சென்னை, மே 25- தமிழ்நாட்டில் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர் களுக்கு வரும் ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 12 ஆம் வகுப்பிற்கு ஜூன் 20 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பிற்கு ஜூன் 27ஆம் தேதி யும் பள்ளிகள் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன் கிழமை (மே 25) சென்னையில் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க, இணையவழி தொடக்க நிகழ்ச்சி, மற்றும் 2022-23 கல்வியாண்டு நாட்காட்டி மற்றும் ஆசிரியர் திறன் மேம்பாட்டுத் திட்ட நாட்காட்டி வெளி யிடுதல் நிகழ்ச்சி இன்று (புதன்) நடை பெற்றது. இதில் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்”என்றார்.
ஏற்கனவே அறிவித்தவாறு வரும் ஜூன் மாதம் 13 ஆம் தேதி 1 முதல் 10 ஆம் வகுப்பிற்கு பள்ளிகள் திறக்கப் படும். ஜூன் 20 ஆம் தேதி பனி ரெண்டாம் வகுப்பிற்கும், ஜூன் 27ஆம் தேதி முதல் 11 ஆம் வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் இதுதவிர மாணவர்கள், இணையம் வாயிலாக அடுத்த ஆண்டு பள்ளி திறப்பு, காலாண்டு அரையாண்டு தேர்வு எப்போது என்பதை பார்த்துக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் தெரி வித்தார். அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமே காலை சிற்றுண்டி காலை சிற்றுண்டி திட்டம் முதற் கட்டமாக 21 மாநகராட்சிகளில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப் படும். இத்திட்டத்தில் எவ்வித குறை பாடும் இல்லாமல் செயல்படுத்த கால அவகாசம் தேவைப்படுகிறது. அத னால் பள்ளி திறக்கும் நாளில் இத்திட்டம் தொடங்குவதற்கு வாய்ப்பு இல்லை. திட்டம் தொடங்கிய பிறகு மாணவர் களுக்கு காலை உணவு 8.30 மணிக்கு வழங்கப்படும். அவர்கள் சாப்பிடு வதற்கு 30 நிமிடங்கள் கொடுக்கப்படும். 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கும். இதில் மாற்றம் இருக்காது. சனிக்கிழ மைகளில் பள்ளிகள் நடைபெறாது” என்றார்.