states

மோதலில் மாணவர் கொலை பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

நெல்லை, மே 1- அம்பாசமுத்திரம் அருகே அரசு  மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களி டையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்ப வத்தில், பணியில் இருந்தும் உரிய நட வடிக்கை எடுக்காத பள்ளி உடற் கல்வி ஆசிரியர்கள் 2 பேரை தற்கா லிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நட வடிக்கை எடுத்துள்ளார். நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பெரு மாள் கோவில் தெருவைச் சேர்ந்த வர்கள் முருகன் - உச்சிமாகாளி தம்பதி யரின் மகன் செல்வசூர்யா (17). இவர் அம்பாசமுத்திரம் அருகே இடை காலை அடுத்த பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.  இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி  செல்வ சூர்யாவுக்கும் அதே பள்ளி யில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாண வருக்கும் இடையே கையில் கயிறு கட்டுவது தொடர்பாக கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்த செல்வ சூர்யா நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்  கப்பட்டார். ஆனால் சிகிச்சை பல னின்றி மாணவர் செல்வ சூர்யா உயிரி ழந்தார். இதனால் இச்சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து, சம்பந்தப்பட்ட 3 மாணவர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளி நிர்வாகக் குழு ஆய்வு செய்ய வேண்டும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவு பிறப்பித்துள்ளார். விசாரணையில், பள்ளியில் மாண வர் கொலை செய்யப்பட்டது தொடர் பாக சம்பவ நேரத்தில் பணியில் இருந்தும் உரிய நடவடிக்கை எடுக் காத உடற்கல்வி ஆசிரியர்கள் ஷீபா பாக்கியமேரி, தமிழ்ச்செல்வன் இரு வரையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தற்காலிக பணியிடை நீக் கம் செய்துள்ளார்.