கடல் கொந்தளிப்பு : மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
இராமேஸ்வரம், செப்.9- இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோளியாக்குடி, கீழக்கரை, ஏர்வாடி, மூக்கையூர் உள்ளிட்ட பகுதி களில் 1,600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த 4 நாட்களாக சூறைக்காற்று வீசி வரு கிறது. இன்றும் கடல் பகுதியில் காற்றின் வேகம் 55 கிலோ மீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரை இருக்கக்கூடும் எனவும், கடல் கொந்தளிப்பு இருக்க லாம் எனவும் வானிலை மையம் தெரி வித்துள்ளது. இதனால் மீனவர்களின் பாதுகாப்பு கருதி மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் மீன்பிடிக்க செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்குவது நிறுத்தப்பட்டது. இராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆர்.எம்.வீரப்பனுக்கு முதல்வர் வாழ்த்து!
சென்னை,செப். 9- எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவன ரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின், அவரது இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது அளவற்ற மதிப்பும், அன்பும் கொண்டவருமான அண்ணன் ஆர்.எம்.வீரப்பனுக்கு 98-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள்! அவர் நூறு ஆண்டுகள் கடந்தும் முழு நலத்துடன் வாழ நெஞ்சார வாழ்த்துகிறேன்!’ என்று பதிவிட்டுள் ளார்.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு
தருமபுரி, செப்.9- தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 5 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், 6,500 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தமிழ்நாட்டை நோக்கி வரும் காவிரி ஆறு அமைந்துள்ள பகுதிகளில் சில நாட்களாக பெய்த மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சற்று அதிகரித் துள்ளது. அதேபோல், மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 3,031 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 4,987 கனஅடியாக அதிகரித்தது. காவிரி டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 6,500 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 46.57 அடியாகவும், நீர் இருப்பு 15.72 டிஎம்சியாகவும் இருந்தது.
கோயம்பேட்டில் தக்காளி விலை வீழ்ச்சி
சென்னை, செப். 9- கடந்த மாத தொடக்கத்தில் வரத்து குறைவால் தக்காளியின் விலை உச்சத்தை எட்டியது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 வாரங்க ளாக தக்காளியின் வரத்து மீண்டும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கிய தால் அதன் விலை குறைய தொடங்கி யது. கடந்த வாரம் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.18-க்கும் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.25-க்கும் தக்காளி விற்பனை செய்யப்பட்டது. தற்போது, 55 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்துள்ளது. இதைய டுத்து தக்காளியின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.9-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.15-க்கு விற்கப் படுகிறது.
தேசிய விருதுகள்: வெற்றிமாறன் கருத்து
சென்னை, செப்.9- தேசிய விருதுகள் படத்தின் தரத்தினையோ சமூகத்தின் பங்களிப்பினையோ நிர்ணயிப் ்பதில்லை என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். நாட்டின் 69-வது தேசிய விருது கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதில் மொழிவாரித் தேர்வில் தமிழில் சிறந்த படமாக கடைசி விவசாயி தேர்வாகியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சார்பட்டா பரம்பரை, ஜெய் பீம் படங்களுக்கு எந்த ஒரு விருதும் தரப்படவில்லை என்பது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் சினிமா பிரபலங்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெய் பீம் படம் சூர்யா, மணி கண்டன் நடிப்பில் தா.செ.ஞான வேல் இயக்கத்தில் அமேசான் ப்ரைமில் வெளியாகி இந்திய அளவில் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது. பலரும் இது குறித்து கவலை தெரிவித்திருந்த நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், “தேசிய விருதுகள் படத்தின் தரத்தினையோ சமூகத்தின் பங்களிப்பினையோ நிர்ணயிப் பதில்லை. அதேசமயம் தேர்வுக் குழுவினரின் தேர்வுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் ஏனெனில் நாம்தான் படத்தினை அனுப்புகிறோம்”என்றார். ஜெய் பீம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வலுவான தாக்கத்தினை ஏற்படுத்தியது. இதற்கு தேசிய விருது கிடைத் திருந்தால் அதன் படக்குழுவிற்கு சிறிது அங்கீகாரமாக இருந் திருக்கும்” எனக் கூறியுள்ளார்.