடு விக்கப்பட்டனர். சட்ட விரோதமாக கூடுதல், அரசு அதிகாரிகளின் உத்தரவை மீறுதல் ஆகிய 2 சட்டப்பிரிவுகளின் கீழ் 487 செவிலியர்கள் மீது திரு வல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர் சங்க நிர்வாகிகளை அழைத்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு நடத்தினார். அப்போது, ஒப்பந்த செவிலியர்களின் கோரிக்கையை ஏற்று முதல்கட்டமாக ஒரு வருடத்தில் 5000 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்வதாகவும், கொரோனா ஊக்கத்தொகை, ஊதிய முரண்பாடு கிடைக்காதவர்களுக்கு வழங்கவும் உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து போராட்டத்தை திரும்பப் பெற்றதாக நிர்வாகிகள் அறிவித்தனர்.
1.22 கோடி பேர் தடுப்பூசி போடவில்லை
சென்னை, ஜூன் 8- தமிழ்நாட்டில் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசியை இன்னமும் 1.22 கோடி போடாமல் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் வருகிற 12 ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) 1 லட்சம் இடங்களில் நடை பெற உள்ளது. இதுவரையில் தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை சுகாதா ரத்துறை செய்து வருகிறது. அந்த வகையில், ஒரு கோடியே 65 லட்சத்து 12 ஆயிரத்து 625 பேர் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி போடா மல் நிலுவையில் உள்ளனர். முதல் தவ ணையே போடாமல் 42 லட்சத்து 97 ஆயிரத்து 452 பேர் உள்ளனர். 2-வது தவணை 1 கோடியே 22 லட்சத்து 15 ஆயிரத்து 173 பேர் போடுவதற்கு தகுதி உள்ளவர்களாக இருக்கிறார்கள். இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறிய தாவது:- தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசி போடாமல் அதிகம் பேர் உள்ள மாவட்டமாக மதுரை உள்ளது. அங்கு 3 லட்சத்து 7 ஆயிரம் பேர் இதுவரையில் தடுப்பூசி போடாமல் உள்ளனர். சென்னையில் 2 லட்சத்து 40 ஆயிரம் பேரும், கன்னியாகுமரியில் 2 லட்சத்து 97 ஆயிரம் பேரும், திருப்பத்தூரில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 124 பேரும், ராணிப்பேட்டையில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 151 பேரும் முதல் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர்,ஜூன் 8- தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் மற்றும் சுற்று வட்டார காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு மேலும் நீர்வ ரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது. அணையில் இருந்து காவிரியில் குறுவை சாகுபடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.