சிறப்புத் தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை
மதுரை, பிப்.1- மதுரை மேல வெளி வீதியில் உள்ள சர்வோதய இலக்கி யப் பண்ணை புத்தக நிலையத்தில் சிறப்பு தள்ளுபடி யில் புத்தகங்கள் விற்பனை நடைபெறுகிறது. பிப்ரவரி 1 அன்று துவங்கியுள்ள இந்த விற்பனை பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அனைத்து நூல்களும் 10 சதவீத தள்ளுபடியில் கிடைக்கும் என்று புத்தக நிலையம் தெரிவித்துள்ளது.
சாலை விபத்தில் துப்புரவுத் தொழிலாளி பலி
சிவகாசி, பிப்.1- சிவகாசியில் உள்ள நேரு காலனியைச் சேர்ந்தவர் லதா(44). இவர் சிவகாசி மாநகராட்சியில் துப்புரவு பணியா ளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், இவர், வழக்கம் போல பணிக்கு செல்ல தனது இளைய மகன் ராம்குமார்(19) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்துள்ளார். திருத்தங்கல் அருகே சென்ற போது சாலையின் குறுக்கே நாய்கள் வந்துள்ளன. இதனால், ராம்குமார் திடீரென வாகனதை நிறுத்தி யுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த லதா படு காயமடைந்தார். இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சிவகாசி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இரு சக்கர வாகனம் மாயம்
அருப்புக்கோட்டை, பிப்.1- அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட இரு சக்கர வாகனம் மாயமானது. பந்தல்குடி ஸ்ரீநகரைச் சேர்ந்தவர் பாலமுருகன்(29). இவர் மளிகைக்களைட நடத்தி வருகிறார். இவர், வழக்கம் போல வேலை முடிந்தவுடன் தனது ரூ.1.40 லட்சம் மதிப்பி லான இரு சக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்த போது வாக னத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பால முருகன், பந்தல்குடி காவல் நிலையத்தில் புகார் அளித் தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து இரு சக்கர வாகனத்தை தேடி வருகின்றனர்.
ஏழைகளின் தலையில் பாறாங்கல்லைப் போட்டுள்ள ஒன்றிய பட்ஜெட்
மோடி அரசுக்கு விவசாயத் தொழிலாளர் சங்கம் கண்டனம்- போராட்டத்திற்கு அறைகூவல்
சென்னை, பிப்.1- ஏழைகளின் தலையில் பாறாங் கல்லைப் போட்டுள்ள ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள மோடி அரசுக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் மாநிலக்குழு கண்டனம் தெரி வித்துள்ளது. ஆர்ப்பாட்டங்கள் நடத்திட அறைகூவல் விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநி லத் தலைவர் ஏ.லாசர், மாநிலப் பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங் கம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஒன்றிய பாஜக அரசு 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இந்த பட்ஜெட்டானது சாதாரண கிரா மப்புற கூலிகளுக்கும் நகர்ப்புற ஏழைகளுக்கும் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 100 நாள் வேலைத்திட்டப் பணிகளுக்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட குறை வான ரூ.89 ஆயிரம் கோடியை விட இந்த ஆண்டு மேலும் ரூ.29 ஆயிரம் கோடியைக் குறைத்து ரூ.60 ஆயி ரம் கோடியாக அறிவித்துள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு வழங்கி வந்த உணவு மானியத்தை ரூ.2 லட்சத்து 87 ஆயிரம் கோடியிலி ருந்து ரூ.1 லட்சத்து 97 ஆயிரத்து 362 கோடியாக குறைத்துள்ளது. நகர்ப்புற, கிராமப்புற வேலை யில்லா திண்டாட்டத்தை போக்கு வதற்கான விதத்தில் எந்த அறி விப்பும் இல்லை, நிதி ஒதுக்கீடும் இல்லை. அனைவருக்கும் குடி மனை வழங்கல் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டிலும் உயர்வில்லை. முதியோர் பென்சன், வறு மைக்கோட்டுக்கு கீழே இருப்ப வர்களுக்கான இலவச அரிசி என்ற பிரச்சனைகளில் எந்தவித அறி விப்புகளோ இந்த அரசின் பட்ஜெட் டில் இல்லை. இந்த பட்ஜெட் செய்தி யை படித்தவுடன் உடம்பிலே நெருப்பை அள்ளி வீசுவதுபோல் இருந்தது. இந்த அரசுதான் ஏழை களின் அரசா? இந்த மோடிதான் ஏழைகளைக் காப்பாற்ற அவதா ரம் எடுத்து வந்துள்ளாரா? இவர்கள் தான் நவ இந்தியாவைப் படைக் கப்போகிறார்களா? என்ற ஆயிரம் கேள்விகள் கோடிக்கணக்கான மக்களிடமிருந்து எழுந்துள்ளது. ஒன்றிய அரசின் மக்கள் விரோ தக் கொள்கைகளை எதிர்த்து தேசம் முழுவதும் கண்டனக்குரல் எழும்பி யுள்ளது. எனவே மோடி அரசைக் கண்டித்து விவசாயத்தொழிலாளர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள் ளனர்.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் ஒன்றிய அரசால் புறக்கணிக்கப்படுகின்றன இரா.முத்தரசன் குற்றச்சாட்டு
தேனி, பிப்.1- பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் மோடி அர சால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குற்றம்சாட்டினார். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் , செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட பிரதமர் அடிக்கல் நாட்டி பல ஆண்டுகள் ஆன பின்னும் அதற்கான எந்த பணிகளும் நடைபெறவில்லை. இதே காலத்தில் பாஜக ஆட்சி புரி யும் மாநிலங்களில் எய்மஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு தற்போது மருத்துவமனை பயன்பாட்டில் உள்ளது. இப்படி தொட ர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களை புறக்க ணிக்கும் போக்கையும், ஆளுநர்களை கொண்டு இடை யூறு செய்யும் பணிகளையும் பாஜக செய்து வருகிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் கண் ணுக்கு எட்டிய தூரம் எதிரிகள் யாரும் தெரியவில்லை. இந்த தேர்தலில் நாங்கள் பெறும் வெற்றி என்பது, பாஜக வின் கொள்கைக்கும், அந்த கொள்கையை ஆதரிக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் தக்க பாடம் புகட்டுவதாக இருக் கும். கலைஞரை நினைவுபடுத்தும் விதமாக மெரினா கடற்கரையில் பேனா வைக்கும் திட்டத்தினை எதிர்க்கும் சீமான், பல்லாயிரம் கோடி மக்கள் பணத்தில் வல்லபாய் பட்டேல் சிலை வைப்பதை பற்றி ஏன் வாய் திறக்க மறுக்கி றார்? நம்நாட்டில் இதுவரையில் பிரதமராக இருந்த அனைவரும் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியிருந்தார்கள். ஆனால் மோடி பிரதரமாக இருந்த கடந்த 9 ஆண்டுகளில் 23 பொதுத்துறை நிறுவ னங்களை தனியாருக்கு தாரை வார்த்துள்ளார். தற்போது எல்.ஐ.சி நிறுவனத்தின் சொத்துக்களை அதானி நிறு வனத்தில் முதலீடு செய்வதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட போகிறது. பிரதமர் மக்களுக்கான வளர்ச்சி திட்டங் களை நிறைவேற்றாமல் தனது நண்பர்களான அதானி, அம்பானிகளுக்கான வளர்ச்சி திட்டங்களையே நிறை
மதுரையில் கொலைச்சம்பவத்தில் தலைமைக்காவலர் உட்பட 7 பேர் கைது
மதுரை, பிப்.1- மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரியக் குடியி ருப்பைச் சேர்ந்தவர் மணி கண்டன்(42). இந்து மக்கள் கட்சியின் மதுரை தெற்கு மாவட்ட துணைச்செயலராக பொறுப்பு வகித்தவர். மணி கண்டன் சோலையழகுபுரம் பகுதியில் நகைக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில் செவ் வாய்க்கிழமை இரவு நகைக் கடையை அடைத்து விட்டு மணிகண்டன் வீட்டுக்கு புறப்பட்டபோது எம்.கே. புரம் பகுதியில் அவரை வழி மறித்த கும்பல் ஆயுதங்க ளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச்சென்றது. இதில் பலத்த காயமடைந்த மணி கண்டனை அப்பகுதியினர் மீட்டு அரசு ராஜாஜி மருத்து வமனைக்கு கொண்டு சென்றபோது மணிகண்டன் வழியிலேயே உயிரிழந்தார். இதையடுத்து மணிகண்ட னின் மனைவி மகாலட்சுமி அளித்தப் புகாரின்பேரில் ஜெய்ஹிந்த்புரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும் ஹரி ஹரபாபுவின் மனைவி, மணி கண்டன் நடத்தி வரும் நகைக் கடைக்கு அடிக்கடி சென்று. அவருடன் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனைவியை தலைமைக் காவலர், ஹரிஹரபாபு கண் டித்துள்ளார். இதில் இருவ ருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு மணி கண்டனை, தலைமைக்காவ லர் தாக்கியதாகவும் கூறப் படுகிறது. இந்நிலையில் ஆத்திரம டைந்த தலைமைக்காவலர் குற்றச்செயல்களில் தொடர்பு டையவர்களை கூலிப்படை யினராக பயன்படுத்தி கொலை செய்திருக்கலாம் எனத் தெரிய வந்தது. இதை யடுத்து கொலையில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடைக்கலபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என்ற மாடு தினேஷ்(27), மதுரை ஜெய் ஹிந்த்புரம் நேதாஜி தெரு வைச் சேர்ந்த ஆனந்த குமார் மகன் அஜீத்குமார் என்று குட்ட அஜீத்(25), ஜெய்ஹிந்த் புரம் பாரதியார் தெரு யாத வர் மகால் சந்துப்பகுதியைச் சேர்ந்த அன்புராஜன் மகன் ஐயப்பன்(26), ஜெய்ஹிந்த் புரம் பாரதியார் தெரு, தேவர் நகர் 1 ஆவது தெருவைச் சேர்ந்த கூழாண்டி மகன் கார்த்திக் என்ற பல்லு கார்த் திக் (26) மற்றும் புறாப் பாண்டி ஆகிய 5 பேரையும் பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். மேலும் தலை மறைவாக உள்ள இருவரை காவல்துறையினர் தேடி வரு கின்றனர். இந்நிலையில் கொலையில் முக்கியத் தொடர்பு இருப்பதாகக் கூறப் படும் தலைமைக்காவலரி டம் தனியிடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் தலைமைக்காவலர் உட்பட 7 பேரை காவல்துறை யினர் கைது செய்துள்ளனர்.
தேனியில் 50 படுக்கை வசதிகளுடன் ஆயுர்வேத மருத்துவ பிரிவு தில்லி மருத்துவக்குழு ஆய்வு
தேனி, பிப்.1- தமிழ்நாட்டில் தேனி மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சித்தா, ஆயுர் வேத மற்றும் ஓமியோபதி மருத்துவப்பிரிவு தொடங்க அரசு ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து தேனி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.6 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த ஆயூர்வேத மருத் துவ சிகிச்சை பிரிவுக்கான கட்டிடம் கட்டப்பட்டது. இதற் கான கட்டிட பணிகள் அனைத்தும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்த நிலையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் இருந்தது. இந்நிலையில் தேனி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துமவனையில் கட்டப்பட் ஒருங்கி ணைந்த ஆயுர்வேத சிகிச்சைப்பிரிவு கட்டிடத்தை தில்லி ஆயுர்வேத அமைச்சக இயக்குனர் டாக்டர் ரகு, இந்திய ஓமியோபதி மருத்துவத்தின் இணை இயக்குனர் பார்த்தி பன் ஆகியோர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ஆய்வு நடத்தினர். 3 தளங்களாக கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் ஆயுர் வேதம், சித்தா மற்றும் ஓமியோபதி சிகிச்சைக்காக தனித் தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வகையில் 50 படுக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.. கட்டிடத்தை ஆய்வு செய்த மருத்து வக்குழுவினர், ஒருங்கிணைந்த ஆயுர்வேத சிகிச்சைப் பிரிவை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆய் வின் அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டு மிக விரை வில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த ஆயூர்வேத சிகிச்சைப்பிரிவு மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.