அக்.10 முதல் மேட்டூர் நீர் திறப்பு நிறுத்தம்?
சேலம், அக்.7- மேட்டூர் அணையின் மொத்தக் கொள்ளளவு-120 அடி. சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணி நிலவரப்படி 32.25 அடியாக இருந்தது. கடந்தாண்டு இதே நாளில் அணையின் நீர்மட்டம் 118.79 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 334 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் தற்போது 8.45 டிஎம்சி நீர் மட்டுமே இருப்பு உள் ளது. நீர்வரத்தை விட அணை யில் இருந்து வெளியேற்றப் படும் நீரின் அளவு அதிகரித் துள்ளதால் மேட்டூர் அணை யில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அக் டோபர் 10 முதல் நிறுத்தப் படும் என்று தகவல் வெளி யாகியுள்ளது.
தமிழிசை இலவச ஆலோசனை
புதுச்சேரி, அக்.7- “இந்தியாவில் அனை வரும் சகோதரத்துவத்தோடு வாழ்ந்து வருகிறோம். காவிரி நதிநீர்ப் பகிர்வுப் பிரச்சனை யிலும் சகோதரத்துவ உணர் வோடு பொறுப்புடன் செயல் பட்டு காவிரி நீரைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்” என புதுச் சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோ சனை (?) வழங்கியுள்ளார். தமிழ் இலக்கியங்களில் காவிரி நதி கரைபுரண்டு ஓடும் அழகும் மீண்கள் துள்ளி விளையாடும் அழகும் சொல் லப்பட்டிருப்பதாகவும், காவிரி நதிநீர் பாசனத்தின் மூலம் யானை கட்டி போர டிக்கும் அளவிற்கு தஞ்சாவூர் தமிழகத்தின் நெற்களஞ்சி யமாக சிறப்புடன் விளங்கிய தையும் தமது ட்விட்டர் பதி விட்டு ‘மகிழ்ந்து’ள்ளார்.
10 மீனவர்கள், படகுடன் மீட்பு
இராமநாதபுரம், அக்.7- இராமேஸ்வரம் பாம்ப னில் இருந்து வடகிழக்கே 20 கடல் மைல் தொலைவில் பத்து மீனவர்களுடன் தத்த ளித்துக் கொண்டிருந்த படகு மீட்கப்பட்டுள்ளது. மீன்பிடிப் படகின் அடிப்பகுதியில் ஏற் பட்ட சேதத்தால் படகில் பெரு மளவு நீர் புகுந்து இயந்திரம் செயலிழந்தது. நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் மற் றும் அவர்களின் படகை இந் திய கடலோரக் காவல்படை யினர் மீட்டனர்.
தனித்துப் போட்டி
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா தெலுங்கானா மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் தெலுங்கானா என்ற புதிய கட்சியை தொடங்கிய நிலையில், வர விருக்கும் சட்டமன்ற தேர்தலில் காங்கி ரஸ் உடன் கட்சியை இணைத்து போட்டி யிட உள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில், ஷர்மிளா தனக்கு மாநில தலைவர் பதவி வழங்க வேண்டும் என கேட்டதாகக் கூறப்படுகிறது. ஷர்மிளா வின் கோரிக்கைக்கு தெலுங்கானா காங்கி ரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் ஷர்மிளா தனித்து போட்டியிடுவதாக அறிவித் துள்ளார்.
ரயிலை கவிழ்க்க சதி: நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் தப்பியது
வெள்ளியன்று மகா ராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள அகுர்டி - சின்ச்வாட் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் தண்டவாளத்தில் பாறாங் கற்கள் இருப்பதைப் பார்த்த ரயில்வே காவலாளி சின்ச்வாட் ஸ்டேஷன் மாஸ்டருக்குத் தக வல் தெரிவித்துள்ளார். ஸ்டேஷன் மாஸ்டர் ரயில் களின் வருகையை ஆய்வு செய்து அருகில் வந்து கொண்டு இருந்த நாகர்கோவில் - மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர் மினஸ் (சிஎஸ்எம்டி) எக்ஸ்பிர ஸின் லோகோ பைலட்டுக்கு நிலையம் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாகர்கோவில் ரயிலின் லோகோ பைலட் உட னடியாக அந்த இடத்திலேயே ரயிலை நிறுத்தினார். தண்ட வாளத்தில் இருந்த பாறாங்கற் கள் அகற்றப்பட்ட பின்பு நாகர் கோவில் ரயில் மீண்டும் பய ணத்தை தொடர்ந்தது. சரியான நேரத்தில் ரயில்வே காவலாளி சொன்ன தகவலால் விபத்து தடுக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் நாகர் கோவில் - மும்பை ரயில் பெரும் விபத்தில் சிக்கியிருக்கும்.ரயில்வே காவல் துறை (ஜிஆர்பி) மற்றும் ரயில்வே பாது காப்பு படை(ஆர்பிஎப்) இணைந்து மர்மநபர்களைத் தேடி வருகின்ற னர். 2-வது சம்பவம் கடந்த அக்.2 அன்று ஜெய்ப்பூர்- உதய்பூர் “வந்தே பாரத்” எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் கற் கள் மற்றும் உலோக கம்பி களை மர்மநபர்கள் வைத்திருந்த னர். ராஜஸ்தானின் சித்தோர்கர் அருகே உள்ள கங்ரார் மற்றும் சோனியானா ரயில் நிலையங்க ளுக்கு இடையே ரயில் ஓட்டுநர் அவசர காலபிரேக்கை அடித்து நிறுத்தியதால் விபத்து தவிர்க் கப்பட்டது. இதன் பின் தண்ட வாளத்தில் இருந்த தடைகளை அகற்றிய பின் ரயில் இயக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.
மாற்றுத்திறனாளி இருக்கையை ஆக்கிரமித்தால் நடவடிக்கை
சென்னை, அக். 7- மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் மேலும் 17 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணியை செயல்படுத்த உள்ளதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களி டம் பேசிய அவர் மாற்றுத் திறனாளி களுக்கு உதவும் வகையில் இனி வரும் காலங்களில் அனைத்து ரயில் நிலை யங்களும் மேம்படுத்தப்பட உள்ளது. ரயிலில் மாற்றுத்திறனாளிகள் பெட்டிகள், இருக்கைகளை சாதாரண பயணிகள் ஆக்கிரமிப்பதாக புகார் வருகின்றன. அதனடிப்படையில் ஒருவார காலத்திற்கு மாற்றுத்திறனாளி பெட்டி மற்றும் இருக்கைகளை சாதாரண பயணிகள் ஆக்கிரமிக்கிறார்களா என்பதை கண்காணிக்க ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. ஆய்வில் சாதாரண பயணிகள் பயன்படுத்துவது கண்டறிந்தால் நடவடிக்கை எடுக்கப் படும்” எனவும் எச்சரித்தார்,
13 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு
சென்னை, அக். 7- தமிழகத்தில் ஞாயிறு மற்றும் திங்கள் இரண்டு நாட்கள் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித் துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உட்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்க ளாக அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், ஞாயிறு மற்றும் திங்க ளன்று தமிழகத்தில் 13 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தரும புரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரி விக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் இடி மின்னல் இருந்தாலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
‘முரசொலி’ முகநூல் பக்கத்தில் ஹேக்கர்கள் கைவரிசை
சென்னை, அக். 7- திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘முரசொலி’ பத்திரிகையின் முகநூல் பக்கத்தில் ஹேக்கர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். அதில் ஊடுருவி கடந்த இரண்டு நாட்களாக பெண்களின் ஆபாசப் படங்களைப் பகிர்ந்துள்ளனர். இது தொடர்பாக காவல் துறைக்கு பல்வேறு புகார்கள் வந்த நிலையில், சைபர் குற்ற தடுப்புப் பிரிவு போலீஸார் 2 தனிப் படைகள் அமைத்து விசா ரணை மேற்கொள்கின்றனர். முரசொலி ஃபேஸ்புக் பக்கத்தில் கைவரிசை காட்டியது யார் என்பது குறித்து அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். முரசொலி பொது மேலாளர் எஸ்.ராஜசேகரன் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரில், அக்டோபர் 4ஆம் தேதி முதல் எங்கள் முகநூல் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. அதில் ஆபாச படங்களை சில விஷமிகள் பதிவேற்றி யுள்ளனர். மேலும், இணைய முடக் கத்தை சரி செய்ய 200 டாலர் பணம் கேட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில் சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறு கையில், “இணையதளங்கள், சமூக வலைதளப் பக்கங்கள் வைத்திருப் போர் பிரத்யேக கடவுச்சொற்களை அவ்வப்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்ற வேண்டும். இதுபோன்ற ஹேக்கர்கள் இணை யத்தை முடக்கிவிட்டு டாலரிலோ அல்லது க்ரிப்டோ கரென்சிகளாகவோ பணம் பறிக்க முயற்சி செய்வது தொடர்கிறது. எனவே, எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்றார்.