சென்னை, ஜூன் 7- மாநகராட்சி டெண்டர் முறை கேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது சென்னையில் சாலை சீரமைப்பு, மழைநீர் வடிகால் அமைக்க டெண்டர் ஒதுக் கியதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதை யடுத்து, இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை புதனன்று (ஜூன் 7) விசாரித்த, சென்னை உயர்நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட் டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை. டெண்டர் முறைகேடு தொடர்பாக ஆரம்பக்கட்ட விசாரணை அறிக் கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என கூறியுள்ளது.