வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு
அரக்கோணம்,மே 7- கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சென்னைக்கு வந்த வந்தே பாரத் ரயில் மீது சில மர்மநபர்கள் சனிக் கிழமையன்று மாலை கல்வீசி தாக்கு தல் நடத்தினர். அரக்கோணம் அருகே மகேந்திர வாடி, அன்வர்திகான் பேட்டை இடையே ரயில் சென்று கொண்டி ருந்தது. அப்போது அங்கு மறைந்தி ருந்த மர்மநபர்கள் ரயில் மீது கற்களை வீசி தாக்கினர். இந்த தாக்குதலில் பய ணிகள் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை. இதனால் ரயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து ரயில் என்ஜின் ஓட்டுநர் அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரி வித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வந்தே பாரத் ரயில் மீது கல் வீசியவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரத்தில் ரூ.23 கோடி செலவில் சிற்ப பூங்கா
மாமல்லபுரம், மே 7- சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட சிற்பக்கூடங்கள் உள்ளன. இதில் பல சிற்ப கூடங்கள் போக்குவரத்து மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக கற்களை சாலை ஓரம் மற்றும் வீதிகளில் போட்டு செதுக்கி வருகின்றனர். இத னால் தூசு பறந்து சுற்றுலா பயணிகள் மற்றும் அவ்வழியே செல்பவர்கள் பாதி க்கப்பட்டு வருகிறார்கள். மாமல்லபுரம் சர்வதேச கற்சிற்ப பகுதி என அறிவிக் கபட்டு அதற்கான புவிசார் குறியீடும் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது சர்வ தேச விளையாட்டு போட்டிகள், கருத்த ரங்கங்கள், மாநாடுகள் மற்றும் வெளி நாட்டு தலைவர்கள் அதிகளவில் வந்து செல்லும் முக்கிய சுற்றுலா பகுதியாக மாறி வருகிறது. இதைத்தொடர்ந்து சிற்பக்கூடங்களை ஒழுங்குபடுத்தும் விதமாக ஒன்றிய-மாநில அரசுகள் பங்க ளிப்புடன் சிற்ப பூங்கா அமைக்க அரசு முடிவு செய்தது. கைவினைத் தொழில் மேம்பாடு, சிற்பக்கூடங்கள் ஒழுங்கு முறை கருதி சிட்கோ நிறுவனம் மாம ல்லபுரம் அடுத்த கடம்பாடி கிழக்கு கடற்கரை சாலையில் “சிட்கோ” சிற்ப பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்துள் ளது. இது 19 ஏக்கர் நிலப்பரப்பில், 23 கோடி செலவில் அமைய உள்ளது.இதற்கான முதல்கட்ட பணியாக நில அளவை தொடங்கி நடந்து வருகிறது. சிற்பபூங்கா அமைய உள்ளதால் மாமல்லபுரம் சிற்பக்கலை சிற்பிகள், ஸ்தபதிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ள னர்.
ஆகாஷ்வாணி உத்தரவை திரும்பப்பெற டி.ஆர்.பாலு வலியுறுத்தல்
சென்னை, மே 7- அகில இந்திய வானொலி என்று அறிவிப்பு செய்வதை ஆகாஷ்வாணி என்று அழைக்குமாறு பிரசார் பாரதி உத்தரவை திரும்ப பெறக்கோரி ஒன்றிய அமைச்சருக்கு டி.ஆர்.பாலு கடிதம் எழுதி உள்ளார். அகில இந்திய வானொலியின் அறி விப்புகள், செய்திகள் மற்றும் அலுவல் சார்ந்த கடிதங்களில், இனி ஆல் இந்தியா ரேடியோ என்று பயன்படுத் தக்கூடாது என்றும், அதற்கு மாற்றாக ஆகாஷ்வாணி என்று தான் பயன் படுத்தப்பட வேண்டும் என்றும் வானொலி நிலையங்களுக்கு ஆணை யிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூருக்கு திமுக நாடாளு மன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். அதில், All India Radio என்ற பயன்பாட்டிற்குப் பதிலாக ‘ஆகாஷ்வாணி’ எனக் குறிப்பிடுமாறு வானொலி நிலையங்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளதற்குப் பதிலாகத் தொடர்ந்து ‘அகில இந்திய வானொலி’ என்றே பயன்படுத்திட வேண்டும் என்று அந்த கடிதத்தில் கோரிக்கை வைத்து ள்ளார்.
மியான்மர்- சென்னை விமான சேவை
சென்னை,மே 7- மியான்மர் நாட்டில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசிக் கின்றனர். ஆனால், மியான்மருக்கும், தமிழகத்துக்கு நேரடி விமான சேவை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், மியான்மர் ஏர்வேஸ் விமான நிறுவனம் யங்கூன் - சென்னை - யங்கூன் இடையே புதிய விமான சேவையை தொடங்கியது. வாரம் தோறும் சனிக்கிழமை இந்த விமான சேவை செயல்படும். யங்கூனில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் விமானம் பகல் 10.15 மணிக்கு சென்னை வந்தடையும். சென்னையில் இருந்து மீண்டும் 11.15 மணிக்கு புறப்பட்டு யங்கூனுக்கு செல்கிறது.
துறைதோறும் மலர்ச்சி: மு.க.ஸ்டாலின்
சென்னை,மே 7- திமுக ஆட்சி பொறுப்பேற்று ஈராண்டு நிறைவடைந்ததையொட்டி சமூக வலைதளங்களில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி வெளி யிட்டுள்ள பதிவு வருமாறு:- ஆறாவது முறையாய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திமுக அரசு, ஈராண்டை நிறைவு செய்து மூன்றா வது ஆண்டில் அடியெடுத்து வைக் கிறது. நாட்காட்டியில் நகரும் ஒவ்வொரு நாளும் நாட்டுக்கு நன்மை செய்யும் நாளாகவே அமைந் துள்ளது. தினந்தோறும் திட்டங்கள் தீட்டி வருகிறோம். ஊர்தோறும் வளர்ச்சி யைக் கண்டு வருகிறோம். துறை தோறும் மலர்ச்சியை உருவாக்கி வரு கிறோம். திசைதோறும் கவனத்தை ஈர்த்துள்ள திராவிட மாடல் மக்களாட் சியின் மகத்தான பயணம் பல பத்து ஆண்டுகளுக்கும் தொய்வின்றித் தொடரும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
உயிர்கொல்லி நீட் தேர்வுக்கு முடிவு கட்ட பாமக வலியுறுத்தல்
சென்னை,மே 7- நாடு முழுவதும் நீட் தேர்வு நடை பெற்ற நிலையில், தேர்வில் தோல்வி யடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக புதுவை அண்ணா நகரைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தாக பாமக தலைவர் அன்புமணிராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,. நீட் தேர்வுக்கு அஞ்சி நடந்த மூன்றாவது தற்கொலை ஹேம ச்சந்திரனின் மறைவு ஆகும். தமிழ்நாடும், புதுவையும் வெவ்வேறு நிர்வாகப் பகுதிகளாக இருக்கலாம். ஆனால், பாதிப்புகள் ஒன்று தான். நீட் ஓர் உயிர்க்கொல்லித் தேர்வு. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நீர் தேர்வுக்கு அஞ்சி தமிழ் நாட்டில் 60-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ள னர். தமிழகம் மற்றும் புதுவையில் நீட் தேர்வால் இனி எவரும் உயிரி ழக்கக் கூடாது. அதை உறுதி செய்யும் வகையில் தமிழக சட்டப்பேர வையில் 454 நாட்களுக்கு முன் நிறை வேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்கு சட்டத்திற்கு ஒன்றிய அரசு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும். புதுவைக்கும் நீட் தேர்விலி ருந்து விலக்களிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஊராட்சி செயலாளர்கள் இடமாற்றம்: மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்
கடலூர்,மே.7- என்எல்சி நிலக்கரி சுரங்கத்தை தனியாருக்கு குத்தகைக்கு விடும் நட வடிக்கையை கண்டித்து கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய ஊராட்சிகளின் செயலாளர்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் கடலூர் மாவட்ட குழு கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு சிதம்பரத்தில் தொடர்ந்து குழந்தை திருமணம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிறுமிக்கு இரு விரல் பரிசோதனை நடத்தப்பட்டதாக தமிழ்நாடு ஆளுநர் கூறியுள்ளார். தமிழக காவல்துறை அதிகாரி அதை உடனடியாக மறுத்திருக்கிறார். சட்ட ப்படி தடுக்கப்பட்ட இருவிரல் பரி சோதனை நடந்தது உண்மையாக இருந்தால் அது கண்டிக்கத்தக்கது. அது குறித்து விசாரிக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் தனி யாருக்கு நிலக்கரி சுரங்கம் குத்த கைக்கு விடும் அறிவிக்கையை எதிர்த்தும், என்.எல்.சி நிறுவனத் திற்கு, விவசாயிகளின் சம்மதம் இன்றி நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்தும் கம்மாபுரம் புவனகிரி ஊராட்சிகளில் கிராம சபை கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது ஊராட்சி மன்றங்களின் உரிமை, அதற்காக ஊராட்சி செயலாளர்களை கடலூர் மாவட்ட நிர்வாகம் இடம் மாற்றம் செய்துள்ளது. இது ஊராட்சி மன்றத்தின் ஜனநாயகத்தையும் உரிமையையும் பறிப்பதாகும். இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. அவர்களை மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்துகிறது. மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில் மாவட்டச் செய லாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உதய குமார், சுப்பராயன், ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.