states

‘சுயபுத்தியும் இல்லை சொல்புத்தியும் இல்லை’

“அனைவரும் சமம் என்று புதிய வழிபாட்டு முறையை கொண்டு வந்த வைகுண்டரை சனா தனவாதி என்று ஆளுநர் கூறினால் மக்கள் ஏற்கமாட்டா ர்கள்” என்று சபாநாயகர் மு. அப்பாவு கூறியுள்ளார். “1833ம் ஆண்டு அய்யா வைகுண்டர் அவதரித்தபோது, அவர் சார்ந்த சமூக மக்கள் கோயில் மட்டுமல்ல, கோயில் இருக்கும் தெருவில் கூட செல்ல அனுமதி இல்லை. பெண்கள் மார்பில் துணி அணியக்கூடாது. ஆண்கள் தலைப்பாகை கட்டக்கூடாது. இந்த கொடுமைகளை எல்லாம் எதிர்த்துப் போராடிதான் அனைவரும் சமம் என்ற  புதிய வழிபாட்டு முறையை கொண்டு வந்தார். இப்படிப்பட்ட வரை சனாதனவாதி எனக் கூறினால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சொந்தமாக தெரியவேண்டும். இல்லையென்றால் பிறர் சொல்வதை கேட்க வேண்டும். இரண்டும் இல்லாமல் ஆளுநர் தொடர்ந்து தவறுதலாக பேசி வருகிறார்” என்று விமர்சித்துள்ளார்.