states

பள்ளி-கல்லூரிகளில் மரக்கன்றுகள் நடப்படும்: அமைச்சர் மெய்யநாதன்

சென்னை,பிப்.15- தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளில் மரக்கன்றுகள் நட அரசால் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று அமைச் சர் மெய்யநாதன் தெரிவித் தார். சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத் தில், திருவாரூர் மாவட்டத் தில் உள்ள பள்ளி, கல்லூரி களிலும், மத்திய பல்கலைக் கழகத்தை பசுமைப் பல்கலைக்கழகம் மாற்றும் வகையில் மரக்கன்றுகள் நடப்படுமா? என்று திமுக உறுப்பினர்  பூண்டி எஸ். கலைவாணன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் மெய்யநாதன், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் கொரோனா காலகட்டத்தில் நேரடியாக ஆய்வு மேற் கொண்டு கருவேல மரங் கள் முழுவதுமாக அகற்றப் பட்டு, ரூ. 75 லட்சம் செல வில் மரக்கன்றுகள் நடப் பட்டு வருகிறது. மேலும், பள்ளி கல்லூரி களில் மரக்கன்றுகள் நடு வது மட்டுமல்லாமல் பசுமை பள்ளி எனும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் 2021- 22 ஆம் நிதியாண்டில் தொடங்கி வைத்து ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் மூலிகைத் தோட்டம், சோலார் மூலம் மின்சாரம், காய்கறி தோட்டம், நெகிழி யற்ற வளாகம், மழைநீர் சேமிப்பு உள்ளிட்ட பல் வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், வரும் நிதி யாண்டில் ரூ. 50 கோடியில்  100 பள்ளிகளில் பசுமை  பள்ளி திட்டம் செயல்படுத் தப்படும். தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி  கல்லூரிகளில் மரக்கன்று களை நட அனைத்து நடவடிக்கையும் அரசு மேற் கொள்ளும்” என்றார்.