சென்னை, ஜூலை 16- அரசு மருத்துவமனைகளில் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளும் பெண் இறந்துவிட்டால், அவரின் குடும்பத்திற்கு வழங்க கூடிய இழப்பீடு 2 லட்சம் ரூபாயிலிருந்து 4 லட்சமாக உயர்த்தி உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பெரிய கரும்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த கனி மொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதில், அரசு மருத்துவமனையில் கடந்த 2018 ஆம் ஆண்டு குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டேன். குடும்பக் கட்டுப்பாடு செய்த பின்பும் நான் கர்ப்பமானதால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இது குறித்து அரசு மருத்துவமனைக்கு சென்று கேட்டதில் அங்கு உரிய பதில் தெரிவிக்கப்படவில்லை. வேறு வழி இல்லாமல் மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டேன். குடும்பக் கட்டுப் பாடு தோல்வி அடைந்ததால் தனக்கு இழப்பீடாக 50 லட்சம் ரூபாய் தர உத்தரவிட வேண்டும் என்று கூறியி ருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக் குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட மருத்துவ துறை அதி காரி உள்ளிட்டவருக்கு உத்தர விட்டிருந்தார். ஆனால் உயர் நீதி மன்றம் உத்தரவிட்டபடியும் எந்த நிவார ணமும் வழங்கப்படவில்லை என்று நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந் தார். இந்த வழக்கு நீதிபதி எம்.தண்ட பாணி முன்பு விசாரணை வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ெஜ.ரவீந்திரன், “குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட பெண் ஒரு வாரத்தில் இறந்துவிட்டால், இழப்பீடு தொகை 2 லட்சம் ரூபாயிலிருந்து, 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு மாத காலத்திற்குள் இறந்தால் 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு என்பதை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி இருப்ப தாகவும், குடும்பக் கட்டுப்பாடு தோல்வி அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு தொகையான 30 ஆயிரம் ரூபாயை 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி உத்தர விட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி எம். தண்டபாணி வழக்கை முடித்து வைத்து, மனுதாரருக்கு வேறு ஏதாவது நிவாரணம் தேவைப்பட்டால் தனியாக வழக்கு தொடரலாம் என்று உத்தரவிட்டார்.