- கீவ் நகரில் உள்ள ஆயுத தொழிற்சாலை உட்பட 16 முக்கிய இலக்குகளை தாக்கி அழித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
- உக்ரைனில் உயிரி ஆயுத பரிசோதனை கூடங்களை நிறுவுவதில் அமெரிக்காவுக்கு ஜெர்மனியும் உதவி செய்துள்ளது என ரஷ்ய வெளியுறவு செய்தி தொடர்பாளர் மரியா சகோரவா பகீர் குற்றச்சாட்டு வெளிப்படுத்தியுள்ளார்.
- புடினை எரிச்சலூட்டவும் ரஷ்யாவின் எண்ணெய் தேவை இல்லை என்பதை வெளிப்படுத்தவும் ஜெர்மானிய மக்கள் சைக்கிளை பயன்படுத்த வேண்டும் என ஜெர்மனியின் உதவி ஜனாதிபதி ராபர்ட் ஹெபக் தெரிவித்துள்ளார்.
- அமெரிக்காவின் நிர்ப்பந்தம் காரணமாகவே ரஷ்யாவின் எண்ணெயை பிரான்ஸ் வாங்கவில்லை எனவும் அதனால் ஏற்பட்டுள்ள இழப்பை அமெரிக்கா ஈடுகட்ட வேண்டும் எனவும் மக்ரானுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மேரி லெ பென் கோரியுள்ளார்.
- மரியபோல் நகரை கிட்டத்தட்ட ரஷ்ய படைகள் கைப்பற்றிவிட்டன. இதனை தொடர்ந்து கட்டிடங்களின் அடித்தளத்தில் பதுங்கியிருந்த மக்கள் வெளிவர தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு உணவு பொருட்களும் ஏனைய உதவிகளையும் ரஷ்ய படைகள் செய்கின்றன.
- ஸ்பெயினின் மிகப்பெரிய விடுதியான ஆர்.ஐ.யூ. எனும் நிறுவனம் ரஷ்ய மக்களுக்கு அறைகள் மற்றும் உணவை தருவதில்லை என அறிவித்துள்ளது. இப்படி பல ஓட்டல்கள் ரஷ்யர்களுக்கு எதிராக அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
- அமெரிக்காவின் கடும் மிரட்டல் காரணமாகவே செர்பியா ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் வாக்களித்தது என அந்த நாட்டு ஜனாதிபதி கூறினார். செர்பிய அரசின் ரஷ்ய எதிர்ப்பு நிலையை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் பெல்கிரேடில் பேரணி நடத்தினர்.
- ரஷ்யாவில் யூ டியூப் தனது சேவையை நிறுத்தியுள்ளது. இதற்கு மாற்றாக “ருடியூப்” எனும் சமூக ஊடகத்தை ரஷ்யா தொடங்கியுள்ளது. இதனையே ரஷ்ய மக்கள் பயன்படுத்துகின்றனர்.