புதுதில்லி,ஆக.20- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்துக்கு ஒன்றிய அரசு ரூ.200 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது. இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டியது. மழை மற்றும் நிலச் சரிவு காரணமாக இதுவரை ஆயிரக் கணக்கான வீடுகள், அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் அழிந்துள்ளன. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன . வரலாறு காணாத மழை, வெள்ளம், மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவு போன்றவற்றால் மாநிலம் முழுவதும் பேரழிவை சந்தித்து வரும் நிலையில், இமாச்சல பிரதேசம் முழுவதையும் இயற்கை பேரிடர் பாதித்த மாநிலமாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்து க்கு ஒன்றிய அரசு ரூ.200 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் நிவாரண நடவடிக்கை களை மேற்கொள்வதற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.200 கோடி நிதியுதவி அறிவிக்கப் பட்டுள்ளது.