சேலம், ஜூன் 12- அயோத்தியப்பட்டணம் அருகே தனியார் பேருந்து மோதிய விபத்தில் 2 குழந் தைகள் உட்பட 5 பேர் உயிரி ழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூ ரில் இருந்து சேலம் நோக்கி லாரி ஒன்று புதனன்று காலை வந்து கொண்டிருந்தது. வீரா ணம் அடுத்த சுக்கம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே லாரியை திடீ ரென நிறுத்தியதாக கூறப்படு கிறது. இதனால் லாரிக்கு பின்னால் வந்த 2 இருசக்கர வாகனங்களும் நிறுத்தப்பட் டன. அப்போது, ஆச்சாங் குட்டப்பட்டியில் இருந்து சேலம் நோக்கி வந்த தனி யார் பேருந்து இருசக்கர வாகனங்களின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இவ்விபத்தில் பூவனூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சு மணன் என்பவரின் மனைவி வேதவள்ளி (26) உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படு காயமடைந்தவர்களை அரு கிலிருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவ மனைக்கும், அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக் கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இவ்விபத்தில் படுகாயமடைந்து அரசு மருத் துவமனைக்கு கொண்டு வரப்பட்ட குழந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தது. அதேபோல், தனி யார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேத வள்ளியின் தங்கை பவித்ரா வின் ஒன்றரை வயது பெண் குழந்தை ரித்திகாவும் சிகி ச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த கோர விபத்தில் படு காயமடைந்த லதா (51), தனம் (48), கல்பனா (28), காயத்ரி சூரியகலா (4), கிருத்திக் (3), ஜெகஸ்ரீ (7), பெரியசாமி (54), பானுப்ரியா (35) ஆகிய 8 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். இதுதொடர்பாக வீரா ணம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர். தலா ரூ.2 லட்சம் நிவாரணம் இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங் கல் தெரிவித்துள்ள தமிழ் நாடு முதல்வர் மு.க. ஸ்டா லின், அவர்களின் குடும்பத்தி னருக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர் களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.