states

தீக்கதிர் விரைவு செய்திகள்

இன்று ஒன்றிய அமைச்சரவை கூட்டம்

புதுதில்லி, செப். 12 - நாடாளுமன்ற சிறப்பு  கூட்டத்தொடர் செப். 18  முதல் 20 வரை நடைபெற வுள்ள நிலையில், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறி த்து விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.  5  மாநில தேர்தல் மற்றும் மக்க ளவை தேர்தல் வருவதை யொட்டி பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்பட லாம் என தகவல் வெளியாகி யுள்ளது.

கேரளா: விரல் நுனியில் அரசு சேவைகள் நவ. 1 முதல் கே ஸ்மார்ட் 

திருவனந்தபுரம், செப்.12- கேரளத்தின் முதன்மைத் திட்டமான கே-ஸ்மார்ட், கேர ளம் பிறந்த நாளான நவம்பர் 1ஆம் தேதி தொடங்கப்படும். கொச்சியில் நடைபெறும் விழா வில் முதல்வர் பினராயி விஜ யன் இந்த திட்டத்தை நாட்டு மக்க ளுக்கு அர்ப்பணிக்கிறார். இதன் மூலம், அரசு சேவைகளை மக்கள் விரல் நுனியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற இலக்கு நனவாகும். கே-ஸ்மார்ட் அனைத்து அரசு சேவைகளையும் மேலா ண்மை நிர்வாக சீர்திருத்தம் மற்றும் மாற்றத்திற்கான கேர ளம் தீர்வு மூலம் வழங்குகிறது. ‘மகிழ்ச்சியான குடிமக்களும் பணியாளர்களும்’ என்பது கே -  ஸ்மார்ட் முழக்கமாகும். உல கில் எங்கிருந்தும் டிஜிட்டல்  முறையில் விண்ணப்பங் களைச் சமர்ப்பிக்கவும் சான்றி தழ்களைப் பெறவும் முடியும். தகவல் கேரளா மிஷனால் உருவாக்கப்பட்ட சுமார் முப்பது மென்பொருள் பயன்பாடுகள் ஜனவரி முதல் சோதிக்கப்படு கின்றன. முதல் கட்டத்தில், சேவை பத்து தொகுதிகளில் கிடைக்கும். வர்த்தகம் மற்றும் வணிக உரிமங்கள், சொத்து வரி, பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்தல், மேம்பட்ட நிதி சேவைகள், மனித வள மேலா ண்மை, கட்டிட கட்டுமான திட்ட அனுமதி போன்றவை தொடங் கப்படும். இவை மொபைல் போன் மூலம் கிடைக்கும். ஊழி யர்கள் அலுவலகப் பணிகளை மொபைல் போன் மூலம் செய்ய லாம். சேவை மட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் வருவதையும் தடுக்க முடியும்.

விண்ணப்பம் இல்லாமல் சான்றிதழ்

விண்ணப்பிக்காமலேயே குடிமகனுக்குத் தேவையான சான்றிதழ்களைப் பெறுவதற் கான இலக்கை அடைய கே- ஸ்மார்ட் உதவும் என்று நம்பப் படுகிறது. குடிமகனின்  வாழ்க் கையின் ஒவ்வொரு கட்டத்தி லும் தேவையான அரசு சான்றி தழ்களை தானாகவே தயார் செய்யும். தேவைக்கேற்ப பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஒன்றிய பாஜக அரசின் அழுத்தமில்லாமல் நடைபெற்றதா?

இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருப்பவர் இகோர் ஸ்டிமேக். குரோஷியா நாட்டவரான இவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். இவருக்கு இந்திய ஜோதிடம் பற்றி அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  ஆனால்  பயிற்சியாளர் இகோர் ஸ்டிமேக் ஒவ்வொரு போட்டித் தொடங்கும் முன்பும் ஜோதிடரைத் தொடர்பு கொண்டு அணி வீரர்களை மைதானத்தில் களமிறக்கியுள்ளார்.  இந்திய கால்பந்து சம்மேளனத்தின் மூத்த நிர்வாகி ஒருவரின்  அழுத்தத்தால் ஜோதிடர் மூலம் வீரர்கள் தேர்வு என்று தகவல் வெளியாகியதை உற்றுநோக்கினால் ஒன்றிய பாஜக அரசின் விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு இந்த  விவகாரம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அழுத்தத் தின் காரணமாகவே இகோர் ஸ்டிமேக் ஜோதிட முறையை ஆடும்  லெவன் தேர்வுக்கு ஒத்துழைத்துள்ளார் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது. 2014இல் மோடி தலைமையிலான பாஜக   ஆட்சிக்கு வந்ததிலிருந்து இஸ்ரோ  வெற்றி முதல் ராணுவ பாது காப்பு வாகனங்களுக்கு எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்யும் அளவிற்கு பல்வேறு மதம் சார்ந்த மூட நம்பிக்கை நிகழ்வுகளை அரங்கேற்றி வருகிறது.  இந்த வரிசையில் ஜோதிடம் மூலம் இந்திய கால்பந்து அணி  தேர்வு செய்து இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் பாஜக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள  ஒன்றிய விளை யாட்டுத்துறை அமைச்சகத்தின் அழுத்தமில்லாமல் இந்த சம்பவம் அரங்கேற வாய்ப்பில்லை என்பது நிரூபணம் ஆகும் அளவிற்கு போட்டுடைக்கப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு  இன்று முதல் டிக்கெட்

பொங்கலையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்வோர் புதன்கிழமை (செப்.13) முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்  பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு  ரயில்வே தெரிவித்துள்ளது. செப்டம்பர் 13 முன்பதிவு செய்வோர்  ஜனவரி 11 அன்று பயணம் செய்து கொள் ளலாம். செப்டம்பர் 14 ஆம் தேதி முன் பதிவு செய்வோர் ஜனவரி 12 ஆம் தேதி  பயணம் செய்து கொள்ளலாம். செப்டம்  பர் 15 ஆம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 13 ஆம் தேதி பயணம் செய்து  கொள்ளலாம். செப்டம்பர் 16 ஆம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 14ம் தேதி  பயணம் செய்து கொள்ளலாம். செப்டம்பர் 17 ஆம் தேதி முன்பதிவு  செய்வோர் ஜனவரி 15 ஆம் தேதி பய ணம் செய்து கொள்ளலாம். செப்டம்பர் 18 ஆம் தேதி முன்பதிவு செய்வோர் ஜன வரி 16 ஆம் தேதி பயணம் செய்து கொள்ள லாம். செப்டம்பர் 19 ஆம் தேதி முன்  பதிவு செய்வோர், ஜனவரி 17 ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சந்திரபாபு நாயுடுவின் மனு நிராகரிப்பு

ஆந்திர மாநில முன்னாள் முதல்வ ரும், தெலுங்கு தேசக் கட்சித்  தலைவருமான சந்திரபாபு நாயுடு தான் ஆட்சி செய்த காலத்தில் ரூ. 371 கோடி முறைகேடு செய்ததாக தொட ரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமகேந்திரவர்மம் மத்திய சிறை யில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலை யில், தன்னை சிறைக்கு பதில் வீட்டுக்காவ லில் வைக்கக்கோரி சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுவை விஜயவாடா நீதி மன்றம் நிராகரித்துள்ளது.

மணிப்பூரில் மேலும் 3 பேர் சுட்டுக்கொலை

பாஜகவின் வகுப்புவாத அரசி யலால் வடகிழக்கு மாநி லங்களில் ஒன்றான மணிப்  பூர் கடந்த 5 மாத காலமாக கலவர பூமி யாக காட்சி அளிக்கிறது. மணிப்பூர் வன்முறைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ (இதுவரை 180யை தாண்டியுள்ளது) நெருங்கியுள்ள நிலையில், செவ்வாயன்று அதி காலை மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் குக்கி-ஸோ சமூ கத்தைச் சேர்ந்த மூன்று பழங்குடியின மக்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல் லப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்  படுத்தியுள்ளது. இம்பால் மேற்கு மற்றும் காங்போக்பி மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள இரெங் மற்றும் கரம் பகுதிகளுக்கு இடையே உள்ள கிராம மக்கள் மீது  வாகனத்தில் வந்து சிலர் தாக்குதல்  நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்த  பழங்குடியின மக்கள் அதிகாரிகளி டம் தெரிவித்துள்ளனர்.  ஒரே வாரத்தில் 2-வது முறை இம்பால் பிராந்திய பகுதியான பல்லேலில் கடந்த வெள்ளியன்று துணை ராணுவப்படைக்கும் ஆயுதம் ஏந்திய கும்பலுக்கும் இடையில் நடை பெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பேர்  உயிரிழந்தனர். 50 பேர் காயம் அடைந்த னர். ஒரே வாரத்தில் அடுத்தடுத்த 2 சம்ப வங்களால் 6 பேர் உயிரிழந்த சம்ப வத்தால் மணிப்பூரில் மீண்டும் பதற்ற மான சூழல் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் வன்முறை பதற்றத்திற்கு இடையே  மணிப்பூர் மாநிலத்தின் உக்ருல் மாவட்டப் பகுதியில் திங்களன்று நள்ளி ரவு 5.1 ரிக்டர் அளவில் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத் தால் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்த மக்கள் திடுக்கிட்டு தெருவுக்கு  ஓடிவந்தனர். 20 கி.மீ. ஆழத்தை மைய மாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக  புவியியல் ஆய்வு மையம் தெரிவித் தது.

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை,செப்.12- சென்னையில் 3 ஐபிஎஸ் அதிகாரி களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் முதன்மைச் செய லாளர் பி.அமுதா பிறப்பித்துள்ள உத்தரவு, “பெருநகர சென்னை கிழக்கு  மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் ஐபிஎஸ் அதிகாரி திஷா மிட்டல், கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். தாம்பரம் காவல் ஆணையரகத் தின் பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு துணை ஆணையரான ஐபிஎஸ் அதி காரி தீபா சத்யன் கட்டாய காத்திருப் போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள் ளார். அறிவுசார் சொத்துரிமை அமலாக் கப்பிரிவு கண்காணிப்பாளரான ஐபிஎஸ் அதிகாரி ஆதர்ஷ் பச்சேரா, திருநெல்வேலி கிழக்கு சரக இணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

ரூ.25 கோடி மதிப்பு நிலம் அபகரிப்பு: நடிகை கவுதமி புகார்

சென்னை, செப். 12- ரூ.25 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக கட்டுமான அதிபர் மீது நடிகை கவுதமி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். நடிகை கவுதமி சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: 125-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்களில் நடித்துள்ளேன். கடந்த 2004 ஆம் ஆண்டு எனது மகளுக்கு 4 வயதாக இருக்கும்போது புற்று நோயால் பாதிக்கப்பட்டேன். நான் சினிமாவில் 17 வயது முதல் நடித்து  சேமித்த பணத்தின் மூலம் திருபெரும் புதூரில் 46 ஏக்கர் நிலம் வாங்கினேன். தற்போது இந்த இடத்தின் மதிப்பு ரூ.25 கோடி. எனது மகளின் பராமரிப்பு செலவு  மற்றும் எனது மருத்துவ சிகிச்சைக்காக  திருபெரும்புதூரில் உள்ள இடத்தை விற்பனை செய்ய முடிவு செய்தேன். இந்த நேரத்தில் கட்டுமான நிறுவன அதிபர் அழகப்பன் என்பவர் தொடர்பு கொண்டு எனக்குச் சொந்தமான நிலத்தை விற்றுத்தருவதற்கு உதவி செய்வதாகக் கூறினார். நான் அவரை முழுமையாக நம்பி னேன். எனவே எனது நிலத்தை விற்பனை செய்து தருவதற்கான அதி காரத்தை (பவர் ஆஃப் அட்டர்னி) அழகப்பனுக்கு வழங்கினேன். அந்த சமயத்தில் என்னிடம் பல்வேறு பத்திரங்களில் கையெழுத்து பெற்றுக் கொண்டார். இந்த பத்திரங்களைத் தவறான வழியில் பயன்படுத்த மாட்டேன் என்று உத்தரவாதம் அளித் தார். அதே வேளையில் எனது கையெ ழுத்தை மோசடியாகப் போட்டும், போலி ஆவணங்களைத் தயாரித்தும் அழகப்பனும், அவரது மனைவி மற்றும்குடும்பத்தினர் எனது இடத்தை அபகரித்து மோசடி செய்துள்ளனர். இதுபற்றி கேட்டால் கொலைமிரட்டல் விடுக்கின்றனர். எனவே, எனக்குச் சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான இடத்தை அபகரித்த அழகப்பன், அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தி னர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது இடத்தை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு புகார் அளித்துள்ளார்.